அதிகாலை

By pastorgodson

தூயராம் எங்கள் கடவுளே
துயில் எழுந்த நாங்கள்
துதிக்கிறோம் உமயே

கடந்த இரவிலே
கண்ணயராது
கருத்தாய் காத்தவரே – இந்த
அதிகாலை நேரத்தில் உம்மை
தியானித்திருப்போம்

இந்த நாளினை
இனிதாக்கியவரே
இன்றைய பணிகளிலே – உமது
சொற்படி வாழவும் வாழ்த்தவும்
இறையாசியருளும்

நாளைய பொழுதின்
நாய(கனே)கியே
நிதமும் நன்றியுடன் – நின்னையே
நினைத்துருகும் என் நெஞ்சிலே
மாறா நின் கருணைப்பொழியும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

குறிச்சொற்கள்:

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்