ஆதி மன்றாட்டு

By pastorgodson

அன்பின் திருவுருவாம் கடவுளே
உமது அன்பின் ஒளியை
பிறரிடம் கண்டு கொள்ள
எங்கள் கண்களை திறவும்

கிருபை நிறை இயேசுவே
உமது கிருபைக் கடலை
தோழமையோடு பகர
எங்கள் இதயத்தை திறவும்

ஒருமை பகரும் தூய ஆவியே
உமது ஒப்பிலா ஒருமையை
பாரிலே பறைசாற்ற
பகரும் நெஞ்சைத் தாரும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

குறிச்சொற்கள்:

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்