<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நெடும் பனை</title>
	<atom:link href="http://pastorgodson.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://pastorgodson.wordpress.com</link>
	<description>மன்றாட்டுடன் கூடிய இறைப்பணி</description>
	<lastBuildDate>Thu, 10 Dec 2009 07:11:10 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='pastorgodson.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/35541be7d54380bde7823b50d6fed8d7?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>நெடும் பனை</title>
		<link>http://pastorgodson.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://pastorgodson.wordpress.com/osd.xml" title="நெடும் பனை" />
		<item>
		<title>வருகை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/12/10/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/12/10/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/#comments</comments>
		<pubDate>Thu, 10 Dec 2009 07:11:10 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அடையாளங்கள்]]></category>
		<category><![CDATA[இரண்டாம் வருகை]]></category>
		<category><![CDATA[உண்மை]]></category>
		<category><![CDATA[தளராமனம்]]></category>
		<category><![CDATA[நடுவர்]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[நேர்மை]]></category>
		<category><![CDATA[பொறுமை]]></category>
		<category><![CDATA[மரியாள்]]></category>
		<category><![CDATA[மாரனாத்தா]]></category>
		<category><![CDATA[யோவான்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=298</guid>
		<description><![CDATA[கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பாலனாம் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினரை வாழ்த்துகிறேன்!
நாம் பண்டிகைக்காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் திருச்சபையின் கால அட்டவணையைக் குறித்த ஒரு அறிமுகம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுவதால் உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று ஆசிக்கின்றேன்.
மாதங்களைக் கணக்கிடும் நமக்கு டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதியில் வருவதாயிருந்தாலும் கிறிஸ்தவ காலண்டரின்படி இதுவே நமக்கு துவக்கமாகும். &#8220;வருகை&#8221;  என்று பொருள்படும் &#8220;அட்வெந்து&#8221; காலத்தை திருச்சபை சுமார் 4ஆம் நூற்றாண்டுமுதல் அனுசரித்து வருவதை பதிவுகளில் காணமுடிகிறது.
இயேசு பாலனாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=298&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பாலனாம் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினரை வாழ்த்துகிறேன்!</p>
<p>நாம் பண்டிகைக்காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் திருச்சபையின் கால அட்டவணையைக் குறித்த ஒரு அறிமுகம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுவதால் உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று ஆசிக்கின்றேன்.</p>
<p>மாதங்களைக் கணக்கிடும் நமக்கு டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதியில் வருவதாயிருந்தாலும் கிறிஸ்தவ காலண்டரின்படி இதுவே நமக்கு துவக்கமாகும். &#8220;வருகை&#8221;  என்று பொருள்படும் &#8220;அட்வெந்து&#8221; காலத்தை திருச்சபை சுமார் 4ஆம் நூற்றாண்டுமுதல் அனுசரித்து வருவதை பதிவுகளில் காணமுடிகிறது.</p>
<p>இயேசு பாலனாக அவதரித்துவிட்டார் என உறுதிபட நம்பும் நமக்கு அவரின் வருகை &#8220;இரண்டாம் வருகையாக&#8221; காணப்படுகிறது. இந்நாட்களில் அவரின் வருகைக்காக நம்மை ஆயத்தப் படுத்துவதும், வருகையை எதிர்பார்த்திருப்பதும் பிறரை இதற்கென ஆயத்தப்படுத்துவதும் நமது தலையாயக் கடமை.</p>
<p>வருகையை எதிர்நேக்கி பலர் &#8220;காத்திருக்கும்&#8221; இந்நாட்களில், காத்திருத்தல் எனும் வார்த்தை நம்மைச் சோர்வுறச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. காத்திருப்பதை விட எதிர்நோக்கி இருப்பது மிகவும் நன்மை பயப்பதல்லவா? வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினருக்கு இந்த நாள் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது எனும் நற்செய்தி அறிவிக்கும் நாள் என உங்களுக்கு நான் உறுதிபட கூறுகிறேன்.</p>
<p>பல வேளைகளில் கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது என நாட்களைக் குறித்து பல அடையாளங்களை காட்டி மக்களை திசை திருப்பும்போது இயேசுவின் வாய்மொழிக்கூற்றையே நான் சார்ந்திருக்க விளைகிறேன். <strong>&#8220;இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளனுக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். எனெனில் நீங்கள் நினையாத நெரத்தில் மானிட மகன் வருவார்&#8221; (மத்தேயு 24: 43 &amp; 44)</strong></p>
<p>ஒருமுறை நான் நீர்நிலைகளில் உள்ள  தாவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபொழுது மீன்கொத்தியை ஒத்த ஒரு பறவை கரும்புள்ளிகளுடன் குளத்தின் மேலே பறந்துகொண்டிருந்தது. அது காற்றில் தன் சிறகை அசைத்து நின்ற இடத்திலேயே தன்னை நிறுத்தியிருந்தது ஆச்சரியமாக எனக்குத் தோன்றியது. திடீரென ஒரு கர்ணம் அடித்து நேர்கோட்டில் மேலிருந்து கீழாக தனது அலகை அம்பாக்கி சீறியது. தனது இரையைக் கவ்வியபடி அருகிலிருத்த மரத்திற்கு சென்று அமர்ந்தது.</p>
<p>தனது நிழலை வைத்து மீன்களிடம் மாயம் ஏதும் செய்கிறதா இந்த பறவை? மீனை தண்ணீரில் சந்திப்பதற்கு ஆயத்தப்படும் பறவையைப் போல ஏமாறக் காத்திருக்கிறதா மீன்கள்? தண்ணீரில் வாழும் மீன்கள் காற்றிலிருந்து வெளிப்படும் பறவையிடம் ஏமாறும் கணம் ஏது?</p>
<p>கிறிஸ்துவின் அன்பில் வாழும் நாமும் ஒருவேளை அவரின் அன்பிற்கு அப்பாற்பட்ட ஆளுமைகளால் ஏமாற்றப்படுவோமா? பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் வருகையை குறிப்பிட்டு பலர் நம்மை ஏமாற்றியபடி இருப்பதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.</p>
<p>தூய பவுல் அடிகளார் <strong>&#8220;மாரனாத்தா&#8221;</strong> எனும் அரமேய பதத்தை 1 கொரிந்தியர் 16: 22ல் குறிப்பிடுகிறார். யூதனான பவுல் எபிரேய மொழியில் தனது பிரதியை எழுதாவிட்டாலும் தான் எழுதிய கிரேக்க மொழியில் கூட இந்த பதத்தை பதிவு செய்யாதது சற்று ஆச்சரியமாய் இருக்கிறது. கல்விமானாய் காணப்பட்ட பவுல் <strong>&#8220;மாரனாத்தா&#8221;</strong> எனும் வரிவடிவமற்ற அரமேய வார்த்தையை குறிப்புணர்த்தும்பொருட்டு இங்கே உபயோகிக்கிறார்.  <strong> &#8220;ஆண்டவரே வருக&#8221;</strong> எனும் வார்த்தைக்கு இணையாக <strong>&#8220;ஆண்டவர் நம்முடன் இருக்கிறார்&#8221; </strong>என்றும் இருபொருள் பெறும் இந்த வார்த்தை ஆழ்ந்த அர்த்தம் நிறைந்தது.</p>
<p>நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் நிறைக்கும் ஒரு வார்த்தை இந்த இடத்தில் நிரப்பப்பட்டது ஒரு ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகவே என நாம் கருத இடமுள்ளது. அந்த புரிதல் நோக்கி நாம் பயணம் செய்தால்&#8230;</p>
<p>திருவெளிப்பாடுகள் 22: 20ல் <strong>&#8220;ஆம், விரைவாக வருகிறேன்&#8221; என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.</strong> விரைவாக வரும் இயேசுவை எதிர்நோக்கியிருக்கும் ஒரு உறுதியை நாம் இப்பகுதியில் கண்டுகொள்ளலாம்.</p>
<p>யாக்கோபு எழுதிய திருமுகம் 5: 8ல் <strong>நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது. </strong>என நாம் வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து வரும் வசனம் இன்னுமாக அவரது வருகையை அருகில் காண்பிக்கின்றது. <strong>சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகதவாறு ஒருவார் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.</strong></p>
<p>பொறுமை, தளராமனம், மற்றவருக்கு எதிராய் முறையிடாத தன்மை போன்ற உயர்ந்த விழுமியங்களை இப்பகுதியில் நாம் இறைவனின் வருகையை ஒட்டியவாறு காண முடிகிறது.</p>
<p>வருகை என்பது தூரமான எதிர்காலத்திற்கான ஒன்றல்ல, மாறாக அது  நமது செயல்களின் தீர்ப்பை வழங்க நமது அருகிலேயே காத்திருக்கும் மனுக்குமாரனை தரிசிக்கும் உன்னதமான ஒரு தருணம் எனும் உண்மையை இப்பகுதி நமக்கு நன்கு விளக்குகிறது.</p>
<p>கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இறைவாக்கினராம் ஏசாயா, இறைவனின் நீதியை நமக்கு தெளிவுறக் காண்பிக்கிறார். எதிர்நோக்கியிருக்கும் அந்த வருகையை <strong>&#8220;நேர்மை அவருக்கு அரைக்கச்சை, உண்மை அவருக்கு இடைக்கச்சை&#8221;</strong> என ஏசாயா கண்டுகொள்ளுகிறார். அவரது வருகை நீதி செய்வதாக இருக்கும் என்பதை அறியும் ஒவ்வொரு கணமும் நாம் அனைவரும் நீதிசெய்ய கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.</p>
<p>அடையாளங்களைத் தேடுவதை விட ஆயத்தப்படுதல் மிகவும் இன்றியமையாதது. வருகையோடு தொடர்புடைய திருவிவிலியம் காண்பிக்கும் இரண்டு நபர்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த விளைகின்றேன்.</p>
<p><strong>யோவான்:</strong>  இயேசுவின் சமகாலத்தவன். வருகையை முன்னறிவிப்பவனாக காணப்படுகிறான், எனினும் வருகையின் காலத்தில் வாழ்ந்தவன்.  &#8220;ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்&#8221; எனும் இறை வாக்கினரின் கூற்றிற்குப் பாத்திரமாய் விளங்கியவர்.</p>
<p><strong>மரியாள்:</strong>  இயேசுவின் தாயார். வருகையை எதிர்நோக்கியிருப்பவர். பொறுமையோடும் நம்பிக்கையோடும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியிருந்தவர். பெண்களுள் ஆசி பெற்றவராக காணப்பட்ட மரியாள் வருகையின் காரணியானது எத்துணை பாக்கியமானது?</p>
<p>மேற்கூரிய இருவரின் வாழ்வையும் நாம் ஆழ்ந்து படித்தால் ஆண்டவரின் வருகை நமக்கு மிகவும் அருகிலிருக்கும். அவ்வாறே நாம் அதற்கு எவ்விதம் ஆயத்தமாகவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும்.</p>
<p>குழந்தையாய் அவதரித்த மனுக்குமாரன் நம்மை அரவணைத்து நீதியுடன் நம்மை தமது வருகையில் சேர்த்துக்கொள்ள பாத்திரவான்களாய் இருப்போம். கர்த்தரின் அன்பு என்றென்றும் நம்முடன் தங்கியிருப்பதாக.</p>
<p>(6.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மீரரோடு மெதடிஸ்ட் திருச்சபையில் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்.</p>
<p>தொடர்புகொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>Mobile 09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/298/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/298/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/298/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/298/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/298/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/298/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/298/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/298/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/298/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/298/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=298&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/12/10/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தவம் செய்வோம்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/12/04/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/12/04/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 04 Dec 2009 21:05:26 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[நெடும் பயணம்]]></category>
		<category><![CDATA[கெனரி குகைகள்]]></category>
		<category><![CDATA[ஜெபம்]]></category>
		<category><![CDATA[தவம்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=295</guid>
		<description><![CDATA[இன்று மதியம் பெற்ற ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு ஒரு மிகப்பெரிய தரிசனத்தை அளிக்க இருக்கிறது என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குருத்தோலை கொளுக்கட்டை என்ற பதிவை ஜெயமோகன் அண்ணனின் வலைத்தளத்தில் படித்துவிட்டு என்னை அழைத்தாக மீர கண்ணன் கூறினார்கள். பல நாள் பழகிய நண்பர்கள் போலவே பேசினார்கள். பல இடங்கள், பிரபலங்களை கடந்துவந்த ஒரு ஆளுமை. டாக்குமென்ட்ரி தயாரித்துகொண்டிருப்பதாக கூறினார்கள்.
சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் போகலாம் வருகிறீர்களா அங்கே ஒரு குகை இருக்கிறது என்றார்கள். எங்கே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=295&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>இன்று மதியம் பெற்ற ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு ஒரு மிகப்பெரிய தரிசனத்தை அளிக்க இருக்கிறது என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குருத்தோலை கொளுக்கட்டை என்ற பதிவை ஜெயமோகன் அண்ணனின் வலைத்தளத்தில் படித்துவிட்டு என்னை அழைத்தாக மீர கண்ணன் கூறினார்கள். பல நாள் பழகிய நண்பர்கள் போலவே பேசினார்கள். பல இடங்கள், பிரபலங்களை கடந்துவந்த ஒரு ஆளுமை. டாக்குமென்ட்ரி தயாரித்துகொண்டிருப்பதாக கூறினார்கள்.</p>
<p>சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் போகலாம் வருகிறீர்களா அங்கே ஒரு குகை இருக்கிறது என்றார்கள். எங்கே இருக்கிறீர்கள் என்றேன், காந்திவலி என்றார்கள். மீரா ரோட்டிற்கும் காந்திவலிக்கும் இடைப்பட்ட தூரம்தான், போரிவிலியில் வருகிறது.</p>
<p>இரண்டு வருடங்களுக்கு முன்பதாக நான் ஸ்னேக சாகர் மூலமாக தெருவோரக் குழந்தைகளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த போது இயற்கை சார்ந்த அறிமுகம் இந்தக் குழந்தைகள் பெறுவது அவசியம் என்று உணர்ந்து ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தேன். பி என் எச் எஸ் குழந்தைகளுக்கு நடத்தும் இயற்கை ஒரு அறிமுகம் என்ற நிகழ்வில் நானும் ஒரு குழந்தையாகவே கலந்துகொண்டேன்.</p>
<p>இலை, மரம், சத்தம், வண்டு, வண்ணத்துப்பூச்சி, மரங்களில் காணப்பட்ட சிறுத்தையின் நகக் குறிகள் என பலவற்றை காண்பித்து பொறுமையாக விளக்கினார்கள். இரண்டு சிடி திரையிட்டார்கள். ஒன்று சிறு பூச்சிகள் மற்றும் பிராணிகளைப் பற்றியது மற்றொன்று மும்பை காணும் மாசுகளைப் பற்றியது. சிருவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டர்கள். குறிப்புகளை எடுத்தனர். கண்டிப்பாக இது ஒரு விதையாக அவர்கள் மனதில் முளைக்கவிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.</p>
<p>இந்த நிகழ்விற்குப் பிறகு நான் சஞ்சய் காந்தி நேஷனல் பார்க்கிற்கு போகவில்லை. எனது பணி திருச்சபையில் துவங்கிவிட்டது. ஆகையினாலே இந்த அழைப்பை என்னால் உதாசீனம் பண்ண இயலவில்லை. எனக்கு 10 நிமிடத்திற்கு முன்பதாகவே வந்து காத்திருந்தார்கள். நான் எனது MSL 8537 புல்லட்டில் சென்றிருந்தேன். அங்கே காத்திருந்த பேருந்தில் ஏறினோம். சுமார் அரைமணி நேரத்தில் வண்டியில் 11 பேர் அமர வண்டி புறப்பட்டது.</p>
<p>&#8216;கெனரி குகைகளை&#8217; நாங்கள் எட்டியபோது, குகை குறித்த எனது அனுமானங்களை அப்படியே மாற்றிவிட்டது அந்த இடம். மிகவும் நேர்த்தியாக கொத்தப்பட்ட பாறைகள். குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்டமான தங்குமிடங்கள். தவத்தின் வலிமையால் உருப்பெற்ற ஒரு இடம் என்பதே அதன் முக்கியத்துவமாக நான் கண்டுகொண்டேன். போர் எதும் இல்லை, மனதை அறிந்துகொள்ள இத்துணை வலிமையான கோட்டையை ஒத்த வாழ்விடங்கள். ஆயிரமாண்டுகளுக்குமேல் இந்த இடம் உருவாக்கிய ஆன்மீக வீச்சு சற்றும் குறையாமல் இருக்கிறது.</p>
<p> அப்பு, மீராவின் மகன் அந்த இடத்தை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்தான். ஒரு குகையின் விதானத்தில் வரையப்பட்ட படத்தை அவன் காண்பித்திருக்காவிட்டால் தவற விட்டிருப்போம். 130 குகைகள் இருக்கின்றன என்று மீரா சொன்னார்கள். ஒரு சில தான் பார்த்திருப்போம், வழியில் ஒரு தியான மண்டப வாசலில் சிகரெட் துண்டு ஒன்றைக் கண்டு தலையிலடித்துக்கொண்டோம். அதை மீரா பொறிக்கிகொள்ள நான் பத்திரப்படுத்திக்கொண்டேன். குடிபோதையுடன் வருபவர்கள், சிகரட் பிடிப்பவர்கள் மற்றும் மாசுபடுத்துபவர்கள் என்று ஒருசிலர் வந்தபடியேதான் இருக்கிறார்கள்.</p>
<p>நல்ல அதிர்வுகள் நிறைந்த ஒரு குகையில் வந்தபோது மீராவை ஓம் சொல்லச் சொன்னேன். ஓரிருமுறை அவர்கள் சொன்னதைத் தொடர்ந்து அப்பு ஓம் சொல்லத்தொடங்கினான். இரண்டுமுறை விட்டு நானும் அதே சுதியில் ஹம் செய்யத்துடங்கினேன். அருமையான ஹார்மனி. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது. மீரா தியானம் செய்யவேண்டும் என்றார்கள் அமைதியாக இருந்தோம். தியான நிலையில் அவர்கள் அமர்ந்திருக்க நான் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.</p>
<p>சவக்கடல் அருகிலுள்ள கும்ரன் குகைகள் என் கண்களுக்கு வந்து போயின. பொதுமக்களிலிருந்து தூரமாயிருந்தாலும் தாங்கள் இருக்குமிடாத்திலிருந்து சலிக்காமல் எழுதிகுவித்து மானுட வாழ்வின் மேன்மையை பறைசாற்றிய துறவிகள் கண்ணில் வந்து போனார்கள். நிர்வாணமாக தங்கள் அன்றாட கடமைகள் தொழுகைகள் செய்துகொண்டிருந்த பிக்குகள் கண்ணில் தென்பட்டார்கள். உடல் சிலிர்க்க கண் விழித்தேன். இதற்கு இணையான தியான அனுபவம் எனக்கு ஏற்பட்டது இல்லை.</p>
<p>சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பரமஹம்ஸ நித்யானந்தரின் &#8216;ஜீவன் முக்தி&#8217; என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்கள். திரும்பும் நேரம் என்பதை அப்பு நினைப்பூட்டினான். ஆத்மாவை வருடிச் செல்லும் காற்று. உடலை கழுவி விடும் தூய ஒளி. பசுமையான மரங்களின் மென்மையான மடி தரும் சுகம். துறவிகள் விட்டுச்சென்ற ஒரு வாழும் ஆய்வுக்கூடம். யாவற்றையும் விட்டு இறங்க மனம் ஒப்பவில்லை. மும்பைவிட்டு பிரியாமல் இருப்பதற்கு இப்போது எனக்குள்ள ஒரே காரணம் கெனரி குகைகளும் அதைச்சார்ந்த கடுகளும்தான்.</p>
<p>திரும்பி வரும் வழியில் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டோம். குரங்குகள் சூழ்ந்துகொள்ள மீரா அவர்களுடையதை கொடுத்துவிட்டார்கள். எங்களோடு இன்னும் ஒரு நபரை சேர்த்துக்கொண்டு நடந்தே ஆறு கிலோமீட்டர் இறங்க முடிவு செய்தோம். வழியில் பறவைகளும் அதன் ஒலிகளும் கேட்டபடி வந்தோம். கூட வந்த நபர் புகைப்படம் எடுத்துகொண்டே வந்தார். ஒரு பாம்புச்சட்டை கண்டோம், ஹனுமன் லங்கூர் தாவியபடி கடந்து சென்றன.</p>
<p>நாங்கள் வந்துசென்றோம் என்பதன் அடையாளமாக பிலாஸ்டிக் உறைகளை வழிநெடுக பொறுக்கிக்கொண்டே வந்தோம். மொத்த காட்டிலும் தேடினால் கண்டிப்பாக லாரி லாரியாக அள்ளமுடியும். பனிபொழிய துவங்கியிருந்தது. இருட்டத்துவங்கிவிட்டது.</p>
<p>எட்டுமணிக்கு நான் உபவாச ஜெபத்திற்குச் செல்ல வேண்டும். மீண்டும் சந்திப்போம் கூறி பிரிந்தோம்.</p>
<p>கண்டிப்பாக ஆரனை இங்கு வாரத்திற்கு ஒருமுறையாவது கூட்டிவரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆம் ஜாஸ்மினும் உடன் இருப்பாள்.</p>
<p>அருட்திரு. காட்சன் சாமுவேல்</p>
<p> தொடர்புகொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                          <a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>                                          Mobile: 09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/295/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/295/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/295/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=295&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/12/04/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குருத்தோலை கொளுக்கட்டை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/12/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/12/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 02 Dec 2009 19:56:03 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[நெடும் பனை]]></category>
		<category><![CDATA[இலை]]></category>
		<category><![CDATA[கார்த்திகை]]></category>
		<category><![CDATA[குருத்தோலை]]></category>
		<category><![CDATA[கொளுக்கட்டை]]></category>
		<category><![CDATA[ஜெயமோகன்]]></category>
		<category><![CDATA[தெரளி]]></category>
		<category><![CDATA[பனை ஓலை]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=291</guid>
		<description><![CDATA[ஜெயமோகன் அண்ணன் அவர்களின் தெரளி பதிவைப் பார்த்த்வுடனே இதைப் பதிவு செய்யவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.
நான் சிறுவனாக இருக்கும் போது பெருவிளையில் கார்த்திகை பஜனை நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன். பெருவிளை சி எஸ் ஐ தேவாலயத்தில் உள்ளவர்கள் கூடி ஒன்றாக சென்று ஊறைச் சுற்றி பாடி வருவார்கள். எனது அப்பா அருட்திரு சி சாமுவேல் அவர்கள் தனது வாலிப பிராயத்திலே ஆரம்பித்த ஒன்று இது என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். காலரா பரவியிருந்த சமயம் அது என்றும் குறிப்பிடுவதை நினைவு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=291&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஜெயமோகன் அண்ணன் அவர்களின் தெரளி பதிவைப் பார்த்த்வுடனே இதைப் பதிவு செய்யவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.</p>
<p>நான் சிறுவனாக இருக்கும் போது பெருவிளையில் கார்த்திகை பஜனை நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன். பெருவிளை சி எஸ் ஐ தேவாலயத்தில் உள்ளவர்கள் கூடி ஒன்றாக சென்று ஊறைச் சுற்றி பாடி வருவார்கள். எனது அப்பா அருட்திரு சி சாமுவேல் அவர்கள் தனது வாலிப பிராயத்திலே ஆரம்பித்த ஒன்று இது என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். காலரா பரவியிருந்த சமயம் அது என்றும் குறிப்பிடுவதை நினைவு கூறுகிறேன்.</p>
<p>இந்த பஜனை நேரத்தில் நாங்கள் ஊர் முழுவதும் சுற்றியபடி வரும்போது இந்துக்களுடைய வீட்டில் எல்லாம் விளக்கு கொழுத்தி வைத்திருப்பார்கள். நம்மை வரவேற்கத்தான் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.</p>
<p>மார்த்தாண்டத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஒருநாள் கூடப் படிக்கும் மாணவன் கொளுக்கட்டை கொண்டுவந்து கொடுத்தான். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் இது போன்ற ஒன்று செய்தது இல்லையே என்று எண்ணினேன். வீட்டில் விசாரித்த போது அது இந்துக்களுடைய பண்டம் என்றார்கள். செய்து தர மாட்டோம் என்பதை சொல்லும் வழி அது.</p>
<p>இந்த நேரத்தில் தான் தெரளி இலை கண்ணில் பட்டது. புதிதாக முளைத்த வியாபாரிகள் பலர் இளைக்களை கொத்து கொத்தாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கூட வந்த நண்பன் அத்துதான் தெரளி இலை எனக் குறிப்பிட்டான். பொதுவாக ஸ்கூல் ஆரம்பிக்கும் நாட்களில் இதுபோலவே சொடக்கு செடியையும் கொத்து கொத்தாக வைத்து வித்துக்கொண்டிருப்பார்கள்.</p>
<p>கொளுக்கட்டை எனது வாழ்வில் மறுபடியும் வந்தது நான் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தான். பனையும் அதன் பொருளாதாரமும் என்ற ஒரு சிறிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தபோது, பனை ஓலையில் பிசைந்த மாவை வைத்து அவித்து எடுக்கும் கொளுக்கட்டை மிகவும் சுவையுடனும் நறுமணத்துடனும் இருக்கும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இலக்காக அதன் ஈர்க்கில் பிரியாமல் எடுத்து அதனை V வடிவத்தில் பிரித்து மாவை நிரப்பி ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வேக வைப்பார்கள்.</p>
<p>குருத்தோலையில் இருந்து எழும்பும் மணம் மிகவும் மெல்லியது. யாவரையும் கவரும் தன்மையுடையது. நான் ஒருமுறை மும்பையில் பனையோலை சேகரித்து நான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் காயவிட்டேன். இரவான பொழுது அதை எடுத்து மாடிப்படியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். மறுநாள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த ஒரு பாட்டி, &#8220;நல்ல ஒரு நறு மணம் வீசுதே என்று இன்கே வந்து பார்த்தால் ஓலைகள் கிடக்கிறது, இது இவ்வளவு அருமையான வாசம் வீசும் என்று எனக்கு தெரியாது&#8221; என்றார்கள். ஓலையை எடுத்து வீசுவார்களோ என்ற பயம் நீங்கியதுதான் அப்போதைக்கு எனக்கு பெரிதாக இருந்தது.</p>
<p>நேற்று தாராவி சென்றிருந்த போது வழியெங்கும் பனையோலைகளை விற்றுக்கொண்டிருந்தனர். என்ன ஒரு ஓலை 20 ரூபாய் இருக்குமா என்று விசாரிக்கப்போனால் அரண்டுவிட்டேன். அதிகமில்லை வெறும் 160 ரூபாய் மட்டுமே. கொஞ்சம் பச்சையடித்தது 100 ரூபாய்.  பச்சை ஓலை 60 ரூபாய். தெரளி இலையையே காண முடியவில்லை. அப்பொழுது தான் ஒன்று உறைத்தது தாராவியில் பெரும்பாலும் திருனெல்வேலி மாவட்ட மக்கள் தான் வசிக்கிறார்கள். பனையோடு நெருங்கிய உறவு கொண்ட மக்கள். பனையோலையின் மணமும் ருசியும் அவர்களுக்குத்தான் தெரியும்.</p>
<p>மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பனை அதிகமாக இருக்கிறது. பனை ஏறுபவர்கள் திருநெல்வேலியிலிருந்து வந்து தங்கி கள்ளெடுக்கிறார்கள். மலாட் எனும் இடத்தின் அருகிலுள்ள மட் என்ற பகுதியில் பனை அதிகமாக காணப்படுகிறது.  இங்குள்ள ரிசார்ட்களில் பனைமரம் ஒரு முக்கிய மரமாக கருதப்பட்டு பேணப்பட்டு வருகிறது. யாரும் முறிப்பதில்லை.</p>
<p>இலைகளின் பயன்கள் அளப்பரியது. மருத்துவத்தை தவிர்த்தால் கூட குமரி மாவட்டத்தில் இலைகள் பயன்படும் விதம் குறித்த தனி பதிவே போடுமளவு அவை மாற்று பொருளாதார சக்தியாக அங்கே மறைந்து கிடக்கின்றது.</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பு கொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>mobile: 09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/291/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/291/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/291/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/291/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/291/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/291/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/291/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/291/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/291/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/291/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=291&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/12/02/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தாலாட்டு பாட வா&#8230;</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Fri, 13 Nov 2009 20:25:16 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[ஆரீரரோ]]></category>
		<category><![CDATA[தாலாட்டு]]></category>
		<category><![CDATA[பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பாட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=289</guid>
		<description><![CDATA[கிறிஸ்தவத்திற்கும் தாலாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலான கிறிஸ்மஸ் பாடல்கள் தாலாட்டை முன்னிறுத்தியபடியே இருக்கும். இயேசு பாலனாக பிறந்தபடியால் தாலாட்டின் மெட்டுக்களில் இவ்விதம் பல பாடல்கள் அமைந்துள்ளன.
ஆரனை தூங்கவைப்பதற்காக நான் செல்போனில் இடும் பாட்டும் கிறிஸ்மஸ் பாடல் தான் ஆனால் அது தாலாட்டு அல்ல. தெ ரெபெல் ஜீஸஸ் என்கிற ஜாக்சன் பிரவுனின் பாடலை எனக்கு எனது நண்பரான டாக்டர் விட்னி ஹோவர்த் அறிமுகம் செய்திருந்தார்கள். எனக்கு அது  பிடித்துபோகவே அதை நான் மறுபடியும் மறுபடியுமாக கேட்பதற்காக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=289&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கிறிஸ்தவத்திற்கும் தாலாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலான கிறிஸ்மஸ் பாடல்கள் தாலாட்டை முன்னிறுத்தியபடியே இருக்கும். இயேசு பாலனாக பிறந்தபடியால் தாலாட்டின் மெட்டுக்களில் இவ்விதம் பல பாடல்கள் அமைந்துள்ளன.</p>
<p>ஆரனை தூங்கவைப்பதற்காக நான் செல்போனில் இடும் பாட்டும் கிறிஸ்மஸ் பாடல் தான் ஆனால் அது தாலாட்டு அல்ல. தெ ரெபெல் ஜீஸஸ் என்கிற ஜாக்சன் பிரவுனின் பாடலை எனக்கு எனது நண்பரான டாக்டர் விட்னி ஹோவர்த் அறிமுகம் செய்திருந்தார்கள். எனக்கு அது  பிடித்துபோகவே அதை நான் மறுபடியும் மறுபடியுமாக கேட்பதற்காக அவனுக்கும் அதையே போட்டு தூங்க வைக்கிறேன். (கொடுமைடா சாமி!) என்னவிதமான அழுகையுடனிருந்தாலும் இந்தப்பாடலைக் கேட்டவுடன் அழுகை நின்றுவிடும். கண்ணை விரித்து யார் பாடுவது என தேட ஆரம்பித்துவிடுவான்.</p>
<p>ஜாஸ்மின் நன்றாக பாடுவாள் ஆகையினாலே அவள் பாடும்போது இன்னுமாக பயல் சொக்கிவிடுவான். ஜாஸ்மின் தற்பொழுது பாடுவது எனது அம்மா கற்றுக்கொடுத்த பாடல், எங்கள் குடும்ப தாலாட்டுப் பாடல். எங்கள் வீட்டில் பிறந்த எல்லா சிறுபிள்ளைகளுக்கும் இதைத்தான் பாடுவது எங்கள் வழக்கம். யார் உருவாக்கியது என்று தெரியாவிட்டாலும் நல்ல கிறிஸ்தவ பாடலானபடியால் பரம்பரையாக பாடுவதாக நான் நினைத்துக்கொள்ளுவேன்.கிறிஸ்தவ பாமாலைத்தொகுப்பில் இந்தப் பாடல் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதுவரைப் பார்த்தது இல்லை (என்ன ஒரு அவமானம்) உறுதி செய்ததும் இல்லை (என்ன ஒரு சோம்பேறித்தனம்?)</p>
<p>நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே<br />
கண்மூடு கண்ணே நீ<br />
அஞ்சாதே மோசம் இல்லையே<br />
கர்த்தாவின் கண்மணி</p>
<p>பிதா தாமே உன் பக்கத்தில்<br />
துணையாய் நிற்கிறார்<br />
அவரே உன்னைக் காக்கையில்<br />
பொல்லாங்கும் செய்வதார்</p>
<p>குமாரன் கெட்டுப்போனதை<br />
இரட்சிக்கவே வந்தார்<br />
உனக்கு சமாதானத்தை<br />
அளிக்க மரித்தார்</p>
<p>பல நாட்களாக ஜாஸ்மின் இதைப் பாடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் மாறுதலுக்காக நான் ஒரு தாலாட்டு பாடலைப் பாடினேன். &#8220;ஏன் பிள்ளைக்கு இத்தன நாளும் நீங்க இதப் பாடேல?&#8221; என கோபித்துக்கொண்டாள். இதையும் எங்கள் வீட்டில் மற்ற பிள்ளைகளுக்காக நாங்கள் பாடியதே!</p>
<p>சின்னப் பாலன் ஆரன்<br />
துங்குகிறான் (2)<br />
சின்னப் பாலன் ஆரன்<br />
துங்குகிறான் நன்றாய்<br />
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்<br />
தூதரை அனுப்பி அவனை பத்திரமாய்.</p>
<p>கூடவே ஜாஸ்மினுக்கு பெரிய சந்தேகம் &#8220;ஆரோன் சின்ன பிள்ளயா இருக்கியது பைபிள்ல இல்லேல்லியா பின்ன எப்படி?&#8221; நான் சொன்னேன் அது  வந்து&#8230; எந்த சின்ன பிள்ளையா இருந்தாலும் நாம் அதை பாடலாம்&#8230; அவங்கவங்க பேர மாத்திரம் மாத்தணும். ஆனாலும் ஒரு சந்தேகம் வந்துவிட்டதால் அம்மாவிற்கு போண் செய்தேன். அவர்கள் கொடுத்த ஒரிஜினல் பாடல்.</p>
<p>சின்னப் பாலன் மோசே<br />
துங்குகிறான் (2)<br />
சின்னப் பாலன் மோசே<br />
துங்குகிறான் நன்றாய்<br />
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்<br />
ராணியை அனுப்பி அவனை பத்திரமாய்.</p>
<p>சரிதான், மோசேயின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திடீர் திருப்புமுனை நிகழ்வை மையமாக வைத்து பாடப்பட்ட பாடல் எவ்வளவு குழந்தைகளை நிம்மதியாக உறங்கவைத்துள்ளது?</p>
<p>அம்மா அப்படியே இன்னுமொரு பாடலை எனக்கு நினைப்பூட்டினார்கள். ராஜாவாகவும் முத்து மணி மாணிக்கம் என கொஞ்சி உறங்கவைக்கும் ஒரு அருமையானப் பாடல். &#8220;கர்த்தர் செட்டைக்குள்&#8221; ஒரு அருமையான கிறிஸ்தவ டச் கொடுக்கிறது. அவரவர் விருப்பமான கடவுள் பெயர்களை நிரப்பினால் மதங்களைக் கடந்து பல குழந்தைகளை இந்த தாலாட்டு உறங்கவைக்கும். எனினும் &#8216;கர்த்தர் செட்டைக்குள்&#8217; சிறு பிள்ளைகள் தூங்குவதில் தவறொன்றும் இல்லை</p>
<p>கண்ணே தூங்கிடு<br />
கண்ணே தூங்கிடு<br />
செல்ல ராஜாவே<br />
நீ தூங்கிடு</p>
<p>விண்மண் ரெண்டிலும்<br />
வேந்தன் உனக்கு<br />
வேறே பாடில்லை<br />
நீ தூங்கிடு</p>
<p>மரகத மணி<br />
வைரப்பொன்மணி<br />
கர்த்தர் செட்டைக்குள்<br />
நீ தூங்கிடு</p>
<p>இதைப் பற்றி ஜாஸ்மினிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவளது பாட்டி பாடும் ஒரு தாலாட்டுப்பாடலை பாடினாள். நகைச்சுவை ததும்பும் இந்தப் பாடலே நமது மண்ணிலிருந்து ஆரன் பெற்ற ஒரு வெகுமதியாகக் கருதுகிறேன். கிராமத்து சூழலை விளக்கும் வார்த்தைகள், உறவை கூறும் வரிகள்.</p>
<p>கொஞ்சுவதற்கேற்ற உரையாடல் நிறைந்த இச்சிறு பாடல் போல இன்னும் சில பாடல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பாடும்போது ஜாஸ்மினின் நடிப்பு அருமை. நானே பிள்ளையாகப் பிறந்துவிடலாமா என்கிற ஆசை எழுப்பும் பாடல் வரிகள்&#8230;</p>
<p>பல வரிகளை மறந்துவிட்டபடியால் ஜாஸ்மினின் அம்மாவை தொடர்புகொண்டு வரிகளை நிரப்பினோம். ஆரன் கொடுத்துவைத்த பயல் தான் இல்லயா?</p>
<p>கண்ணே ஆரீரரோ என்<br />
கண்ணே உறங்குறங்கு</p>
<p>கோழி குஞ்சு பொரி- நீ<br />
முத்தமெல்லாம் கொண்டுதிரி<br />
காக்கே கறுகறுப்பா<br />
காட்டானே சூடடிக்கும்</p>
<p>மாமேன் அடிச்சாரோ பிள்ளைக்கு<br />
மருதோணி கம்பொடச்சி<br />
பேரேன் அடிச்சாரோ<br />
பேரேந்தி கம்புவெட்டி</p>
<p>யாரும் அடிக்கவில்லை<br />
பசிச்சழுதேன் நானம்மா</p>
<p>பிள்ள பசிச்சி அழுதியானா<br />
பிள்ளைக்கு ஆமணக்கு தண்டொடொச்சி<br />
அதுநெறைய தேனடச்சி<br />
பிள்ள பசிச்சி அழும் வேளையிலே<br />
நான் தருவேன் கண்ணே நீ<br />
உறங்குறங்கு</p>
<p>உறங்குறங்கு என்னரசே<br />
புழுபோலே நீ உறங்கு</p>
<p>&#8216;அம்மானை&#8217; பாடிய ஊரில் தான் இருக்கிறாயா இல்லை வேறெங்கும் இருக்கிறாயா என்று கேட்காதீர்கள், ஆரன் தூங்குகிறான்.</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பு கொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                           <a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/289/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=289&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஞாயிறு</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 05 Nov 2009 21:29:56 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[அருளுரை]]></category>
		<category><![CDATA[ஆலயம்]]></category>
		<category><![CDATA[ஞாயிறு]]></category>
		<category><![CDATA[பாவமன்னிப்பு]]></category>
		<category><![CDATA[பிரார்த்தனை]]></category>
		<category><![CDATA[மன்றாட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=283</guid>
		<description><![CDATA[மணியோசை நின்றபின் புறப்பட்டு
வெள்ளை உடையோடு உள்ளக்கறையுடன்
நற்கந்தம் கமழதைலமிட்டு
குடும்பத்துடன் ஒன்றாமல்ஒன்றாக
நெஞ்சோடு திருமறைவெளியரங்கமாய்
ஆலயம் நோக்கிகால்கள்  திருச்சபை நிரம்பிவழிய வெற்றிதயங்களுடன்
பாவமன்னிப்பு மன்றாட்டுகாழ்ப்புகளுடன்
பாரம்பரியப் பாடல்கள்நாவினால்
முழந்தாழுடன் பிரார்த்தனைமுதன்மையாவதற்கு
அருளுரையின் முடிவில்விழித்து
சத்திய வார்த்தையைகாதிருந்தும் கேளாமல்
நிறைந்த காணிக்கையிட்டுஅர்பணமின்றி
நற்கருணையில் சேரும்போதும்கருணையற்று
ஆசீர்வாதம் வேண்டிசாபத்தீடானவைகளுடன்
மீண்டும் தேவாலயத்திற்கு அற்பவிசுவாசிகளாக&#8230;
அருட்திரு காட்சன் சாமுவேல்
தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com
                                         malargodson@gmail.com
9702567603
 
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=283&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மணியோசை நின்றபின் <br />புறப்பட்டு</p>
<p>வெள்ளை உடையோடு <br />உள்ளக்கறையுடன்</p>
<p>நற்கந்தம் கமழ<br />தைலமிட்டு</p>
<p>குடும்பத்துடன் ஒன்றாமல்<br />ஒன்றாக</p>
<p>நெஞ்சோடு திருமறை<br />வெளியரங்கமாய்</p>
<p>ஆலயம் நோக்கி<br />கால்கள் <br /> <br />திருச்சபை நிரம்பிவழிய <br />வெற்றிதயங்களுடன்</p>
<p>பாவமன்னிப்பு மன்றாட்டு<br />காழ்ப்புகளுடன்</p>
<p>பாரம்பரியப் பாடல்கள்<br />நாவினால்</p>
<p>முழந்தாழுடன் பிரார்த்தனை<br />முதன்மையாவதற்கு</p>
<p>அருளுரையின் முடிவில்<br />விழித்து</p>
<p>சத்திய வார்த்தையை<br />காதிருந்தும் கேளாமல்</p>
<p>நிறைந்த காணிக்கையிட்டு<br />அர்பணமின்றி</p>
<p>நற்கருணையில் சேரும்போதும்<br />கருணையற்று</p>
<p>ஆசீர்வாதம் வேண்டி<br />சாபத்தீடானவைகளுடன்</p>
<p>மீண்டும் தேவாலயத்திற்கு <br />அற்பவிசுவாசிகளாக&#8230;</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்புகொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                         <a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>9702567603</p>
<p> </p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/283/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=283&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருநங்கை &#8211; திருச்சபை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/#comments</comments>
		<pubDate>Fri, 23 Oct 2009 19:30:22 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அலி]]></category>
		<category><![CDATA[ஏசாயா]]></category>
		<category><![CDATA[திருச்சபை]]></category>
		<category><![CDATA[திருநங்கை]]></category>
		<category><![CDATA[திருமுழுக்கு]]></category>
		<category><![CDATA[விதையடிக்கப்பட்டவன்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=279</guid>
		<description><![CDATA[வேத பகுதி
திருத்தூதர் பணிகள் 8: 26 &#8211; 40
தனது 10ஆம் ஆண்டுவிழாவை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடிய மீரா ரோடு திருச்சபையை வாழ்த்துகிறேன். பதினோராவது ஆண்டு மிகவும் பயன் நிறைந்ததாக மாறும் பொருட்டு நாம் செய்யவேண்டிய கடமையை இன்றைய தினத்திலே தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த இருக்கிறார்.
நாம் வாசிக்க கேட்ட பகுதியானது நமக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், அதில் வரும் நபர் குறித்த புரிதல் &#8216;பரிசுத்த வேதாகமம்&#8217; வாசிப்பவர்களுக்கும் &#8216;திருவிவிலியம் வாசிப்பவர்களுக்கும் மாறுபடும் என்பதில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=279&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>வேத பகுதி<br />
திருத்தூதர் பணிகள் 8: 26 &#8211; 40</strong></p>
<p>தனது 10ஆம் ஆண்டுவிழாவை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடிய மீரா ரோடு திருச்சபையை வாழ்த்துகிறேன். பதினோராவது ஆண்டு மிகவும் பயன் நிறைந்ததாக மாறும் பொருட்டு நாம் செய்யவேண்டிய கடமையை இன்றைய தினத்திலே தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த இருக்கிறார்.</p>
<p>நாம் வாசிக்க கேட்ட பகுதியானது நமக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், அதில் வரும் நபர் குறித்த புரிதல் &#8216;பரிசுத்த வேதாகமம்&#8217; வாசிப்பவர்களுக்கும் &#8216;திருவிவிலியம் வாசிப்பவர்களுக்கும் மாறுபடும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>அப்போஸ்தலர் நடபடிகள் 8: 27 &#8230;.<strong>அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து&#8230;&#8221;</strong> என்கிற வேத பகுதியில் காணப்படும் &#8220;ஒருவன்&#8221; எனும் வார்த்தை அவரது பாலினத்தை ஆண்பாலாக வர்ணித்தபடி கடந்து செல்லுகிறது. மூல வார்த்தையாகிய கிரேக்க வார்த்தையை நான் ஒப்புநோக்கவில்லை என்றாலும் திருவிவிலியம் காட்டும் அவர்தம் பாலினம் சற்று நம்மை கூர்ந்து அவதானிக்க அழைக்கிறது!</p>
<p>திருவிவிலியத்தை நாம் உற்று நோக்கினால்&#8230;.</p>
<p>திருத்தூதர் பணிகள் 8.27&#8230;.. <strong>அப்போது எத்தியோப்பிய அரசு அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு திரும்பிசென்றுகொண்டிருந்தார். &#8220;அவர் ஒரு அலி&#8221;. எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்</strong>.</p>
<p>&#8220;அவர் ஒரு அலி&#8221; என்ற வார்த்தை நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அதன் உண்மை நம்மை அறைந்து எழுப்புவதாக இருக்கிறது. அந்த வார்த்தையின் தேவை இன்றைக்கு நமக்கு புரிந்துகொள்ளுவதற்கு கடினமாக தென்பட்டாலும், கடவுளின் அரசு செயல்பட  அந்த பகுதி ஒரு முக்கிய உந்து சக்தியாக காணப்படுகிறது.</p>
<p>பல்வேறு விதங்களில் அவமான பெயர்களை சுமந்து வாழும் திருநங்கைகளைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றுவரை நம் திருச்சபைகளில் திருநங்கைகள் அங்கத்தினர் ஆகாததற்கு காரணம் என்ன என்று நாம் அவசரமாக ஆராயவேண்டும். வேத ஆதாரப்படி திருநங்கைகள் என அழைக்கப்படும் அண்ணகர்கள் ஆலயத்தின் உள்ளே வரலாகாது எனும் வரையறை குருமரபினரான ஆரோனின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுவதைக் காண்கிறோம்.<br />
லேவியர் 21: 20 <strong>&#8220;கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிறங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்&#8221;</strong> என கொடூரமாக இவர்களை ஆலயத்துக்கு புறம்பாக நிறுத்துவதை மட்டுமே நாம் கடைபிடிப்போமானால் தவறிளைத்தவர்கள் ஆகிவிடுவோம்.</p>
<p>பல வித சட்டதிட்டங்களை வழங்கிய மோசே இஸ்ரவேலர் கானான் தேசத்திற்கு நுழைவதற்குமுன்பாக கடவுளின் வாக்கிற்கிணங்க ஒரு சட்ட வரையறை செய்கிறார். அதை குரு முறைமை கடைபிடிக்கும் ஆரோன் குடும்பத்தாருக்கு பகிர்ந்து கொள்ளுகிறார். புதிய தேசத்தில் கடவுளை வழிபடும் இறைமக்களாம் இஸ்ரவேலர் எவ்விதமாக தங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் எனவும், தூய்மையல்லாத எவரும் தொழுகைக்கு வருவதனால் தூய்மையான இறைவனுக்கு செலுத்தவேண்டிய கனத்தை தவற விட்டுவிடலாகாது என்ற புரிதலுடன் மட்டுமே நாம் மோசேயிடம் கடவுள் கூறியவற்றை உற்றுநோக்க வேண்டும்.</p>
<p>மாத்திரமல்ல இணைச்சட்டம் கூறுவது என்னவென்றால் 23: 1ல் <strong>&#8220;விதையடிக்கப்பட்டவனும் ஆண்குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது&#8221;</strong></p>
<p>மேற்கொண்ட வாக்கியங்களை &#8216;சரிவர&#8217; புரிந்துகொண்டவர்களாக திருச்சபையானது அனேக வேளைகளில் பலதரப்பட்ட மக்களை திருச்சபைக்கு புறம்பாகவே நிறுத்தியிருக்கிறது. இது சரிதானா என நோக்கும்போது கண்டிப்பாக சரியான ஒன்று அல்ல என்பது திருவிவிலியத்தில்தானே வெளிப்படுகிறது!</p>
<p>தூய ஆவியரின் நடத்துதல் பிலிப்புவோடு இருந்ததனால் அவர் இறைச் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நிதி அமைச்சரின் தேரோடு இணைந்துகொண்டார் என்பதை கண்டுகொள்ளுகிறோம். பாலை நிலத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டவர் &#8220;அவர் ஒரு அலி&#8221; என்ற உண்மை தெரிந்த பின்பும் அவரோடு உரையாடுவது கிறிஸ்துவின் அரசுக்கு திருநங்கைகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பது வெளிப்படுகிறதில்லையா? </p>
<p>தீர்க்கன் ஏசாயாவின் புத்தகம் 56ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்பொழுது&#8230;</p>
<p><strong>3 ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், &#8216;தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி&#8217; என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், &#8216;நான் வெறும் பட்ட மரம்&#8217; என்று கூறாதிருக்கட்டும்.</strong></p>
<p><strong>4 ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைபிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்துகொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,</strong></p>
<p><strong>5 என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரை விட சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள  பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.</strong></p>
<p><strong>6 ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைபிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக்குறித்து ஆண்டவர் கூறுவது:</strong></p>
<p><strong>7 அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும்  மற்றப்பலிகளும் என் பீடத்தின்மேல்  ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய &#8216;இறைமன்றாட்டின் வீடு&#8217; என அழைக்கப்படும்.</strong></p>
<p>எவ்வளவு தெளிவாகவும் பொதுவாகவும் ஆண்டவரின் அழைப்பு முன்வைக்கப்படுகிறது. இயேசு கோவிலை தூய்மைப்படுத்தும் நிகழ்விலே (மத் 21: 12- 17; மாற் 11: 15 &#8211; 19; யோவான் 2: 13- 22) லூக்க 19: 45ல் இவ்விதமாக மறுபடியும் குறிப்பிடுகிறார்&#8230;. <strong>&#8221; &#8216;என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கபடும்&#8217; என்று மறை நூலில் எழுதியுள்ளது&#8221; என்று அவர்களுக்குக் கற்பித்தார்.</strong></p>
<p>இயேசுவானவர் இதே பகுதியை எடுத்தாளும் சூழல் நமக்கு நினைவிருந்தாலும் ஒருபோதும் நாம் அதை திருநங்கைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சொன்னார் என்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். அவ்விதமாக நாம் தவறிவிடும்பொழுது திருநங்கைகளுக்கான உரிமையை நிலைநாட்டிய இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.</p>
<p>தொடர்ந்து இயேசுவின் நெடிய ஆன்மீகப் பயணத்தில் இருந்து நாம் விலகி சென்றுவிடுகிறோம்! திருச்சபை குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் எனும் எண்ணத்துடனே தொழுகைக்கு வருகிறோம். பிற மக்களை வாசலின் புறம்பாக நிறுத்திவிடுகிறோம்.</p>
<p>எருசலேமில் தனது வழிபாடு மறுக்கப்பட்டாலும் கடவுள் பால் மிகுந்த பற்றுடன் தீர்க்கனின் ஓலைச்சுருளை வாசித்தபடி செல்லும் திருநங்கையை கர்த்தர் கண்டு பிலிப்புவை அவரிடத்தில் அனுப்புகிறார். தனது பணியை செவ்வனே செய்யும் பிலிப்புவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!</p>
<p>&#8220;நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா என்று கேட்டார்&#8221; தி. ப. 8: 36 அதற்கு பிலிப்பு கூறிய பதிலாக சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படும் பதில் என்னவென்றால், &#8221; நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடை இல்லை&#8221;. எனில் முழு உள்ளத்தோடு நம்பி இறைவனிடம் வருபவர்களுக்கு தடை செய்ய நாம் யார்?</p>
<p>இயேசு கூறுகிறார் &#8221; &#8230; அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர், வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர், மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக்  கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்&#8221; என்றார்.  மத் 19: 12</p>
<p>திருச்சபை திருநங்கைகளுக்கு தனது கதவை திறக்க இப்பொழுது மறுக்கலாம் எனினும் அவ்வாறே அவர்களை தூரமாக்கி வைத்து நமது &#8220;மீட்பின் அனுபவத்தை&#8221; நாமே பெருமையாக கருதுவோமானால், அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய அவசியத்தை துய ஆவியர் நமக்கு இன்று உணர்த்துகிறார்.</p>
<p>மூன்றாம் பாலினரை பிலிப்பு சந்திப்பது கூட பாலை நிலத்தில்தான் இல்லையா? பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பாலை நிலத்தின் உரிப்பொருளாக காணப்படுவதுபோலவே திருச்சபை இவர்களை இனங்காணுவதை என்னவென்று சொல்ல?</p>
<p>மனந்தளராது பாலை நிலத்தில் நாம் நம் திருப்பணி செய்ய அழைக்கப்படுகிறோம்! அனைவருமாக!</p>
<p>(மீரா ரோடு, தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை, 11. 10. 2009 அன்று காலை ஆராதனையில் நான் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)</p>
<p>தொடர்புக்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/279/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=279&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சொற்பமாக சிந்திப்போம்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 25 Aug 2009 19:07:52 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[சிந்தனைக்கு]]></category>
		<category><![CDATA[உபவாசம்]]></category>
		<category><![CDATA[உப்பு]]></category>
		<category><![CDATA[ஒளி]]></category>
		<category><![CDATA[கடமை]]></category>
		<category><![CDATA[கிறிஸ்து]]></category>
		<category><![CDATA[kadamai]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=277</guid>
		<description><![CDATA[ நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் &#8211; கடலிலேயே இருந்துவிடாதீர்கள்
நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் - ஒலிபெருக்கியாய் அல்ல! 
சத்துருக்களை ஸ்னேகியுங்கள் – எதிரியின் எதிரியை அல்ல!
கர்த்தர் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார், உங்கள் கடமையை அல்ல!
 காட்டு புஷ்பங்களை கவனிக்க சென்றோம்! அந்தோ காட்டையே காணவில்லை
எழுந்து கட்டுவோம் வாருங்கள் -  உடைந்த உள்ளங்களை!
 பட்டயத்தை உறையிலே போடு, அல்லது பேரீச்சம் பழத்திற்குப் போடு.
தசமபாகம்- எண்ணிப்பார்பதற்கு உரியது அல்ல கணக்கு ஒப்புவிப்பதற்கு உரியது!
 திரு முழுக்கு. தண்ணீரை உணர்வது அன்று, தன்னையே உணர்வது!
கிறிஸ்த்துவே சபைக்கு மூலைக்கல்! [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=277&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p> நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் &#8211; கடலிலேயே இருந்துவிடாதீர்கள்</p>
<p>நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் - ஒலிபெருக்கியாய் அல்ல! </p>
<p>சத்துருக்களை ஸ்னேகியுங்கள் – எதிரியின் எதிரியை அல்ல!</p>
<p>கர்த்தர் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார், உங்கள் கடமையை அல்ல!</p>
<p> காட்டு புஷ்பங்களை கவனிக்க சென்றோம்! அந்தோ காட்டையே காணவில்லை</p>
<p>எழுந்து கட்டுவோம் வாருங்கள் -  உடைந்த உள்ளங்களை!</p>
<p> பட்டயத்தை உறையிலே போடு, அல்லது பேரீச்சம் பழத்திற்குப் போடு.</p>
<p>தசமபாகம்- எண்ணிப்பார்பதற்கு உரியது அல்ல கணக்கு ஒப்புவிப்பதற்கு உரியது!</p>
<p> திரு முழுக்கு. தண்ணீரை உணர்வது அன்று, தன்னையே உணர்வது!</p>
<p>கிறிஸ்த்துவே சபைக்கு மூலைக்கல்! ஆகவே தான் குழி தோண்டி புதைத்துவிட்டோம்.</p>
<p><strong> மெழுகுவர்த்தி</strong></p>
<p> எழும்பி பிரகாசி!</p>
<p>உருகினாலும்…</p>
<p>இறுதிவரைக்கும்….</p>
<p> </p>
<p><strong>உக்கிராணத்துவம் </strong></p>
<p>ஜீவ அப்பம் வேண்டம்</p>
<p> அன்றன்றுள்ள அப்பமும் வேண்டாம்</p>
<p> களஞ்சியம் மட்டும் போதும்</p>
<p><strong> உபவாசம்</strong></p>
<p>பசித்திருப்பதல்ல</p>
<p> நீதி செய்ய</p>
<p>பசிதாகத்துடனிருப்பது!</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>mobile: 09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/277/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=277&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கலப்பை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 12 Aug 2009 00:07:23 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[சிலுவை]]></category>
		<category><![CDATA[ஜெயமோகன்]]></category>
		<category><![CDATA[பலி]]></category>
		<category><![CDATA[விவசாயம்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=273</guid>
		<description><![CDATA[மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?
பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=273&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?</p>
<p>பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், அக்கறையும் கொண்ட ஒருவரின் இத்தகைய கண்டுபிடிப்பு, பசிப்பிணியாற்றிய தொண்டு எந்த மறையும் ஈடுசெய்ய முடியாதது.</p>
<p>கலப்பையின் தெய்வீகம் ஏட்டுச்சுரைக்காயாகிவரும் நம் சம காலத்தில் அதை சுமந்து செல்லும் கிழவனின் முதுகு கேழ்விக்குறியாக காட்சியளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டு அல்லது மூன்று தலைமுறைக் கண்டவர்கள் மட்டுமே சுமக்கும் இப்பொருள், இன்றல்லது நாளை இடம்பெயரக் காத்திருக்க, இயந்திரத்தின் பயங்கரமும், இயற்கையின் வலிய விதியும், அரசியல் சாக்கடையும், சமய சமாதானங்களும் இவர்தம் வாழ்வையே உழுதுபோடும்பொழுது, நாம் வேடிக்கை பார்ப்பது &#8220;உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்வதல்லவா?&#8221;.</p>
<p>கலப்பை உழுதிட்ட நிலம்போல் காட்சியளிக்கும் இவர்தம் வாழ்வில், சிலுவையை சுமக்கச்சொல்ல நமக்கென்ன அருகதைஇருக்கின்றது? நாமெல்லோரும் தொழுதுண்டு பின்செல்லவேண்டும் என வள்ளுவன் எழுதிவைத்தும், நாம் &#8220;சொல்பேச்சுக் கேளாமை&#8221; எனும் அதிகாரத்தை எழுதத்தூண்டுகிறோமா?</p>
<p>கலப்பையின் பிறப்பு நாம் உற்றுனோக்கத்தக்க பல காலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மனுக்குலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கலப்பை ஒரு அத்தியாவசிய ஊன்றுகோலாய் இருப்பினும், அதன் வடிவமும் வேகமும் மற்றும் இன்னபிற மாற்றங்களும் நத்தையின் வேகத்தையே ஒத்திருந்தன. இதை முன்னிறுத்தும் விதமாக கலப்பையின் பிறப்பை அறிஞர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கின்றனர்.</p>
<p>1  சேகரிக்கும் பொருளாதாரத்தின் இறுதி நிலை<br />
2  விவசாயத்தின் துவக்கநிலை அல்லது கால்நடையாக்கல்<br />
3  கிராம விவசாய யுகம்</p>
<p>சுமார் 3000 வருடங்களாக கலப்பை தன் கலைச்சேவை மற்றும் களைப்பு மாற்றும் சேவையும் செய்துவருவதாக அறிஞர் கூறும் கூற்று நம் பழந்தமிழ் இலக்கியங்களுடனும் இணங்கிப்போவதாய் அமைந்துள்ளது.</p>
<p>மண்ணில் விழுந்த விதை முளைத்து, துளிர்விட்டு, வளர்ந்து, மொட்டுவிட்டு, மலர்ந்து, பூவாகி, காய்த்து, கனிந்து மீண்டும் மண்ணில்&#8230;. என நடப்பதை எவ்வளவு கூர்மையாக, அதே நேரம், நாள் வருடம் என காத்திருந்து பெற முடிந்ததோ; அது போலவே கலப்பை பிறப்பதற்கும் காலங்கள் பலவாயின என்பது அடிப்படையாயினும் நம்மில் ஒருசாரார் இதை ஏற்க மறுக்கிறோம்.</p>
<p>காயீன் தன் நிலத்தின் பலனை ஏதேன் தோட்டதின் வேளியே  உள்ள சந்தையில் ஆபேல் என்ற ஒரே சகோதர வாடிக்கையாளருக்காக (பண்டமாற்றுமுறையில்) விற்பதற்காக காத்திருப்பது சற்று அதிகப்படியாக நமக்குத் தெரியவில்லை?</p>
<p>எவ்விதமான விதை? எந்த நிலம்? ஏற்ற காலம் ஏது? எவ்வளவு காலம்? அறுவடை செய்வது எப்படி? சேகரிப்பதற்கான களஞ்சியம் எங்கே? என ஏகப்பட்ட மர்மங்கள் உள்ள ஒரு காரித்தை செய்வதற்குரிய ஞானத்தைக் கடவுள் அருளினாலும், அதற்கேற்றவிதமாய் சற்று காலத்தையும் வசூலித்துக்கொண்டார் என்பதை எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்போகிறோம்?</p>
<p>கலப்பை தன் பயணத்தை மிகவும் மெதுவாக துவக்கியிருந்தாலும், பல கலச்சாரங்களையும், நாடுகளையும், சமயங்களையும் நூற்றாண்டுகளையும் உழுது செல்லும்பொழுது, காட்சி மாறும் நேரத்தில் காணாமற் போகின்ற ஆபத்து நம் கண்ணெதிரே இருந்தும் அது மறைவாய் இருப்பதன் காரணம் என்ன?</p>
<p>கலப்பை தன்னகத்தே கொண்டுள்ள உவமை, உவமேயம் மற்றும் உருவகம் அளப்பரியது! அது ஒட்டுமொத்த்த மனித குலத்திற்கும் பொதுவானது. கலப்பையின் உருவ ஒற்றுமை எந்நாடாயினும் சற்றேரக்குறைய ஒன்றுபோல் இருப்பதே இதற்குச் சான்று. பொதுமையைக் கொண்டுள்ள தனித்தன்மைகளை நாம் அலட்சியம் செய்வது வாடிக்கையாகிப்போனது, கற்றுக்கொடுப்பவர்களின் கவனமின்மையா? அல்லது கற்றுக்கொள்ளும் நமது ஆர்வமின்மையா? எதுவாயிருப்பினும் கலப்பையை ஓட்டிச்செல்லும் எருதைப்போல நாம் அதன் முக்கியத்துவத்தை அசைபோடமுடியுமானால், நல்ல நிலத்தை ஒத்தவிதமாக நம்மனதை பண்படுத்தமுடியும் என்பது உறுதி!</p>
<p>சிலந்தி தன் வலையைப் பின்னுவதுபோல் மகா பொறுமையாக கலைநயத்தோடு செய்யவேண்டிய வேலை இது. வரிவரியாக   ஒரு உறைந்த நிலத்தில் உழுவது உழவனின் தூரப்பார்வையால் மட்டுமல்ல கலப்பையின் கடின உழைப்பால் கூடத்தான்.</p>
<p>கலப்பையின் கூரிய நுனி இவ்வுலகத்தின் பசிப்பிணியாற்றும்பொழுது, பிற கூர்மையுடையவைகள் இரத்தப் பசியாற்றுவதை என்னவென்று சொல்ல? என்னைப் பொருத்தவரை பேனா முனையைவிட வலுவானது கலப்பையின் முனைதான், ஏனென்றால் கலப்பை மண்ணில் எழுதுவதை நிறுத்திவிட்டால் நம் தலைஎழுத்தை யாராலும் மாற்றி எழுத இயலாது.</p>
<p>எபிரேய மொழியில் &#8220;அபெத்&#8221; என்பது கலப்பை மற்றும் வேலையைக் குறிக்கும் &#8211; என்னே ஒரு ஒற்றுமை? வேலை செய்யாதவன் சாப்பிடலாகாது என்பதாக திரு விவிலியம் கூறியும், மகா கவி பாரதி அதை தன் பங்கிற்கு &#8220;நிந்தனை&#8221; என வழிமொழிந்தும் கூட, நாம் உண்டுகளித்திருப்பது எத்தனை அருவருப்பு வாழ்க்கை?</p>
<p>சூரியன் உதிக்குமுன்னே தனது பயணத்தை துவக்கி, இறுகிப்போன நிலங்களை தனது கூர்மையான மழுவால் நகிழ்த்து, கதிரவனே நில் என்று சொல்லி, அதைத் தன் தலையின் மேலிருந்து இறக்கிவைக்குமட்டும், உழவன் தன் உடலில் சேறும் புழுதியும் வாறியிறைக்கும் காட்சி நம் மனதை பண்படுத்தாததற்குக் காரணம் கலப்பையோ உழவனோ அல்ல! மாறாக பணத்தோடு கடையேறினால் கிடைக்கும் ஐ ஆர் 8ம், சம்பா பசுமதி பொன்னி போன்ற நளின அரிசிகளும்தான். போதாததற்கு இரண்டு ரூபாய் அரிசி வேறு அரசாங்கம் வாரியிறைக்கின்றது.</p>
<p>கலப்பையை எண்ணும்தோறும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் தொட்டுணர்ந்த ஒரு பரவச உணர்வு ஏற்படுகின்றது. இரண்டு எருதுகள் கர்ம சிரத்தையாக நடக்க, பறவைகள் தங்கள் பங்கிற்கு தத்தித்தாவியபடி சில பூச்சிகளை கபளீகரம் செய்ய, கலப்பையால் பெயர்க்கப்பட்டு பிடுங்கிவிழும் மண்ணில் காற்றும் வெயிலும் இதமளிக்கும் தண்ணீரும் ஊடுருவ, அங்கு வாழும் மண்புழுவும் தன் நன்றிக்கடன் செய்யவென்று ஒரு காவியத்தோற்றமே காணப்படுகின்றது!</p>
<p>நிலத்தின் தன்மைக்கேற்பவும் கலாச்சாரத்தின் வெளிப்படுதலாகவும் நிலம் பல்வேறு விதங்களில் உழப்படுகின்றது. குதிரை கழுதை எருது மாடு கிடாரி மட்டுமா? நாய் கூட கலப்பையை உழுவதற்காக இழுத்துச்செல்வது நம்மில் பலர் அறிந்து கொள்ளாத உண்மை! உழும் மிருகங்களின் எண்ணிக்கைக் கூட வேறுபட்டு இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.</p>
<p>இயேசுக்கிறிஸ்துவின் விவசாயம் சம்பந்தமான உவமைகள் மற்றும் மேற்கோள்கள் அவரை ஒரு விவசாயியாகவே காட்டுகின்றது!  தனது பட்டறையில் செதுக்கிய கலப்பையைக்கொண்டு அவரும் உழுதிருக்க வேண்டும்! &#8220;நுகத்தில் இருவித மிருகங்களை வைத்துப் பூட்டுவது&#8221; சிறுபான்மையினரை வைத்துச் சொல்லப்பட்ட ஒன்றா என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.</p>
<p> &#8221;கலப்பையில் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பாராதே&#8221; எனும் கூற்று அவரை ஒரு முழு விவசாயியின் வடிவமாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கலப்பையில் கைவைத்துவிட்டு கவனமின்மையாய் இருந்தால், மழுவை இழுத்திச் செல்லும் மிருகத்தின் காலை அது பதம் பார்த்துவிடும் என்ற நுண்ணிய விவசாய அறிவுரையோடு தான் சிலுவையில் ஏற்கும் வியாகுலமான காட்சியை அவர் முன்மொழிவதாகவே எனக்குப் படுகின்றது.</p>
<p>சிலுவை இரத்தப்பலியை நிறுத்தியப் பின்னரும் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவரை வரவேற்க ஆடு கோழி மாடு பன்றி என உயிர் கொல்லத் துணிந்ததன் மர்மம் என்ன? தீர்க்கன் பட்டயங்களெல்லாம் எப்படி உழவுசார்ந்த கருவிகளாக மாறும் என் கனவு கண்டாரோ அதை நிறைவேற்ற வேண்டி இயேசு சிலுவையில் மரித்தும் நாம் மனம் திரும்பாமல் இருப்பதென்ன?</p>
<p>சிலுவை தன் உருவகத்தைப் பெற்றுக்கொண்டது தனிப்பட்ட இயேசுவின் சாவினால் என்று ஏற்றுக்கொள்ளாமல், ஒட்டுமொத்த துன்பம் சகிப்போரின் பொருட்டே கிறிஸ்து அதை மகிமைக்குரியதாக மாற்றினார் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை! அப்படியிருக்க சிலுவை ஒரு கலப்பையைப்போல் இயேசுவை உழுதிட்டப்பொழுதும், எப்படி நாம் அதைக் கண்டுகொள்ளத் தவறினோம்?</p>
<p>தினமும் கலப்பையைத் தன் தோளில் சுமந்து பரிகாசத்திற்கு ஏதுவாய் அரைகுறை ஆடையோடு வயக்காடு செல்லும் உழவனின் வேதனையில் நாம் காணாத கடவுளை, எப்படி சிலுவை சுமப்போராக கற்பனை செய்திட இயலும்? வேதனைகளை தூர நிறுத்திவைத்து, சுகமான பிரார்த்தனைகளை நமது சுய லாபத்திற்காக வேண்டுவது எப்பேற்பட்ட சுயநலம்? தினம் தினம் விவசாயியின் மரணத்தை வானொலி, தொலைக்காட்சி மற்றும் தினசரிகள் கதறியழைத்துச் சொல்லியும், நாம் குற்ற உணர்ச்சியின்றி இறைவேண்டல் செய்யும்போது செவிசாய்க்கப்போகும் கடவுள் யார்?</p>
<p> &#8221;எனக்காக அழாதீர்கள்! உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்&#8221; என்று இயேசு சொன்னது ஒரு விவசாயியின் கூக்குரலாகவே எனக்குப் படுகின்றது! விவசாயியின் சாவு! நிலங்களில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை விளைநிலங்கள் குடியிருப்புகளாகிவிடும் அவலமும் அபாயமும் என நம் எதிற்காலம் கேள்விக்குறியகிப்போனதன் விழைவான உண்மையை அவர் எடுத்துக்கூறுவதை தாமதிக்காமல் புரிந்து கொள்வது நமக்கு அதிக நன்மை பயக்கும்.</p>
<p> வாழ்கையின் அத்தனை கோணங்களிலிருந்தும் கொடூரங்கள் எல்லவற்றையும் எதிற்கொண்டு, வனாந்திரத்திற்கு கலப்பையோடே செல்லும் விவசாயியின் வேண்டுதல் &#8221; இந்தப் பாத்திரம் என்னோடேக் கூட இருக்கக்கூடுமானால் இருக்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது!&#8221;</p>
<p>நாம் என்ன செய்யப்போகிறோம்? சற்று நேரமாவது விழித்திருக்கக் கூடாதா?</p>
<p> (8.4.2005 அன்று எழுதியது. திருத்துவதற்காக ஜெயமோகன் அண்ணனிடம் கொண்டு சென்றேன். பாராட்டினார்கள்)</p>
<p>அருட் திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/273/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=273&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பத்தில் ஒரு பங்கு – பாகம் 4</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/#comments</comments>
		<pubDate>Wed, 05 Aug 2009 21:33:21 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆசீர்வாதம்]]></category>
		<category><![CDATA[தசமபாகம்]]></category>
		<category><![CDATA[திருவிவிலியம்]]></category>
		<category><![CDATA[பவுல் அப்போஸ்தலன்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=271</guid>
		<description><![CDATA[பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.
&#8220;தகுதியுள்ளவர்கள் என நீங்கள்  கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=271&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.</p>
<p>“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.</p>
<p>&#8220;தகுதியுள்ளவர்கள் என நீங்கள்  கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்&#8221; (1 கொரிந்தியர் 16: 3)</p>
<p>இந்த கூற்று கொரிந்து பட்டணத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிரூபமாக எழுதியது. எந்த வசனத்தையும் நாம் நமக்கென்று வாசிப்ப்த்து பொருள் கொள்ளுவதற்கு முன்பதாக அது யாருக்கு எந்த நேரத்தில் எந்த தேவையை முன்னிட்டு எழுதப்பட்டது என புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது.</p>
<p>கொரிந்து பட்டணம் ஒரு துறைமுக நகரம். அங்கே அதிகமும் பணம் செழித்தபடியால் பவுல் அங்கே வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இதைக் கூறுகிறார். பவுலுடைய நோக்கம் வெறும் பணம் கொடுக்கச் சொல்லுவது அல்ல மாறாக அவர்கள் மத்தியில் இருந்த தவறான பழக்க வழக்கங்களை நீக்குவதும் அவர்களை மேன்மையுள்ளவர்கள் ஆகும்படி ஒரு கலாச்சார பகிர்தலை கொரிந்தியர்களுக்கும் (கிரேக்கர்களுக்கும்) எருசலேமில் வாழும் யூதர்களுக்கும் இடையில் நிகழ்த்துகிறார்.</p>
<p>முதலாம் வசனம் கூறும் &#8220;இறைமக்கள்&#8221; எனும் வார்த்தை பல இடங்களில் பவுல் உபயோகிப்பதை நாம் காணமுடியும். (உரோமையர் 1: 7, 2 கொரிந்தியர் 1: 1, பிலிப்பியர் 1: 1) இறைமக்கள் என்று பவுல் கூறும்பொழுது அவர் திருச்சபை அங்கத்தினர்களான மக்களையே குறிப்பிடுகின்றார்.</p>
<p>அப்படியானால் அவர் எருசலேமிலுள்ள யூதர்கள்(இறைமக்கள்) மேல் கரிசனை கொள்ள காரணம் என்ன? நமக்கு தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் முக்கியமான ஒரு தகவல் திருத்தூதர் பணிகள் 11: 27- 30 வரைக் காணக் கிடைக்கிறது.</p>
<p>இவ்விதமாக வறுமையில் உழலும் கிரிஸ்தவர்கள் மேல் பாரம் கொண்டு பவுல் கொரிந்து திருச்சபைக்கும் கலாத்திய திருச்சபைக்கும் பணம் வேண்டி நிரூபம் அனுப்புகிறார்.</p>
<p>வாரத்தின் முதல் நாள் என பவுல் கூறுவதே பவுல் ஓய்வுநாளை முக்கியத்துவப்படுத்தாமல் ஒரு புது நாளை ஆராதனைக்கென்று அறிமுகம் செய்வதைக் காண்கிறோம். கிரிஸ்தவர்களின் கூடுகையை யூதர்களின் மரபை பின்பற்றாதிருக்க பவுல் இவ்விதமாக ஒரு முயற்சியை மெற்கொள்ளுகிறார்.</p>
<p>பவுல் பலவிதங்களில் தனது எதிர்ப்பை யூதர்கள் மேலாக காண்பித்திருந்தாலும், முக்கியமாக அவர்களது பழக்கவழக்கங்களை கேள்வி எழுப்பியபடியே அவர் தனது தரப்பை முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். தவறிப்பொய் கூட அவர் &#8220;பத்திலொருபங்கை&#8221; முன்னிறுத்த விழயவில்லை. பகிர்ந்து வழ்வதை அவர் போற்றியிருக்கிறார் என்பதைய் மட்டுமே நாம் காண முடியும்.</p>
<p>தொடரும்</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>mobile: 09870765181</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/271/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=271&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நோவா எனும் இயற்கையியலாளர்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Sun, 02 Aug 2009 23:01:23 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[இயற்கையியலாளர்]]></category>
		<category><![CDATA[நோவா]]></category>
		<category><![CDATA[பேழை]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=269</guid>
		<description><![CDATA[ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.
 
மிருகங்களை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=269&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.</p>
<p> </p>
<p>மிருகங்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் சுலபமான வேலை அல்ல. என்ன தான் நமக்கு அவற்றின் மீது பாசம் இருந்தாலும், அவற்றிற்கான நேரம் என்பது கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். நேரம் மாத்திரம் அல்ல அவைகளின் உணவும் தேவையான நேரத்தில் மருத்துவமும் அவற்றை முழுவதும் அறிந்தவராலே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். எனக்கு நோவாவும் பேழையும் ஞாபகத்துக்கு வந்து போயின. என்னே ஒரு அற்பணிப்பு அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்?</p>
<p> </p>
<p>ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் புராணீகமானவைகள் என்ற கருத்து இறையியலாளர் மத்தியில் உண்டு. ஆகவே நானும் இவற்றை முக்கியத்துவப்படுத்தாமல் கடந்துபோன நாட்கள் உண்டு. ஆயினும் புராண இறையியல் என்பது தன்னுள்ளே ஒரு மேலான இறையியலை நிறுத்தி அதை வாசிப்பவருக்கு எளிமைப்படுத்தி சொல்லும் விதமாகையால் அதை ஆழ்ந்து படிக்க விரும்பினேன்.</p>
<p> </p>
<p>கிட்டத்தட்ட முன்னூருக்கும் அதிகமான வெள்ளப்பெருக்கு கதைகள் உலகெங்கும் பழங்குடிகளால் சொல்லப்பட்டு வருகின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அவ்விதமாகவே நோவாவின் கதையும் &#8220;சுடப்பட்ட&#8221; கதை என்பதை வலியுறுத்தும் விதமாக பல முன்னுதாரண இலக்கியங்கள் சுட்டப்படுகின்றன.</p>
<p> </p>
<p>நோவா குறித்த எனது புதிய புரிதலுக்கான காரணம் நான் வாசித்த &#8220;தெ நியூ நோவா&#8221; என்கிற ஜெரால்ட் டெயூரெல்லின் புத்தகமே. ஜெரால்ட் டெயூரெல் மிருகங்களின் மீது மிகுந்த விருப்பம் உடையவர். சிறு வயதில் இருந்தே அவர் தனது கவனத்தை பிராணிகள் மீது திருப்பியிருந்தார். தனது வீட்டில் ஆமை, பாம்பு, தேள் போன்ற பிராணிகளை பிடித்துவந்து பத்திரமாக அடைத்து தனது உடன்பிரந்தவர்களை அதிகமாகவே சோதித்ததை &#8220;மை ஃபாமிலி அன்ட் அதர் அனிமல்ஸ்&#8221; என்ற தனது புத்தகத்திலே விரிவாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார்.</p>
<p> </p>
<p>&#8221; தெ நியூ நோவா&#8221; ஒரு மிருக காட்சி சாலைக்கு தெவையான மிருகங்களை ஜெரால்ட் ட்யூரெல் பிடிக்கச் செல்லும் காட்சிகளை விவரிக்கிறது. முதல் சில பக்கங்களிலேயே அவர் பிடித்த மிருகங்களுடன் அவர் மாரடிக்கும் காட்சி மிருகங்களை பிடிப்பதை விட அவைகளை பராமரிப்பதன் சிரமத்தையும், அதன் பின் காணப்படும் அற்பணிப்பும் நமக்கு தெளிவுபெறும் விதமாக அவர் விளக்கியிருப்பார்.</p>
<p> </p>
<p>இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கும்போது எழுதப்பட்ட அல்லது வாய்மொழி கூற்றுகளாக சொல்லப்பட்டவையே முதல் 5 புத்தகங்களான &#8220;தோரா&#8221; எனப்படுபவை. அடிமைகளாக இருந்த காலத்தில் அந்த தேசத்தில் இருத்த கதைகள் பலவற்றை தங்கள் நம்பிக்கை சார்ந்து யூதர்கள் மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக கி மு 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட &#8220;கில்கமிஷ் காவியம்&#8221; இதேபொன்ற சாயலையுடைய வெள்ளப்பெருக்கை பதிவுசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
<p>மனிதர்களின் அக்கிரமம், கடவுளின் தண்டனை, நோவாவின் அற்பணிப்பு, கடவுளின் உடன்படிக்கை என்பதாக நோவாவின் கதையை நாம் பகுத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் அற்புதங்கள் எனும் வடிவிலேயே அடிப்படைவாத கிறிஸ்தவ சமூகம் காண முற்படுகிறது. இறைவனின் அற்புத சக்தியை எள்ளளவும் நாம் குறத்து மதிப்பிட இயலாது என்றாலும், நோவாவை அவர் அழைத்த காரனம் மனிதர் மேல் கடவுள் சுமத்திய பொறுப்பு நம் நினைவில் நிற்கவேண்டும் என்பதே!</p>
<p> </p>
<p style="text-align:left;">மனிதர்களின் அக்கிரமம் என்பது, சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாக மாறிப்போனது என்பதாகவே நாம் கண்டுகொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான உறவு சுட்டிக்காட்டபடாத வரையில், மனிதர்கள் உலகம் தங்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்றும், அதை எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியும் என்பதையுமே கருத்தில் கொண்டிருந்தனர் என்பதையும் காண முடிகிறது. பூமியின் மீதிருந்த மனிதர்களின் உறவு இயற்கையை பேணாமல் சீர்கெட்டு இருந்ததனால் கடவுள் உலகத்தை காக்கும் பொருட்டு அதை அழிக்க துணிந்தார் என நாம் கொள்ளலாம். அழிவும் பிறப்பும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான தருணம் இது.</p>
<p style="text-align:left;"> </p>
<p>கடவுளின் தண்டனை என்பது மனிதர்கள் சீர்படுவதற்கே எனும் கருத்தாக்கத்தை இங்கே பதிவு செய்வதை காண்கிறோம். குறிப்பாக கைதிகளாய் இருத்த யூத மக்கள் சீர்படவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியும் இந்த கதை கூறப்பட்டிருக்கும்.</p>
<p> </p>
<p>நோவாவின் 600 வயது, அவர் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதராக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அவரது முதிர்ச்சி மற்றெல்லா தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் தம்மை அவர் விலக்கி, பிறர் தன்னை பின்பற்றும்படியான சிறந்த வாழ்வை அவர் கடைபிடித்திருக்கிறார் என பதிவாகியிருக்கிறது. எனினும் அன்றய கால சூழ்நிலையில் மக்கள் தமது விருப்பப்படி, வாழ்ந்தபடியால், நோவா காட்டிய முன்னுதாரணம் எடுபடவில்லை.</p>
<p> </p>
<p>கடவுள் தாம் நேசித்த உலகத்தை காப்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில், நோவாவிடம் ஒரு பேழையை உண்டுபண்ண கூறுகிறார். 300 முழம் நிளம், 70 முழம் அகலம், 40 முழம் உயரம் என்பதும் கொப்பேர் மரத்தில் அதை உண்டுபண்ணு என்பது ஒரு பேழையை உண்டுபண்ணுவதற்கு போதுமான தகவல் அல்ல. ஆயினும் அனத்து ஜீவ இராசிகளையும் காப்பற்ற வேண்டி மிக பிரம்மாண்டமான ஒரு புகலிடத்தை உண்டுபண்ண கடவுள் நோவாவிற்கு கொடுத்த கரிசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p>
<p> </p>
<p>நோவாவின் அற்பணிப்பு நாம் ஊன்றி கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஜோடியாக பறவைகளையும் மிருகங்களையும் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை.  அவை தானாக பேழை நோக்கி வந்தது என்பது  அல்ல கடவுளின் செயல், மாறாக நோவாவிற்கு அவர் கொடுத்த நேரம் மற்றும் ஞானம் அதை அவன் எவ்விதமாக பயன்படுத்தினான் என்பதையே கடவுளின் செயலாக நாம் கருதவேண்டும். தனது படைப்பை ஒருவன் புரிந்துகொள்ளும்போது அவன் &#8220;கடவுளோடு நடக்கிறவன்&#8221; ஆகிறான்.</p>
<p> </p>
<p>கடவுளின் உடன்படிக்கை நம்மை நாமே மறு பரிசீலனை செய்ய அழைக்கிறது. ஊலகத்தை இனி அவர் அழிப்பதில்லை என உடன்படிக்கை செய்கிறார். மனிதர்களோ தங்களால் ஆனமட்டும் அதை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் &#8211; சில நேரங்களில் அறிந்தும் பல வேளைகளில் அறியாமலும்.</p>
<p> </p>
<p>இன்றைக்கும் நமக்கு நோவாக்கள் தேவை. உயிரினங்களை பேழையிலோ, மிருக காட்சி சாலையிலோ அடைப்பதற்கு அல்ல மாறாக பல்லுயிர்கள் தங்கள் தங்கள் வாழ்விடங்களில் பத்திரமாக தங்கவும், அவைகளை பேணுவதற்கும், அவைகளால் நமது சந்ததிகள் காப்பற்றப்படுவதற்கும் வேண்டிய இயற்கையியலாளர்கள் எனும் நோவாக்களே தேவை! இவ்விதமான நோவாக்களின் வேலையில் நாமும் பங்கெடுக்கவில்லையென்றால்,  பேழை புறப்பட்டுவிடும் நாமோ வெள்ளத்தில் மாண்டுபோவோம்.</p>
<p>தொடர்பிற்கு</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/269/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=269&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>