<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நெடும் பனை</title>
	<atom:link href="http://pastorgodson.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://pastorgodson.wordpress.com</link>
	<description>மன்றாட்டுடன் கூடிய இறைப்பணி</description>
	<lastBuildDate>Fri, 13 Nov 2009 20:25:17 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='pastorgodson.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/35541be7d54380bde7823b50d6fed8d7?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>நெடும் பனை</title>
		<link>http://pastorgodson.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>தாலாட்டு பாட வா&#8230;</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Fri, 13 Nov 2009 20:25:16 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[ஆரீரரோ]]></category>
		<category><![CDATA[தாலாட்டு]]></category>
		<category><![CDATA[பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பாட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=289</guid>
		<description><![CDATA[கிறிஸ்தவத்திற்கும் தாலாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலான கிறிஸ்மஸ் பாடல்கள் தாலாட்டை முன்னிறுத்தியபடியே இருக்கும். இயேசு பாலனாக பிறந்தபடியால் தாலாட்டின் மெட்டுக்களில் இவ்விதம் பல பாடல்கள் அமைந்துள்ளன.
ஆரனை தூங்கவைப்பதற்காக நான் செல்போனில் இடும் பாட்டும் கிறிஸ்மஸ் பாடல் தான் ஆனால் அது தாலாட்டு அல்ல. தெ ரெபெல் ஜீஸஸ் என்கிற ஜாக்சன் பிரவுனின் பாடலை எனக்கு எனது நண்பரான டாக்டர் விட்னி ஹோவர்த் அறிமுகம் செய்திருந்தார்கள். எனக்கு அது  பிடித்துபோகவே அதை நான் மறுபடியும் மறுபடியுமாக கேட்பதற்காக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=289&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கிறிஸ்தவத்திற்கும் தாலாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலான கிறிஸ்மஸ் பாடல்கள் தாலாட்டை முன்னிறுத்தியபடியே இருக்கும். இயேசு பாலனாக பிறந்தபடியால் தாலாட்டின் மெட்டுக்களில் இவ்விதம் பல பாடல்கள் அமைந்துள்ளன.</p>
<p>ஆரனை தூங்கவைப்பதற்காக நான் செல்போனில் இடும் பாட்டும் கிறிஸ்மஸ் பாடல் தான் ஆனால் அது தாலாட்டு அல்ல. தெ ரெபெல் ஜீஸஸ் என்கிற ஜாக்சன் பிரவுனின் பாடலை எனக்கு எனது நண்பரான டாக்டர் விட்னி ஹோவர்த் அறிமுகம் செய்திருந்தார்கள். எனக்கு அது  பிடித்துபோகவே அதை நான் மறுபடியும் மறுபடியுமாக கேட்பதற்காக அவனுக்கும் அதையே போட்டு தூங்க வைக்கிறேன். (கொடுமைடா சாமி!) என்னவிதமான அழுகையுடனிருந்தாலும் இந்தப்பாடலைக் கேட்டவுடன் அழுகை நின்றுவிடும். கண்ணை விரித்து யார் பாடுவது என தேட ஆரம்பித்துவிடுவான்.</p>
<p>ஜாஸ்மின் நன்றாக பாடுவாள் ஆகையினாலே அவள் பாடும்போது இன்னுமாக பயல் சொக்கிவிடுவான். ஜாஸ்மின் தற்பொழுது பாடுவது எனது அம்மா கற்றுக்கொடுத்த பாடல், எங்கள் குடும்ப தாலாட்டுப் பாடல். எங்கள் வீட்டில் பிறந்த எல்லா சிறுபிள்ளைகளுக்கும் இதைத்தான் பாடுவது எங்கள் வழக்கம். யார் உருவாக்கியது என்று தெரியாவிட்டாலும் நல்ல கிறிஸ்தவ பாடலானபடியால் பரம்பரையாக பாடுவதாக நான் நினைத்துக்கொள்ளுவேன்.கிறிஸ்தவ பாமாலைத்தொகுப்பில் இந்தப் பாடல் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதுவரைப் பார்த்தது இல்லை (என்ன ஒரு அவமானம்) உறுதி செய்ததும் இல்லை (என்ன ஒரு சோம்பேறித்தனம்?)</p>
<p>நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே<br />
கண்மூடு கண்ணே நீ<br />
அஞ்சாதே மோசம் இல்லையே<br />
கர்த்தாவின் கண்மணி</p>
<p>பிதா தாமே உன் பக்கத்தில்<br />
துணையாய் நிற்கிறார்<br />
அவரே உன்னைக் காக்கையில்<br />
பொல்லாங்கும் செய்வதார்</p>
<p>குமாரன் கெட்டுப்போனதை<br />
இரட்சிக்கவே வந்தார்<br />
உனக்கு சமாதானத்தை<br />
அளிக்க மரித்தார்</p>
<p>பல நாட்களாக ஜாஸ்மின் இதைப் பாடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் மாறுதலுக்காக நான் ஒரு தாலாட்டு பாடலைப் பாடினேன். &#8220;ஏன் பிள்ளைக்கு இத்தன நாளும் நீங்க இதப் பாடேல?&#8221; என கோபித்துக்கொண்டாள். இதையும் எங்கள் வீட்டில் மற்ற பிள்ளைகளுக்காக நாங்கள் பாடியதே!</p>
<p>சின்னப் பாலன் ஆரன்<br />
துங்குகிறான் (2)<br />
சின்னப் பாலன் ஆரன்<br />
துங்குகிறான் நன்றாய்<br />
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்<br />
தூதரை அனுப்பி அவனை பத்திரமாய்.</p>
<p>கூடவே ஜாஸ்மினுக்கு பெரிய சந்தேகம் &#8220;ஆரோன் சின்ன பிள்ளயா இருக்கியது பைபிள்ல இல்லேல்லியா பின்ன எப்படி?&#8221; நான் சொன்னேன் அது  வந்து&#8230; எந்த சின்ன பிள்ளையா இருந்தாலும் நாம் அதை பாடலாம்&#8230; அவங்கவங்க பேர மாத்திரம் மாத்தணும். ஆனாலும் ஒரு சந்தேகம் வந்துவிட்டதால் அம்மாவிற்கு போண் செய்தேன். அவர்கள் கொடுத்த ஒரிஜினல் பாடல்.</p>
<p>சின்னப் பாலன் மோசே<br />
துங்குகிறான் (2)<br />
சின்னப் பாலன் மோசே<br />
துங்குகிறான் நன்றாய்<br />
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்<br />
ராணியை அனுப்பி அவனை பத்திரமாய்.</p>
<p>சரிதான், மோசேயின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திடீர் திருப்புமுனை நிகழ்வை மையமாக வைத்து பாடப்பட்ட பாடல் எவ்வளவு குழந்தைகளை நிம்மதியாக உறங்கவைத்துள்ளது?</p>
<p>அம்மா அப்படியே இன்னுமொரு பாடலை எனக்கு நினைப்பூட்டினார்கள். ராஜாவாகவும் முத்து மணி மாணிக்கம் என கொஞ்சி உறங்கவைக்கும் ஒரு அருமையானப் பாடல். &#8220;கர்த்தர் செட்டைக்குள்&#8221; ஒரு அருமையான கிறிஸ்தவ டச் கொடுக்கிறது. அவரவர் விருப்பமான கடவுள் பெயர்களை நிரப்பினால் மதங்களைக் கடந்து பல குழந்தைகளை இந்த தாலாட்டு உறங்கவைக்கும். எனினும் &#8216;கர்த்தர் செட்டைக்குள்&#8217; சிறு பிள்ளைகள் தூங்குவதில் தவறொன்றும் இல்லை</p>
<p>கண்ணே தூங்கிடு<br />
கண்ணே தூங்கிடு<br />
செல்ல ராஜாவே<br />
நீ தூங்கிடு</p>
<p>விண்மண் ரெண்டிலும்<br />
வேந்தன் உனக்கு<br />
வேறே பாடில்லை<br />
நீ தூங்கிடு</p>
<p>மரகத மணி<br />
வைரப்பொன்மணி<br />
கர்த்தர் செட்டைக்குள்<br />
நீ தூங்கிடு</p>
<p>இதைப் பற்றி ஜாஸ்மினிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவளது பாட்டி பாடும் ஒரு தாலாட்டுப்பாடலை பாடினாள். நகைச்சுவை ததும்பும் இந்தப் பாடலே நமது மண்ணிலிருந்து ஆரன் பெற்ற ஒரு வெகுமதியாகக் கருதுகிறேன். கிராமத்து சூழலை விளக்கும் வார்த்தைகள், உறவை கூறும் வரிகள்.</p>
<p>கொஞ்சுவதற்கேற்ற உரையாடல் நிறைந்த இச்சிறு பாடல் போல இன்னும் சில பாடல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பாடும்போது ஜாஸ்மினின் நடிப்பு அருமை. நானே பிள்ளையாகப் பிறந்துவிடலாமா என்கிற ஆசை எழுப்பும் பாடல் வரிகள்&#8230;</p>
<p>பல வரிகளை மறந்துவிட்டபடியால் ஜாஸ்மினின் அம்மாவை தொடர்புகொண்டு வரிகளை நிரப்பினோம். ஆரன் கொடுத்துவைத்த பயல் தான் இல்லயா?</p>
<p>கண்ணே ஆரீரரோ என்<br />
கண்ணே உறங்குறங்கு</p>
<p>கோழி குஞ்சு பொரி- நீ<br />
முத்தமெல்லாம் கொண்டுதிரி<br />
காக்கே கறுகறுப்பா<br />
காட்டானே சூடடிக்கும்</p>
<p>மாமேன் அடிச்சாரோ பிள்ளைக்கு<br />
மருதோணி கம்பொடச்சி<br />
பேரேன் அடிச்சாரோ<br />
பேரேந்தி கம்புவெட்டி</p>
<p>யாரும் அடிக்கவில்லை<br />
பசிச்சழுதேன் நானம்மா</p>
<p>பிள்ள பசிச்சி அழுதியானா<br />
பிள்ளைக்கு ஆமணக்கு தண்டொடொச்சி<br />
அதுநெறைய தேனடச்சி<br />
பிள்ள பசிச்சி அழும் வேளையிலே<br />
நான் தருவேன் கண்ணே நீ<br />
உறங்குறங்கு</p>
<p>உறங்குறங்கு என்னரசே<br />
புழுபோலே நீ உறங்கு</p>
<p>&#8216;அம்மானை&#8217; பாடிய ஊரில் தான் இருக்கிறாயா இல்லை வேறெங்கும் இருக்கிறாயா என்று கேட்காதீர்கள், ஆரன் தூங்குகிறான்.</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பு கொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                           <a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/289/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/289/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/289/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=289&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/11/13/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஞாயிறு</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 05 Nov 2009 21:29:56 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[அருளுரை]]></category>
		<category><![CDATA[ஆலயம்]]></category>
		<category><![CDATA[ஞாயிறு]]></category>
		<category><![CDATA[பாவமன்னிப்பு]]></category>
		<category><![CDATA[பிரார்த்தனை]]></category>
		<category><![CDATA[மன்றாட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=283</guid>
		<description><![CDATA[மணியோசை நின்றபின் புறப்பட்டு
வெள்ளை உடையோடு உள்ளக்கறையுடன்
நற்கந்தம் கமழதைலமிட்டு
குடும்பத்துடன் ஒன்றாமல்ஒன்றாக
நெஞ்சோடு திருமறைவெளியரங்கமாய்
ஆலயம் நோக்கிகால்கள்  திருச்சபை நிரம்பிவழிய வெற்றிதயங்களுடன்
பாவமன்னிப்பு மன்றாட்டுகாழ்ப்புகளுடன்
பாரம்பரியப் பாடல்கள்நாவினால்
முழந்தாழுடன் பிரார்த்தனைமுதன்மையாவதற்கு
அருளுரையின் முடிவில்விழித்து
சத்திய வார்த்தையைகாதிருந்தும் கேளாமல்
நிறைந்த காணிக்கையிட்டுஅர்பணமின்றி
நற்கருணையில் சேரும்போதும்கருணையற்று
ஆசீர்வாதம் வேண்டிசாபத்தீடானவைகளுடன்
மீண்டும் தேவாலயத்திற்கு அற்பவிசுவாசிகளாக&#8230;
அருட்திரு காட்சன் சாமுவேல்
தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com
                                         malargodson@gmail.com
9702567603
 
       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=283&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மணியோசை நின்றபின் <br />புறப்பட்டு</p>
<p>வெள்ளை உடையோடு <br />உள்ளக்கறையுடன்</p>
<p>நற்கந்தம் கமழ<br />தைலமிட்டு</p>
<p>குடும்பத்துடன் ஒன்றாமல்<br />ஒன்றாக</p>
<p>நெஞ்சோடு திருமறை<br />வெளியரங்கமாய்</p>
<p>ஆலயம் நோக்கி<br />கால்கள் <br /> <br />திருச்சபை நிரம்பிவழிய <br />வெற்றிதயங்களுடன்</p>
<p>பாவமன்னிப்பு மன்றாட்டு<br />காழ்ப்புகளுடன்</p>
<p>பாரம்பரியப் பாடல்கள்<br />நாவினால்</p>
<p>முழந்தாழுடன் பிரார்த்தனை<br />முதன்மையாவதற்கு</p>
<p>அருளுரையின் முடிவில்<br />விழித்து</p>
<p>சத்திய வார்த்தையை<br />காதிருந்தும் கேளாமல்</p>
<p>நிறைந்த காணிக்கையிட்டு<br />அர்பணமின்றி</p>
<p>நற்கருணையில் சேரும்போதும்<br />கருணையற்று</p>
<p>ஆசீர்வாதம் வேண்டி<br />சாபத்தீடானவைகளுடன்</p>
<p>மீண்டும் தேவாலயத்திற்கு <br />அற்பவிசுவாசிகளாக&#8230;</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்புகொள்ள <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                         <a href="mailto:malargodson@gmail.com">malargodson@gmail.com</a></p>
<p>9702567603</p>
<p> </p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/283/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/283/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/283/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=283&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/11/05/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருநங்கை &#8211; திருச்சபை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/#comments</comments>
		<pubDate>Fri, 23 Oct 2009 19:30:22 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அலி]]></category>
		<category><![CDATA[ஏசாயா]]></category>
		<category><![CDATA[திருச்சபை]]></category>
		<category><![CDATA[திருநங்கை]]></category>
		<category><![CDATA[திருமுழுக்கு]]></category>
		<category><![CDATA[விதையடிக்கப்பட்டவன்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=279</guid>
		<description><![CDATA[வேத பகுதி
திருத்தூதர் பணிகள் 8: 26 &#8211; 40
தனது 10ஆம் ஆண்டுவிழாவை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடிய மீரா ரோடு திருச்சபையை வாழ்த்துகிறேன். பதினோராவது ஆண்டு மிகவும் பயன் நிறைந்ததாக மாறும் பொருட்டு நாம் செய்யவேண்டிய கடமையை இன்றைய தினத்திலே தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த இருக்கிறார்.
நாம் வாசிக்க கேட்ட பகுதியானது நமக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், அதில் வரும் நபர் குறித்த புரிதல் &#8216;பரிசுத்த வேதாகமம்&#8217; வாசிப்பவர்களுக்கும் &#8216;திருவிவிலியம் வாசிப்பவர்களுக்கும் மாறுபடும் என்பதில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=279&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>வேத பகுதி<br />
திருத்தூதர் பணிகள் 8: 26 &#8211; 40</strong></p>
<p>தனது 10ஆம் ஆண்டுவிழாவை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடிய மீரா ரோடு திருச்சபையை வாழ்த்துகிறேன். பதினோராவது ஆண்டு மிகவும் பயன் நிறைந்ததாக மாறும் பொருட்டு நாம் செய்யவேண்டிய கடமையை இன்றைய தினத்திலே தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த இருக்கிறார்.</p>
<p>நாம் வாசிக்க கேட்ட பகுதியானது நமக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், அதில் வரும் நபர் குறித்த புரிதல் &#8216;பரிசுத்த வேதாகமம்&#8217; வாசிப்பவர்களுக்கும் &#8216;திருவிவிலியம் வாசிப்பவர்களுக்கும் மாறுபடும் என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>அப்போஸ்தலர் நடபடிகள் 8: 27 &#8230;.<strong>அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து&#8230;&#8221;</strong> என்கிற வேத பகுதியில் காணப்படும் &#8220;ஒருவன்&#8221; எனும் வார்த்தை அவரது பாலினத்தை ஆண்பாலாக வர்ணித்தபடி கடந்து செல்லுகிறது. மூல வார்த்தையாகிய கிரேக்க வார்த்தையை நான் ஒப்புநோக்கவில்லை என்றாலும் திருவிவிலியம் காட்டும் அவர்தம் பாலினம் சற்று நம்மை கூர்ந்து அவதானிக்க அழைக்கிறது!</p>
<p>திருவிவிலியத்தை நாம் உற்று நோக்கினால்&#8230;.</p>
<p>திருத்தூதர் பணிகள் 8.27&#8230;.. <strong>அப்போது எத்தியோப்பிய அரசு அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு திரும்பிசென்றுகொண்டிருந்தார். &#8220;அவர் ஒரு அலி&#8221;. எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்</strong>.</p>
<p>&#8220;அவர் ஒரு அலி&#8221; என்ற வார்த்தை நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அதன் உண்மை நம்மை அறைந்து எழுப்புவதாக இருக்கிறது. அந்த வார்த்தையின் தேவை இன்றைக்கு நமக்கு புரிந்துகொள்ளுவதற்கு கடினமாக தென்பட்டாலும், கடவுளின் அரசு செயல்பட  அந்த பகுதி ஒரு முக்கிய உந்து சக்தியாக காணப்படுகிறது.</p>
<p>பல்வேறு விதங்களில் அவமான பெயர்களை சுமந்து வாழும் திருநங்கைகளைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றுவரை நம் திருச்சபைகளில் திருநங்கைகள் அங்கத்தினர் ஆகாததற்கு காரணம் என்ன என்று நாம் அவசரமாக ஆராயவேண்டும். வேத ஆதாரப்படி திருநங்கைகள் என அழைக்கப்படும் அண்ணகர்கள் ஆலயத்தின் உள்ளே வரலாகாது எனும் வரையறை குருமரபினரான ஆரோனின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுவதைக் காண்கிறோம்.<br />
லேவியர் 21: 20 <strong>&#8220;கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிறங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்&#8221;</strong> என கொடூரமாக இவர்களை ஆலயத்துக்கு புறம்பாக நிறுத்துவதை மட்டுமே நாம் கடைபிடிப்போமானால் தவறிளைத்தவர்கள் ஆகிவிடுவோம்.</p>
<p>பல வித சட்டதிட்டங்களை வழங்கிய மோசே இஸ்ரவேலர் கானான் தேசத்திற்கு நுழைவதற்குமுன்பாக கடவுளின் வாக்கிற்கிணங்க ஒரு சட்ட வரையறை செய்கிறார். அதை குரு முறைமை கடைபிடிக்கும் ஆரோன் குடும்பத்தாருக்கு பகிர்ந்து கொள்ளுகிறார். புதிய தேசத்தில் கடவுளை வழிபடும் இறைமக்களாம் இஸ்ரவேலர் எவ்விதமாக தங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் எனவும், தூய்மையல்லாத எவரும் தொழுகைக்கு வருவதனால் தூய்மையான இறைவனுக்கு செலுத்தவேண்டிய கனத்தை தவற விட்டுவிடலாகாது என்ற புரிதலுடன் மட்டுமே நாம் மோசேயிடம் கடவுள் கூறியவற்றை உற்றுநோக்க வேண்டும்.</p>
<p>மாத்திரமல்ல இணைச்சட்டம் கூறுவது என்னவென்றால் 23: 1ல் <strong>&#8220;விதையடிக்கப்பட்டவனும் ஆண்குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது&#8221;</strong></p>
<p>மேற்கொண்ட வாக்கியங்களை &#8216;சரிவர&#8217; புரிந்துகொண்டவர்களாக திருச்சபையானது அனேக வேளைகளில் பலதரப்பட்ட மக்களை திருச்சபைக்கு புறம்பாகவே நிறுத்தியிருக்கிறது. இது சரிதானா என நோக்கும்போது கண்டிப்பாக சரியான ஒன்று அல்ல என்பது திருவிவிலியத்தில்தானே வெளிப்படுகிறது!</p>
<p>தூய ஆவியரின் நடத்துதல் பிலிப்புவோடு இருந்ததனால் அவர் இறைச் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நிதி அமைச்சரின் தேரோடு இணைந்துகொண்டார் என்பதை கண்டுகொள்ளுகிறோம். பாலை நிலத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டவர் &#8220;அவர் ஒரு அலி&#8221; என்ற உண்மை தெரிந்த பின்பும் அவரோடு உரையாடுவது கிறிஸ்துவின் அரசுக்கு திருநங்கைகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பது வெளிப்படுகிறதில்லையா? </p>
<p>தீர்க்கன் ஏசாயாவின் புத்தகம் 56ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்பொழுது&#8230;</p>
<p><strong>3 ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், &#8216;தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி&#8217; என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், &#8216;நான் வெறும் பட்ட மரம்&#8217; என்று கூறாதிருக்கட்டும்.</strong></p>
<p><strong>4 ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைபிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்துகொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,</strong></p>
<p><strong>5 என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரை விட சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள  பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.</strong></p>
<p><strong>6 ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைபிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக்குறித்து ஆண்டவர் கூறுவது:</strong></p>
<p><strong>7 அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும்  மற்றப்பலிகளும் என் பீடத்தின்மேல்  ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய &#8216;இறைமன்றாட்டின் வீடு&#8217; என அழைக்கப்படும்.</strong></p>
<p>எவ்வளவு தெளிவாகவும் பொதுவாகவும் ஆண்டவரின் அழைப்பு முன்வைக்கப்படுகிறது. இயேசு கோவிலை தூய்மைப்படுத்தும் நிகழ்விலே (மத் 21: 12- 17; மாற் 11: 15 &#8211; 19; யோவான் 2: 13- 22) லூக்க 19: 45ல் இவ்விதமாக மறுபடியும் குறிப்பிடுகிறார்&#8230;. <strong>&#8221; &#8216;என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கபடும்&#8217; என்று மறை நூலில் எழுதியுள்ளது&#8221; என்று அவர்களுக்குக் கற்பித்தார்.</strong></p>
<p>இயேசுவானவர் இதே பகுதியை எடுத்தாளும் சூழல் நமக்கு நினைவிருந்தாலும் ஒருபோதும் நாம் அதை திருநங்கைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சொன்னார் என்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். அவ்விதமாக நாம் தவறிவிடும்பொழுது திருநங்கைகளுக்கான உரிமையை நிலைநாட்டிய இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.</p>
<p>தொடர்ந்து இயேசுவின் நெடிய ஆன்மீகப் பயணத்தில் இருந்து நாம் விலகி சென்றுவிடுகிறோம்! திருச்சபை குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் எனும் எண்ணத்துடனே தொழுகைக்கு வருகிறோம். பிற மக்களை வாசலின் புறம்பாக நிறுத்திவிடுகிறோம்.</p>
<p>எருசலேமில் தனது வழிபாடு மறுக்கப்பட்டாலும் கடவுள் பால் மிகுந்த பற்றுடன் தீர்க்கனின் ஓலைச்சுருளை வாசித்தபடி செல்லும் திருநங்கையை கர்த்தர் கண்டு பிலிப்புவை அவரிடத்தில் அனுப்புகிறார். தனது பணியை செவ்வனே செய்யும் பிலிப்புவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!</p>
<p>&#8220;நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா என்று கேட்டார்&#8221; தி. ப. 8: 36 அதற்கு பிலிப்பு கூறிய பதிலாக சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படும் பதில் என்னவென்றால், &#8221; நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடை இல்லை&#8221;. எனில் முழு உள்ளத்தோடு நம்பி இறைவனிடம் வருபவர்களுக்கு தடை செய்ய நாம் யார்?</p>
<p>இயேசு கூறுகிறார் &#8221; &#8230; அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர், வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர், மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக்  கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்&#8221; என்றார்.  மத் 19: 12</p>
<p>திருச்சபை திருநங்கைகளுக்கு தனது கதவை திறக்க இப்பொழுது மறுக்கலாம் எனினும் அவ்வாறே அவர்களை தூரமாக்கி வைத்து நமது &#8220;மீட்பின் அனுபவத்தை&#8221; நாமே பெருமையாக கருதுவோமானால், அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய அவசியத்தை துய ஆவியர் நமக்கு இன்று உணர்த்துகிறார்.</p>
<p>மூன்றாம் பாலினரை பிலிப்பு சந்திப்பது கூட பாலை நிலத்தில்தான் இல்லையா? பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பாலை நிலத்தின் உரிப்பொருளாக காணப்படுவதுபோலவே திருச்சபை இவர்களை இனங்காணுவதை என்னவென்று சொல்ல?</p>
<p>மனந்தளராது பாலை நிலத்தில் நாம் நம் திருப்பணி செய்ய அழைக்கப்படுகிறோம்! அனைவருமாக!</p>
<p>(மீரா ரோடு, தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை, 11. 10. 2009 அன்று காலை ஆராதனையில் நான் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)</p>
<p>தொடர்புக்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/279/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/279/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/279/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=279&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/10/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சொற்பமாக சிந்திப்போம்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 25 Aug 2009 19:07:52 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[சிந்தனைக்கு]]></category>
		<category><![CDATA[உபவாசம்]]></category>
		<category><![CDATA[உப்பு]]></category>
		<category><![CDATA[ஒளி]]></category>
		<category><![CDATA[கடமை]]></category>
		<category><![CDATA[கிறிஸ்து]]></category>
		<category><![CDATA[kadamai]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=277</guid>
		<description><![CDATA[ நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் &#8211; கடலிலேயே இருந்துவிடாதீர்கள்
நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் - ஒலிபெருக்கியாய் அல்ல! 
சத்துருக்களை ஸ்னேகியுங்கள் – எதிரியின் எதிரியை அல்ல!
கர்த்தர் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார், உங்கள் கடமையை அல்ல!
 காட்டு புஷ்பங்களை கவனிக்க சென்றோம்! அந்தோ காட்டையே காணவில்லை
எழுந்து கட்டுவோம் வாருங்கள் -  உடைந்த உள்ளங்களை!
 பட்டயத்தை உறையிலே போடு, அல்லது பேரீச்சம் பழத்திற்குப் போடு.
தசமபாகம்- எண்ணிப்பார்பதற்கு உரியது அல்ல கணக்கு ஒப்புவிப்பதற்கு உரியது!
 திரு முழுக்கு. தண்ணீரை உணர்வது அன்று, தன்னையே உணர்வது!
கிறிஸ்த்துவே சபைக்கு மூலைக்கல்! [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=277&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p> நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் &#8211; கடலிலேயே இருந்துவிடாதீர்கள்</p>
<p>நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் - ஒலிபெருக்கியாய் அல்ல! </p>
<p>சத்துருக்களை ஸ்னேகியுங்கள் – எதிரியின் எதிரியை அல்ல!</p>
<p>கர்த்தர் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார், உங்கள் கடமையை அல்ல!</p>
<p> காட்டு புஷ்பங்களை கவனிக்க சென்றோம்! அந்தோ காட்டையே காணவில்லை</p>
<p>எழுந்து கட்டுவோம் வாருங்கள் -  உடைந்த உள்ளங்களை!</p>
<p> பட்டயத்தை உறையிலே போடு, அல்லது பேரீச்சம் பழத்திற்குப் போடு.</p>
<p>தசமபாகம்- எண்ணிப்பார்பதற்கு உரியது அல்ல கணக்கு ஒப்புவிப்பதற்கு உரியது!</p>
<p> திரு முழுக்கு. தண்ணீரை உணர்வது அன்று, தன்னையே உணர்வது!</p>
<p>கிறிஸ்த்துவே சபைக்கு மூலைக்கல்! ஆகவே தான் குழி தோண்டி புதைத்துவிட்டோம்.</p>
<p><strong> மெழுகுவர்த்தி</strong></p>
<p> எழும்பி பிரகாசி!</p>
<p>உருகினாலும்…</p>
<p>இறுதிவரைக்கும்….</p>
<p> </p>
<p><strong>உக்கிராணத்துவம் </strong></p>
<p>ஜீவ அப்பம் வேண்டம்</p>
<p> அன்றன்றுள்ள அப்பமும் வேண்டாம்</p>
<p> களஞ்சியம் மட்டும் போதும்</p>
<p><strong> உபவாசம்</strong></p>
<p>பசித்திருப்பதல்ல</p>
<p> நீதி செய்ய</p>
<p>பசிதாகத்துடனிருப்பது!</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>mobile: 09702567603</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/277/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/277/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/277/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=277&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கலப்பை</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 12 Aug 2009 00:07:23 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[சிலுவை]]></category>
		<category><![CDATA[ஜெயமோகன்]]></category>
		<category><![CDATA[பலி]]></category>
		<category><![CDATA[விவசாயம்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=273</guid>
		<description><![CDATA[மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?
பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=273&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?</p>
<p>பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், அக்கறையும் கொண்ட ஒருவரின் இத்தகைய கண்டுபிடிப்பு, பசிப்பிணியாற்றிய தொண்டு எந்த மறையும் ஈடுசெய்ய முடியாதது.</p>
<p>கலப்பையின் தெய்வீகம் ஏட்டுச்சுரைக்காயாகிவரும் நம் சம காலத்தில் அதை சுமந்து செல்லும் கிழவனின் முதுகு கேழ்விக்குறியாக காட்சியளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டு அல்லது மூன்று தலைமுறைக் கண்டவர்கள் மட்டுமே சுமக்கும் இப்பொருள், இன்றல்லது நாளை இடம்பெயரக் காத்திருக்க, இயந்திரத்தின் பயங்கரமும், இயற்கையின் வலிய விதியும், அரசியல் சாக்கடையும், சமய சமாதானங்களும் இவர்தம் வாழ்வையே உழுதுபோடும்பொழுது, நாம் வேடிக்கை பார்ப்பது &#8220;உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்வதல்லவா?&#8221;.</p>
<p>கலப்பை உழுதிட்ட நிலம்போல் காட்சியளிக்கும் இவர்தம் வாழ்வில், சிலுவையை சுமக்கச்சொல்ல நமக்கென்ன அருகதைஇருக்கின்றது? நாமெல்லோரும் தொழுதுண்டு பின்செல்லவேண்டும் என வள்ளுவன் எழுதிவைத்தும், நாம் &#8220;சொல்பேச்சுக் கேளாமை&#8221; எனும் அதிகாரத்தை எழுதத்தூண்டுகிறோமா?</p>
<p>கலப்பையின் பிறப்பு நாம் உற்றுனோக்கத்தக்க பல காலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மனுக்குலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கலப்பை ஒரு அத்தியாவசிய ஊன்றுகோலாய் இருப்பினும், அதன் வடிவமும் வேகமும் மற்றும் இன்னபிற மாற்றங்களும் நத்தையின் வேகத்தையே ஒத்திருந்தன. இதை முன்னிறுத்தும் விதமாக கலப்பையின் பிறப்பை அறிஞர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கின்றனர்.</p>
<p>1  சேகரிக்கும் பொருளாதாரத்தின் இறுதி நிலை<br />
2  விவசாயத்தின் துவக்கநிலை அல்லது கால்நடையாக்கல்<br />
3  கிராம விவசாய யுகம்</p>
<p>சுமார் 3000 வருடங்களாக கலப்பை தன் கலைச்சேவை மற்றும் களைப்பு மாற்றும் சேவையும் செய்துவருவதாக அறிஞர் கூறும் கூற்று நம் பழந்தமிழ் இலக்கியங்களுடனும் இணங்கிப்போவதாய் அமைந்துள்ளது.</p>
<p>மண்ணில் விழுந்த விதை முளைத்து, துளிர்விட்டு, வளர்ந்து, மொட்டுவிட்டு, மலர்ந்து, பூவாகி, காய்த்து, கனிந்து மீண்டும் மண்ணில்&#8230;. என நடப்பதை எவ்வளவு கூர்மையாக, அதே நேரம், நாள் வருடம் என காத்திருந்து பெற முடிந்ததோ; அது போலவே கலப்பை பிறப்பதற்கும் காலங்கள் பலவாயின என்பது அடிப்படையாயினும் நம்மில் ஒருசாரார் இதை ஏற்க மறுக்கிறோம்.</p>
<p>காயீன் தன் நிலத்தின் பலனை ஏதேன் தோட்டதின் வேளியே  உள்ள சந்தையில் ஆபேல் என்ற ஒரே சகோதர வாடிக்கையாளருக்காக (பண்டமாற்றுமுறையில்) விற்பதற்காக காத்திருப்பது சற்று அதிகப்படியாக நமக்குத் தெரியவில்லை?</p>
<p>எவ்விதமான விதை? எந்த நிலம்? ஏற்ற காலம் ஏது? எவ்வளவு காலம்? அறுவடை செய்வது எப்படி? சேகரிப்பதற்கான களஞ்சியம் எங்கே? என ஏகப்பட்ட மர்மங்கள் உள்ள ஒரு காரித்தை செய்வதற்குரிய ஞானத்தைக் கடவுள் அருளினாலும், அதற்கேற்றவிதமாய் சற்று காலத்தையும் வசூலித்துக்கொண்டார் என்பதை எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்போகிறோம்?</p>
<p>கலப்பை தன் பயணத்தை மிகவும் மெதுவாக துவக்கியிருந்தாலும், பல கலச்சாரங்களையும், நாடுகளையும், சமயங்களையும் நூற்றாண்டுகளையும் உழுது செல்லும்பொழுது, காட்சி மாறும் நேரத்தில் காணாமற் போகின்ற ஆபத்து நம் கண்ணெதிரே இருந்தும் அது மறைவாய் இருப்பதன் காரணம் என்ன?</p>
<p>கலப்பை தன்னகத்தே கொண்டுள்ள உவமை, உவமேயம் மற்றும் உருவகம் அளப்பரியது! அது ஒட்டுமொத்த்த மனித குலத்திற்கும் பொதுவானது. கலப்பையின் உருவ ஒற்றுமை எந்நாடாயினும் சற்றேரக்குறைய ஒன்றுபோல் இருப்பதே இதற்குச் சான்று. பொதுமையைக் கொண்டுள்ள தனித்தன்மைகளை நாம் அலட்சியம் செய்வது வாடிக்கையாகிப்போனது, கற்றுக்கொடுப்பவர்களின் கவனமின்மையா? அல்லது கற்றுக்கொள்ளும் நமது ஆர்வமின்மையா? எதுவாயிருப்பினும் கலப்பையை ஓட்டிச்செல்லும் எருதைப்போல நாம் அதன் முக்கியத்துவத்தை அசைபோடமுடியுமானால், நல்ல நிலத்தை ஒத்தவிதமாக நம்மனதை பண்படுத்தமுடியும் என்பது உறுதி!</p>
<p>சிலந்தி தன் வலையைப் பின்னுவதுபோல் மகா பொறுமையாக கலைநயத்தோடு செய்யவேண்டிய வேலை இது. வரிவரியாக   ஒரு உறைந்த நிலத்தில் உழுவது உழவனின் தூரப்பார்வையால் மட்டுமல்ல கலப்பையின் கடின உழைப்பால் கூடத்தான்.</p>
<p>கலப்பையின் கூரிய நுனி இவ்வுலகத்தின் பசிப்பிணியாற்றும்பொழுது, பிற கூர்மையுடையவைகள் இரத்தப் பசியாற்றுவதை என்னவென்று சொல்ல? என்னைப் பொருத்தவரை பேனா முனையைவிட வலுவானது கலப்பையின் முனைதான், ஏனென்றால் கலப்பை மண்ணில் எழுதுவதை நிறுத்திவிட்டால் நம் தலைஎழுத்தை யாராலும் மாற்றி எழுத இயலாது.</p>
<p>எபிரேய மொழியில் &#8220;அபெத்&#8221; என்பது கலப்பை மற்றும் வேலையைக் குறிக்கும் &#8211; என்னே ஒரு ஒற்றுமை? வேலை செய்யாதவன் சாப்பிடலாகாது என்பதாக திரு விவிலியம் கூறியும், மகா கவி பாரதி அதை தன் பங்கிற்கு &#8220;நிந்தனை&#8221; என வழிமொழிந்தும் கூட, நாம் உண்டுகளித்திருப்பது எத்தனை அருவருப்பு வாழ்க்கை?</p>
<p>சூரியன் உதிக்குமுன்னே தனது பயணத்தை துவக்கி, இறுகிப்போன நிலங்களை தனது கூர்மையான மழுவால் நகிழ்த்து, கதிரவனே நில் என்று சொல்லி, அதைத் தன் தலையின் மேலிருந்து இறக்கிவைக்குமட்டும், உழவன் தன் உடலில் சேறும் புழுதியும் வாறியிறைக்கும் காட்சி நம் மனதை பண்படுத்தாததற்குக் காரணம் கலப்பையோ உழவனோ அல்ல! மாறாக பணத்தோடு கடையேறினால் கிடைக்கும் ஐ ஆர் 8ம், சம்பா பசுமதி பொன்னி போன்ற நளின அரிசிகளும்தான். போதாததற்கு இரண்டு ரூபாய் அரிசி வேறு அரசாங்கம் வாரியிறைக்கின்றது.</p>
<p>கலப்பையை எண்ணும்தோறும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் தொட்டுணர்ந்த ஒரு பரவச உணர்வு ஏற்படுகின்றது. இரண்டு எருதுகள் கர்ம சிரத்தையாக நடக்க, பறவைகள் தங்கள் பங்கிற்கு தத்தித்தாவியபடி சில பூச்சிகளை கபளீகரம் செய்ய, கலப்பையால் பெயர்க்கப்பட்டு பிடுங்கிவிழும் மண்ணில் காற்றும் வெயிலும் இதமளிக்கும் தண்ணீரும் ஊடுருவ, அங்கு வாழும் மண்புழுவும் தன் நன்றிக்கடன் செய்யவென்று ஒரு காவியத்தோற்றமே காணப்படுகின்றது!</p>
<p>நிலத்தின் தன்மைக்கேற்பவும் கலாச்சாரத்தின் வெளிப்படுதலாகவும் நிலம் பல்வேறு விதங்களில் உழப்படுகின்றது. குதிரை கழுதை எருது மாடு கிடாரி மட்டுமா? நாய் கூட கலப்பையை உழுவதற்காக இழுத்துச்செல்வது நம்மில் பலர் அறிந்து கொள்ளாத உண்மை! உழும் மிருகங்களின் எண்ணிக்கைக் கூட வேறுபட்டு இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.</p>
<p>இயேசுக்கிறிஸ்துவின் விவசாயம் சம்பந்தமான உவமைகள் மற்றும் மேற்கோள்கள் அவரை ஒரு விவசாயியாகவே காட்டுகின்றது!  தனது பட்டறையில் செதுக்கிய கலப்பையைக்கொண்டு அவரும் உழுதிருக்க வேண்டும்! &#8220;நுகத்தில் இருவித மிருகங்களை வைத்துப் பூட்டுவது&#8221; சிறுபான்மையினரை வைத்துச் சொல்லப்பட்ட ஒன்றா என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.</p>
<p> &#8221;கலப்பையில் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பாராதே&#8221; எனும் கூற்று அவரை ஒரு முழு விவசாயியின் வடிவமாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கலப்பையில் கைவைத்துவிட்டு கவனமின்மையாய் இருந்தால், மழுவை இழுத்திச் செல்லும் மிருகத்தின் காலை அது பதம் பார்த்துவிடும் என்ற நுண்ணிய விவசாய அறிவுரையோடு தான் சிலுவையில் ஏற்கும் வியாகுலமான காட்சியை அவர் முன்மொழிவதாகவே எனக்குப் படுகின்றது.</p>
<p>சிலுவை இரத்தப்பலியை நிறுத்தியப் பின்னரும் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவரை வரவேற்க ஆடு கோழி மாடு பன்றி என உயிர் கொல்லத் துணிந்ததன் மர்மம் என்ன? தீர்க்கன் பட்டயங்களெல்லாம் எப்படி உழவுசார்ந்த கருவிகளாக மாறும் என் கனவு கண்டாரோ அதை நிறைவேற்ற வேண்டி இயேசு சிலுவையில் மரித்தும் நாம் மனம் திரும்பாமல் இருப்பதென்ன?</p>
<p>சிலுவை தன் உருவகத்தைப் பெற்றுக்கொண்டது தனிப்பட்ட இயேசுவின் சாவினால் என்று ஏற்றுக்கொள்ளாமல், ஒட்டுமொத்த துன்பம் சகிப்போரின் பொருட்டே கிறிஸ்து அதை மகிமைக்குரியதாக மாற்றினார் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை! அப்படியிருக்க சிலுவை ஒரு கலப்பையைப்போல் இயேசுவை உழுதிட்டப்பொழுதும், எப்படி நாம் அதைக் கண்டுகொள்ளத் தவறினோம்?</p>
<p>தினமும் கலப்பையைத் தன் தோளில் சுமந்து பரிகாசத்திற்கு ஏதுவாய் அரைகுறை ஆடையோடு வயக்காடு செல்லும் உழவனின் வேதனையில் நாம் காணாத கடவுளை, எப்படி சிலுவை சுமப்போராக கற்பனை செய்திட இயலும்? வேதனைகளை தூர நிறுத்திவைத்து, சுகமான பிரார்த்தனைகளை நமது சுய லாபத்திற்காக வேண்டுவது எப்பேற்பட்ட சுயநலம்? தினம் தினம் விவசாயியின் மரணத்தை வானொலி, தொலைக்காட்சி மற்றும் தினசரிகள் கதறியழைத்துச் சொல்லியும், நாம் குற்ற உணர்ச்சியின்றி இறைவேண்டல் செய்யும்போது செவிசாய்க்கப்போகும் கடவுள் யார்?</p>
<p> &#8221;எனக்காக அழாதீர்கள்! உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்&#8221; என்று இயேசு சொன்னது ஒரு விவசாயியின் கூக்குரலாகவே எனக்குப் படுகின்றது! விவசாயியின் சாவு! நிலங்களில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை விளைநிலங்கள் குடியிருப்புகளாகிவிடும் அவலமும் அபாயமும் என நம் எதிற்காலம் கேள்விக்குறியகிப்போனதன் விழைவான உண்மையை அவர் எடுத்துக்கூறுவதை தாமதிக்காமல் புரிந்து கொள்வது நமக்கு அதிக நன்மை பயக்கும்.</p>
<p> வாழ்கையின் அத்தனை கோணங்களிலிருந்தும் கொடூரங்கள் எல்லவற்றையும் எதிற்கொண்டு, வனாந்திரத்திற்கு கலப்பையோடே செல்லும் விவசாயியின் வேண்டுதல் &#8221; இந்தப் பாத்திரம் என்னோடேக் கூட இருக்கக்கூடுமானால் இருக்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது!&#8221;</p>
<p>நாம் என்ன செய்யப்போகிறோம்? சற்று நேரமாவது விழித்திருக்கக் கூடாதா?</p>
<p> (8.4.2005 அன்று எழுதியது. திருத்துவதற்காக ஜெயமோகன் அண்ணனிடம் கொண்டு சென்றேன். பாராட்டினார்கள்)</p>
<p>அருட் திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/273/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/273/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/273/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=273&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/12/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பத்தில் ஒரு பங்கு – பாகம் 4</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/#comments</comments>
		<pubDate>Wed, 05 Aug 2009 21:33:21 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆசீர்வாதம்]]></category>
		<category><![CDATA[தசமபாகம்]]></category>
		<category><![CDATA[திருவிவிலியம்]]></category>
		<category><![CDATA[பவுல் அப்போஸ்தலன்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=271</guid>
		<description><![CDATA[பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.
&#8220;தகுதியுள்ளவர்கள் என நீங்கள்  கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=271&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.</p>
<p>“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.</p>
<p>&#8220;தகுதியுள்ளவர்கள் என நீங்கள்  கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்&#8221; (1 கொரிந்தியர் 16: 3)</p>
<p>இந்த கூற்று கொரிந்து பட்டணத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிரூபமாக எழுதியது. எந்த வசனத்தையும் நாம் நமக்கென்று வாசிப்ப்த்து பொருள் கொள்ளுவதற்கு முன்பதாக அது யாருக்கு எந்த நேரத்தில் எந்த தேவையை முன்னிட்டு எழுதப்பட்டது என புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது.</p>
<p>கொரிந்து பட்டணம் ஒரு துறைமுக நகரம். அங்கே அதிகமும் பணம் செழித்தபடியால் பவுல் அங்கே வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இதைக் கூறுகிறார். பவுலுடைய நோக்கம் வெறும் பணம் கொடுக்கச் சொல்லுவது அல்ல மாறாக அவர்கள் மத்தியில் இருந்த தவறான பழக்க வழக்கங்களை நீக்குவதும் அவர்களை மேன்மையுள்ளவர்கள் ஆகும்படி ஒரு கலாச்சார பகிர்தலை கொரிந்தியர்களுக்கும் (கிரேக்கர்களுக்கும்) எருசலேமில் வாழும் யூதர்களுக்கும் இடையில் நிகழ்த்துகிறார்.</p>
<p>முதலாம் வசனம் கூறும் &#8220;இறைமக்கள்&#8221; எனும் வார்த்தை பல இடங்களில் பவுல் உபயோகிப்பதை நாம் காணமுடியும். (உரோமையர் 1: 7, 2 கொரிந்தியர் 1: 1, பிலிப்பியர் 1: 1) இறைமக்கள் என்று பவுல் கூறும்பொழுது அவர் திருச்சபை அங்கத்தினர்களான மக்களையே குறிப்பிடுகின்றார்.</p>
<p>அப்படியானால் அவர் எருசலேமிலுள்ள யூதர்கள்(இறைமக்கள்) மேல் கரிசனை கொள்ள காரணம் என்ன? நமக்கு தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் முக்கியமான ஒரு தகவல் திருத்தூதர் பணிகள் 11: 27- 30 வரைக் காணக் கிடைக்கிறது.</p>
<p>இவ்விதமாக வறுமையில் உழலும் கிரிஸ்தவர்கள் மேல் பாரம் கொண்டு பவுல் கொரிந்து திருச்சபைக்கும் கலாத்திய திருச்சபைக்கும் பணம் வேண்டி நிரூபம் அனுப்புகிறார்.</p>
<p>வாரத்தின் முதல் நாள் என பவுல் கூறுவதே பவுல் ஓய்வுநாளை முக்கியத்துவப்படுத்தாமல் ஒரு புது நாளை ஆராதனைக்கென்று அறிமுகம் செய்வதைக் காண்கிறோம். கிரிஸ்தவர்களின் கூடுகையை யூதர்களின் மரபை பின்பற்றாதிருக்க பவுல் இவ்விதமாக ஒரு முயற்சியை மெற்கொள்ளுகிறார்.</p>
<p>பவுல் பலவிதங்களில் தனது எதிர்ப்பை யூதர்கள் மேலாக காண்பித்திருந்தாலும், முக்கியமாக அவர்களது பழக்கவழக்கங்களை கேள்வி எழுப்பியபடியே அவர் தனது தரப்பை முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். தவறிப்பொய் கூட அவர் &#8220;பத்திலொருபங்கை&#8221; முன்னிறுத்த விழயவில்லை. பகிர்ந்து வழ்வதை அவர் போற்றியிருக்கிறார் என்பதைய் மட்டுமே நாம் காண முடியும்.</p>
<p>தொடரும்</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு</p>
<p><a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p><a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>mobile: 09870765181</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/271/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/271/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/271/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=271&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/05/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நோவா எனும் இயற்கையியலாளர்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Sun, 02 Aug 2009 23:01:23 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[இயற்கையியலாளர்]]></category>
		<category><![CDATA[நோவா]]></category>
		<category><![CDATA[பேழை]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=269</guid>
		<description><![CDATA[ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.
 
மிருகங்களை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=269&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.</p>
<p> </p>
<p>மிருகங்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் சுலபமான வேலை அல்ல. என்ன தான் நமக்கு அவற்றின் மீது பாசம் இருந்தாலும், அவற்றிற்கான நேரம் என்பது கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். நேரம் மாத்திரம் அல்ல அவைகளின் உணவும் தேவையான நேரத்தில் மருத்துவமும் அவற்றை முழுவதும் அறிந்தவராலே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். எனக்கு நோவாவும் பேழையும் ஞாபகத்துக்கு வந்து போயின. என்னே ஒரு அற்பணிப்பு அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்?</p>
<p> </p>
<p>ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் புராணீகமானவைகள் என்ற கருத்து இறையியலாளர் மத்தியில் உண்டு. ஆகவே நானும் இவற்றை முக்கியத்துவப்படுத்தாமல் கடந்துபோன நாட்கள் உண்டு. ஆயினும் புராண இறையியல் என்பது தன்னுள்ளே ஒரு மேலான இறையியலை நிறுத்தி அதை வாசிப்பவருக்கு எளிமைப்படுத்தி சொல்லும் விதமாகையால் அதை ஆழ்ந்து படிக்க விரும்பினேன்.</p>
<p> </p>
<p>கிட்டத்தட்ட முன்னூருக்கும் அதிகமான வெள்ளப்பெருக்கு கதைகள் உலகெங்கும் பழங்குடிகளால் சொல்லப்பட்டு வருகின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அவ்விதமாகவே நோவாவின் கதையும் &#8220;சுடப்பட்ட&#8221; கதை என்பதை வலியுறுத்தும் விதமாக பல முன்னுதாரண இலக்கியங்கள் சுட்டப்படுகின்றன.</p>
<p> </p>
<p>நோவா குறித்த எனது புதிய புரிதலுக்கான காரணம் நான் வாசித்த &#8220;தெ நியூ நோவா&#8221; என்கிற ஜெரால்ட் டெயூரெல்லின் புத்தகமே. ஜெரால்ட் டெயூரெல் மிருகங்களின் மீது மிகுந்த விருப்பம் உடையவர். சிறு வயதில் இருந்தே அவர் தனது கவனத்தை பிராணிகள் மீது திருப்பியிருந்தார். தனது வீட்டில் ஆமை, பாம்பு, தேள் போன்ற பிராணிகளை பிடித்துவந்து பத்திரமாக அடைத்து தனது உடன்பிரந்தவர்களை அதிகமாகவே சோதித்ததை &#8220;மை ஃபாமிலி அன்ட் அதர் அனிமல்ஸ்&#8221; என்ற தனது புத்தகத்திலே விரிவாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார்.</p>
<p> </p>
<p>&#8221; தெ நியூ நோவா&#8221; ஒரு மிருக காட்சி சாலைக்கு தெவையான மிருகங்களை ஜெரால்ட் ட்யூரெல் பிடிக்கச் செல்லும் காட்சிகளை விவரிக்கிறது. முதல் சில பக்கங்களிலேயே அவர் பிடித்த மிருகங்களுடன் அவர் மாரடிக்கும் காட்சி மிருகங்களை பிடிப்பதை விட அவைகளை பராமரிப்பதன் சிரமத்தையும், அதன் பின் காணப்படும் அற்பணிப்பும் நமக்கு தெளிவுபெறும் விதமாக அவர் விளக்கியிருப்பார்.</p>
<p> </p>
<p>இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கும்போது எழுதப்பட்ட அல்லது வாய்மொழி கூற்றுகளாக சொல்லப்பட்டவையே முதல் 5 புத்தகங்களான &#8220;தோரா&#8221; எனப்படுபவை. அடிமைகளாக இருந்த காலத்தில் அந்த தேசத்தில் இருத்த கதைகள் பலவற்றை தங்கள் நம்பிக்கை சார்ந்து யூதர்கள் மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக கி மு 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட &#8220;கில்கமிஷ் காவியம்&#8221; இதேபொன்ற சாயலையுடைய வெள்ளப்பெருக்கை பதிவுசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
<p>மனிதர்களின் அக்கிரமம், கடவுளின் தண்டனை, நோவாவின் அற்பணிப்பு, கடவுளின் உடன்படிக்கை என்பதாக நோவாவின் கதையை நாம் பகுத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் அற்புதங்கள் எனும் வடிவிலேயே அடிப்படைவாத கிறிஸ்தவ சமூகம் காண முற்படுகிறது. இறைவனின் அற்புத சக்தியை எள்ளளவும் நாம் குறத்து மதிப்பிட இயலாது என்றாலும், நோவாவை அவர் அழைத்த காரனம் மனிதர் மேல் கடவுள் சுமத்திய பொறுப்பு நம் நினைவில் நிற்கவேண்டும் என்பதே!</p>
<p> </p>
<p style="text-align:left;">மனிதர்களின் அக்கிரமம் என்பது, சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாக மாறிப்போனது என்பதாகவே நாம் கண்டுகொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான உறவு சுட்டிக்காட்டபடாத வரையில், மனிதர்கள் உலகம் தங்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்றும், அதை எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியும் என்பதையுமே கருத்தில் கொண்டிருந்தனர் என்பதையும் காண முடிகிறது. பூமியின் மீதிருந்த மனிதர்களின் உறவு இயற்கையை பேணாமல் சீர்கெட்டு இருந்ததனால் கடவுள் உலகத்தை காக்கும் பொருட்டு அதை அழிக்க துணிந்தார் என நாம் கொள்ளலாம். அழிவும் பிறப்பும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான தருணம் இது.</p>
<p style="text-align:left;"> </p>
<p>கடவுளின் தண்டனை என்பது மனிதர்கள் சீர்படுவதற்கே எனும் கருத்தாக்கத்தை இங்கே பதிவு செய்வதை காண்கிறோம். குறிப்பாக கைதிகளாய் இருத்த யூத மக்கள் சீர்படவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியும் இந்த கதை கூறப்பட்டிருக்கும்.</p>
<p> </p>
<p>நோவாவின் 600 வயது, அவர் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதராக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அவரது முதிர்ச்சி மற்றெல்லா தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் தம்மை அவர் விலக்கி, பிறர் தன்னை பின்பற்றும்படியான சிறந்த வாழ்வை அவர் கடைபிடித்திருக்கிறார் என பதிவாகியிருக்கிறது. எனினும் அன்றய கால சூழ்நிலையில் மக்கள் தமது விருப்பப்படி, வாழ்ந்தபடியால், நோவா காட்டிய முன்னுதாரணம் எடுபடவில்லை.</p>
<p> </p>
<p>கடவுள் தாம் நேசித்த உலகத்தை காப்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில், நோவாவிடம் ஒரு பேழையை உண்டுபண்ண கூறுகிறார். 300 முழம் நிளம், 70 முழம் அகலம், 40 முழம் உயரம் என்பதும் கொப்பேர் மரத்தில் அதை உண்டுபண்ணு என்பது ஒரு பேழையை உண்டுபண்ணுவதற்கு போதுமான தகவல் அல்ல. ஆயினும் அனத்து ஜீவ இராசிகளையும் காப்பற்ற வேண்டி மிக பிரம்மாண்டமான ஒரு புகலிடத்தை உண்டுபண்ண கடவுள் நோவாவிற்கு கொடுத்த கரிசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p>
<p> </p>
<p>நோவாவின் அற்பணிப்பு நாம் ஊன்றி கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஜோடியாக பறவைகளையும் மிருகங்களையும் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை.  அவை தானாக பேழை நோக்கி வந்தது என்பது  அல்ல கடவுளின் செயல், மாறாக நோவாவிற்கு அவர் கொடுத்த நேரம் மற்றும் ஞானம் அதை அவன் எவ்விதமாக பயன்படுத்தினான் என்பதையே கடவுளின் செயலாக நாம் கருதவேண்டும். தனது படைப்பை ஒருவன் புரிந்துகொள்ளும்போது அவன் &#8220;கடவுளோடு நடக்கிறவன்&#8221; ஆகிறான்.</p>
<p> </p>
<p>கடவுளின் உடன்படிக்கை நம்மை நாமே மறு பரிசீலனை செய்ய அழைக்கிறது. ஊலகத்தை இனி அவர் அழிப்பதில்லை என உடன்படிக்கை செய்கிறார். மனிதர்களோ தங்களால் ஆனமட்டும் அதை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் &#8211; சில நேரங்களில் அறிந்தும் பல வேளைகளில் அறியாமலும்.</p>
<p> </p>
<p>இன்றைக்கும் நமக்கு நோவாக்கள் தேவை. உயிரினங்களை பேழையிலோ, மிருக காட்சி சாலையிலோ அடைப்பதற்கு அல்ல மாறாக பல்லுயிர்கள் தங்கள் தங்கள் வாழ்விடங்களில் பத்திரமாக தங்கவும், அவைகளை பேணுவதற்கும், அவைகளால் நமது சந்ததிகள் காப்பற்றப்படுவதற்கும் வேண்டிய இயற்கையியலாளர்கள் எனும் நோவாக்களே தேவை! இவ்விதமான நோவாக்களின் வேலையில் நாமும் பங்கெடுக்கவில்லையென்றால்,  பேழை புறப்பட்டுவிடும் நாமோ வெள்ளத்தில் மாண்டுபோவோம்.</p>
<p>தொடர்பிற்கு</p>
<p>அருட்திரு காட்சன் சாமுவேல்</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/269/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=269&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/08/02/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இயேசு துப்புகிறார்</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/06/24/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/06/24/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 24 Jun 2009 23:04:09 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[உமிழ்தல்]]></category>
		<category><![CDATA[உமிழ்நீர்]]></category>
		<category><![CDATA[எச்சில்]]></category>
		<category><![CDATA[துப்புதல்]]></category>
		<category><![CDATA[மெல்லுதல்]]></category>
		<category><![CDATA[வெற்றிலை]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=261</guid>
		<description><![CDATA[மும்பை ஒரு எச்சில் நகரம். காலை முதல் பின்னிரவுவரை அது உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் உமிழ்நீர் பெருக்கெடுத்து நகர்வலம் வருகின்றன, வண்ண ஃப்ளெக்சி போர்டைவிட தீற்றல்கள் நிறைந்த பூமியிது. தொடர் வண்டி, அதன் நிலையங்கள், அதன் நடைபாதைகளின் ஓரங்கள், அரசு அலுவலகங்கள், அதன் சுவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளின் முக்குகள் என அவை வியாபித்திருக்கின்றன.
எச்சில் வரலாறு முக்கியமானதில்லை என நாம் புறந்தள்ளிவிட இயலாது. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை மென்று கொண்டிருப்பதே &#8220;டைம் பாஸ்&#8221; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=261&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மும்பை ஒரு எச்சில் நகரம். காலை முதல் பின்னிரவுவரை அது உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் உமிழ்நீர் பெருக்கெடுத்து நகர்வலம் வருகின்றன, வண்ண ஃப்ளெக்சி போர்டைவிட தீற்றல்கள் நிறைந்த பூமியிது. தொடர் வண்டி, அதன் நிலையங்கள், அதன் நடைபாதைகளின் ஓரங்கள், அரசு அலுவலகங்கள், அதன் சுவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளின் முக்குகள் என அவை வியாபித்திருக்கின்றன.</p>
<p>எச்சில் வரலாறு முக்கியமானதில்லை என நாம் புறந்தள்ளிவிட இயலாது. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை மென்று கொண்டிருப்பதே &#8220;டைம் பாஸ்&#8221; என எண்ணும் மக்கள் திரள், மாண்ணின் மைந்தர்கள், வந்தேரிகள் என அது ஒரு பெரும் ஜாதி. எனினும் ஒருவரும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது, நாம் நமது பங்கிற்கு &#8216;அவல்&#8217; மெல்லுகிறோமில்லையா? அதுபோலத்தான் அவர்களுக்கு &#8216;அவல்&#8217; மெல்லும் நேரத்தில் &#8220;வேறு ஏதாவது&#8221; மெல்லமுடியுமானால் அன்றைய நாள் இனிய நாளாக வழிந்துவிடும். மன்னிக்கவும் கழிந்துவிடும். உழைப்பின் பக்கவாத்தியம் தானே மெல்லுதல் என்னும் புரிதலோடே மெல்லுகிறார்கள்.</p>
<p>சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தக்கலையிலுள்ள ஒரு பழைய பொருட்களை வாங்கும் கடையில் பழைய பித்தளை வெற்றிலைத்தட்டை விலைக்கு வாங்கினேன். அதற்கு மூன்று கால்கள் இருந்தன. மிகவும் ரசனையுடன் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணியபடியே அந்த கடைக்காரரிடம் &#8220;அண்ணே! நா இது போல இதுவரப் பாத்ததே இல்ல! சாப்பாட போட்டு சாப்பிடும்போது சப்போட் வேற அழகாக குடுத்திருக்காங்க&#8221; என்றேன். என்னோடு நன்கு பழகியவர் ஆனபடியால், ஸ்னேகமாக என்னைப் பார்த்துவிட்டு, &#8220;நீங்க, இதப் பாத்ததில்லியா? பத்திருபது வருஷத்துக்கு மின்னால எல்லா வீட்டுலயும் இத வைச்சிருப்பாங்க, வெத்தில தட்டுண்ணு செல்லியத கேட்டுட்டில்லியா?&#8221; என்றார்.</p>
<p> <br />
நான் அதை அபூர்வமான ஒரு பொருள் எனக்கருதி அதைப் பார்த்தபடி அதன் அழகில் மயங்கி வாங்கிக் கொண்டேன். வீட்டில் வந்து அம்மவிடம் அதைக் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே சொல்லிவிட்டார்கள் &#8220;வெத்தில தட்டு&#8221;. எப்படிமா உங்களுக்கு தெரியும்? தாத்தா பெரிய பிரசங்கியாரில்லையா? எப்படி இதை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் இதை வைக்க தாத்தா அனுமதித்திருக்க மாட்டார்களே, எங்கே பார்த்தீர்கள்? என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டேன். &#8221; சாதாரணமா எல்லார் வீட்லயும் இருக்கும்&#8221; அம்மா எந்த வித அதிசய  முகபாவமும் காட்டாமல், இது கூட உனக்குத்தெரியாதா என்பதுபோல என்னைப் பர்த்தார்கள்.</p>
<p>நமது மூதாதையர்கள் வெற்றிலை குதப்பியிருக்கிறார்கள் என்பதும், அதையும் வரவேற்கும் விதமாக ஒரு சடங்காக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியத்தகவலே. வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடுவது விசேஷித்த தருணங்களில் தான் என்பதை எண்ணும்போது ஒரு முரண்பாடான கருத்து அதனுள் ஒட்டிகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.</p>
<p>முகத்தில் எச்சில் உமிழ்தல் கண்ணியமற்றது என்பதை நம் கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் திருவிவிலியத்திலும் நாம் காண இயலும்.<br />
<strong>&#8230;.&#8221;அவள் தந்தை அவள் முகத்தில்  காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்படவேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழு நாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்&#8221; என்றார் (எண்ணிக்கை 12 : 14)</strong><br />
<strong>அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, &#8221; தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்&#8221; என்று கூறுவாள். (இணைச் சட்டம் 25 : 9)</strong><br />
<strong>என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னை விட்டு விலகிப் போகின்றனர்; என் முன் காறித்துப்பவும் அவர்கள் தயங்கவில்லை (யோபு 30 : 10)</strong><br />
<strong>பின்பு அவருடைய முகத்திலே துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்&#8230;.(மத்தேயு 26 : 67)</strong><br />
<strong>அவர்மெல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் (மத்தேயு 27 : 30</strong>)</p>
<p>எச்சில் என்பது நாம் வெறுக்கத்தக்க ஒன்று மட்டுமே என நினைபது தான் தவறு. எச்சில் அதற்கேற்ற இடங்களில் தனது நிலைகளை வெகுவாக மாற்றிக்கொண்டுள்ளதை உணர்ந்தப்போது நான் அப்படியே சந்தோஷத்தில் குதித்துவிட்டேன். ஆம்! &#8220;இயேசு துப்புகிறார்&#8221; என்பது ஒரு ஆழ்ந்த இறையியல் நோக்கி நம்மை அழைக்கும் ஒரு வெற்றிலைத்தட்டுடன் நிற்கிறது.</p>
<p>&#8220;அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்&#8221;  என்பதை உணர்ந்து &#8220;முறுக்கான முறுக்கப் போவோம்!&#8221;</p>
<p>எனது நண்பன் ஒருவன் பாலியல் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் எளிய அடையாளமாக அவர்கள் வெற்றிலை குதப்புவார்கள் என நான் கல்லூரியில் படிக்கும் போது சொல்லியிருந்தான். நான் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த போது, எய்ட்ஸ் நோயுற்றோருக்கான நல்வழ்வு திட்டங்களை செய்து கொண்டிருந்த ஒரு சக ஊழியரிடம் எனக்கு ஒரு பலியல் தொழிலாளியைப் பார்க்க வேண்டும் என்றேன். என்னை உடுருவிப் பார்த்த அனுபவமிக்க அவர் கூறியது என்னவென்றால், &#8220;நமது சகோதரிகளைப் போன்றும், தாயைபோன்றுமே அவர்கள் இருப்பர்&#8221;. துணுக்குற்ற எனக்கு அதன் அத்தத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.</p>
<p>காதலர்களுக்க்கிடையேயான எச்சில் பறிமாற்றம், தாய் குருவி தன் குஞ்சிற்கு அளிக்கும் எச்சில் இரை, மாற்று திறன் பெற்றவர்கள் கட்டுப்படுத்த இயலாத எச்சில் ஒழுக்கு, கர்த்தருடைய பந்தியில் நாம் ஒரே பாத்திரத்தில் பங்கு பெறுவது என அது ஐக்கியத்தின், அன்பின், வாழ்வின், நிதர்சனத்தின், நெருக்கத்தின் அடிப்படையான உணர்வுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகிறது.</p>
<p>மாற்கு ஏழு மற்றும் எட்டு அத்தியாயங்களில் காணப்படும் இயேசு துப்புகின்ற நிகழ்வுகள் எச்சிலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என அறிவுறுத்துகின்றன. இயேசு ஏன் அதைச் செய்தார் எனும் கேள்வி இவ்விடங்களில் எழுப்பப்படுவதை விட, எவ்வித கரிசனையுடன் அவர் செய்தார் என் கண்டு கொள்வதே அதன் இறையியல் அடிப்படை என்பது என் தாழ்மையான கருத்து.</p>
<p>இயேசு  துப்பி குணமாகிய இருவரில் ஒருவர்  பார்வை அற்றவர் மற்றொருவர் திக்கிப் பேசுபவர். இருவரையுமே இயெசு  தனியாக ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் துப்பி அவர்களைக் குணப்படுத்துகிறார். எச்சில் குறித்த மக்களின் மன பிம்பங்க்களை அவர் சரிவரப் புரிந்திருந்ததினால் தான் அவர் இவ்விதமாக பொது இடங்களில் அவர்களை குணப்படுத்தாமல் தனியாக அழைத்துச்சென்றிருக்க வேண்டும்.</p>
<p>குணப்படுதல் என்பது ஒரு தனி நபர் சார்ந்த அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் வாய் பயனற்று அசைந்துகொண்டிருக்கிறது. இயேசுவுக்கு தெரிந்திருக்கும்  &#8220;ஊர் வாயை மூட முடியுமா என்ன?&#8221;</p>
<p><strong>( எச்சரிக்கை: &#8220;இயேசு துப்புகிறார்&#8221; என்ற பெயரை காப்புரிமை செய்துள்ளோம்! ஆகவே யாரும் &#8220;இயேசு துப்புகிறார்&#8221; எனும் பெயரிலே ஊழியம் செய்வதோ, தொலைக்காட்சி நிகழ்வுகளை நடத்துவதோ, இதழ்களை அச்சிடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும் பெருந்தொகை கொடுத்து இந்த அரியப் பெயரை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்)</strong></p>
<p><strong>அருட் திரு காட்சன் சாமுவேல்</strong></p>
<p><strong>தொடர்பிற்கு</strong></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/261/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/261/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/261/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/261/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/261/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/261/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/261/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/261/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/261/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/261/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=261&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/06/24/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பத்தில் ஒரு பங்கு – பாகம் 3</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/06/23/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/06/23/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/#comments</comments>
		<pubDate>Tue, 23 Jun 2009 21:15:01 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆசீர்வாதம்]]></category>
		<category><![CDATA[தசமபாகம்]]></category>
		<category><![CDATA[திருவிவிலியம்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=258</guid>
		<description><![CDATA[ பத்தில் ஒரு பங்கைக் குறித்து விளம்புபவர்களுக்கெல்லாம் திருவிவிலியம் பல நிகழ்வுகளை தெளிவுறக் காட்டும், எனினும் சரியான புரிதல் இல்லாமையாலும் முன் கருத்தோடு விவிலியத்தை அணுக நேரிடுவதாலும் அவை திருச்சபையினரிடம் திரித்து கூறப்படுகின்றன. இவ்வாறாக நாம் காணத்தக்க  திரிபு விளக்கம் பெற்றவருள் ஒருவர் மூதாதையரில் இளையவரான  யாக்கோபு.
இந்திய மனது ஏற்கத்தக்க எந்த நற்குணங்களும் இல்லாதவன், ‘எத்தன்’ எனும் பேருக்கு ஏற்றவிதமாக, தனது தந்தையை, மாமனை மற்றும் தமையனை ஏமாற்றியவன். அவன் கடவுளையே ஏமாற்றத் துணிந்தவன்  எனும் நிகழ்வு ஒன்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=258&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p> பத்தில் ஒரு பங்கைக் குறித்து விளம்புபவர்களுக்கெல்லாம் திருவிவிலியம் பல நிகழ்வுகளை தெளிவுறக் காட்டும், எனினும் சரியான புரிதல் இல்லாமையாலும் முன் கருத்தோடு விவிலியத்தை அணுக நேரிடுவதாலும் அவை திருச்சபையினரிடம் திரித்து கூறப்படுகின்றன. இவ்வாறாக நாம் காணத்தக்க  திரிபு விளக்கம் பெற்றவருள் ஒருவர் மூதாதையரில் இளையவரான  யாக்கோபு.</p>
<p>இந்திய மனது ஏற்கத்தக்க எந்த நற்குணங்களும் இல்லாதவன், ‘எத்தன்’ எனும் பேருக்கு ஏற்றவிதமாக, தனது தந்தையை, மாமனை மற்றும் தமையனை ஏமாற்றியவன். அவன் கடவுளையே ஏமாற்றத் துணிந்தவன்  எனும் நிகழ்வு ஒன்று தான் இந்திய கதை தெனாலிராமனோடு ஒத்துப்போகிறது. யாக்கோபா? கடவுளையா? ஏமாற்றினானா? இருக்காது! என மார் தட்டி பேசும் திருச்சபையினரே! அவன் அப்படித்தான்…..அப்படியே பலநேரங்களில் அவனை முன்னிறுத்தும் நாமும்…&#8230;</p>
<p>வெகு அபூர்வமாகவே அவனில் இருந்து நாம் நற்குணங்களை எடுத்துக்க்கொள்ளும் நிகழ்வுகள் காணப்பெறுகின்றன. குறிப்பாக அவன் கடவுளுக்கென்று தூண்களை நாட்டி எண்ணை வார்த்த நேரங்கள், தனது சகோதரனுக்கு அவன் அனுப்பும் மந்தையில் ஒரு பங்கு, தீனாவிற்காக அவன் மகன்கள் பழிவங்கியபோது அவர்களை கடிந்து கொண்டது&#8230; எனினும் எல்லா இடங்களிலும் அவனது உயிர் பயம் மற்றும் சுய விருப்பங்களே மேலோங்கி இருக்கின்றன என்பதையும் நாம் காணுகிறோம்.</p>
<p>ஈசாக்குடைய வாழ்விலே பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றதை நாம் திருவிவிலியத்தில் காணயியலாது. மூதாதையரில் (முற்பிதாக்களில்) ஒருவர் செய்யத்தவறியதை ஏன் மற்ற இருவர் செய்யவேண்டும்? எனும் கேள்வி எழுவது இயல்பே! அதற்கு விடையாக ஆபிரகாமின் வாழ்விலே பத்தில் ஒரு பங்கு சூழ்நிலை சார்ந்தது மட்டுமே என்பதைக் கண்டுகொண்டோம், யாக்கோபோ தனது  சுய விருப்பம் நிறைவேறவேண்டி ஏறெடுக்கும் ஒரு வேண்டுதலின் பொருத்தனையாக பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றது.</p>
<p>தொடக்க நூல் 28ஆம் அத்தியாயம் யாக்கோபு பெற்ற ஒரு ஆச்சரிய கனவை விவரிக்கின்றது. தனது முதாதையருக்கு வாக்களித்த கடவுள், யாக்கோபுக்கும் கனவில் தோன்றி ஆசி பொழிகிறார். அந்த ஆசி பின்வருமாறு&#8230;</p>
<p><strong>13…. “உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே.  நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உன் வழி மரபிற்கும் தந்தருள்வேன். 14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு திசைகளில் பரவிச் செல்வாய்.  ஊன்னிலும் உன் வழி மரபிலும்  மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. 15  நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும்  உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில் நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்</strong>.</p>
<p>மேற்கூறிய வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது, நமது கடவுள் எவ்வித தாராளச் சிந்தை உள்ளவர், நம்மைத் தேடிவரும் அன்பு கொண்டவர், மூதாதையருக்கு அளித்த தமது வாக்கை உறுதிப்படுத்துகிறவர்,  என்று புரிந்துகொள்ள முடியும். எந்தவித கட்டுப்பாடுகளும் யாக்கோபுக்கு இல்லை ஆசிகள் மட்டுமே கடவுள் அவனிடம் கூறுகிறார். எதற்காக? தன்னை நம்பிய ஆபிராமின் வழிமரபினரான யாக்கோபும் தன் மேல் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதே அல்லாமல் கடவுள் அவனிடம் வேறெந்த கருமத்தை (பணியினை) எதிர்பார்த்திருக்க இயலும்? </p>
<p>நேரடியாக (அல்லது கனவில்) வெளிப்பாடு பெற்றிருந்தாலும், இதைவிட முக்கிய இரண்டு நிகழ்வுகள் (ஆசிகள்) அவனுக்கு அருளப்பட்டுள்ளன. ஒன்று பரம்பரையாக அவனுக்கு  கிடைக்கப்பெற்றது அதாவது அவனது பாட்டனர் ஆபிரகாம் மூலமாக. நாம் ஒத்து பர்ப்பதற்கு நேராக இதோ அந்த விவிலியப் பகுதி</p>
<p> <strong>தொடக்க நூல் 12 : 1 &#8211; 3<br />
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, &#8220;உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடத்திலிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல். 2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச்செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்&#8221; என்றார்.</strong></p>
<p>இது முதன் முதலாக ஆபிராமுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசி, மறுபடியுமாக இன்னுமொரு ஆசி  அவர் 13ஆம் அத்தியாயத்தில் பெறும் பொழுது அது ஆபிராமின் வழிமரபினருக்கு (அதாவது யாக்கோபிற்கும்) பொருந்துவதாக அமைகிறது!</p>
<p><strong>14&#8230;.&#8221; நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். 15 ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும்  கொடுக்கப்போகிறேன். 16 உன் வழி மரபினரை பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழி மரபினரையும் எண்ணலாம். 17 நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்&#8221; என்றார்.</strong></p>
<p><strong>&#8220;அதற்கு ஆபிராம் என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளுவேன்?&#8221;  என்று ஆபிராம் வினவியபோது கடவுள் அவனிடம் சில பொருட்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார். (தொடக்க நூல் 15: <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_cool.gif' alt='8)' class='wp-smiley' /> </strong></p>
<p><strong>&#8220;மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள  செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டு வா&#8221; (தொடக்க நூல் 15: 9)</strong></p>
<p>என்கிறார்&#8230; மிகப்பெரிய செல்வந்தனான ஆபிராமிடம் கடவுள் கேட்டது ஒரு எளிய காணிக்கை தான். அதுவும் அவன் ஒரு அடையாளத்தை எதிர்னோக்கியிருக்கும்போதே அல்லாமல் செய்து தர வேண்டி அவன் கடவுளிடம் எந்த ஒரு மன்றாட்டையும் வைக்கவில்லை. கடவுளோ ஆசி வழங்குபவராகவே இருக்கிறார்.</p>
<p>மறுபடியுமாக ஒரு ஆசியை யாக்கோபு பெறுவதை நாம் அனைவரும் நினைவு கூறலாம். தனது தமையனிடமிருந்து தலைமகனுரிமையை அபகரித்ததுமல்லாமல் தனது தாயின் சொற்படி கேட்டு அவன் தனது தந்தையாம் ஈசாக்கை ஏமாற்றி பெற்ற ஆசியே அது.</p>
<p><strong>தொடக்க நூல் 27 : 27 &#8220;&#8230;.. இதோ என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்! 28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திரட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 29 நாடுகள் உனக்கு பணி புரிந்திடுக! மக்கள் உனக்கு பணிந்திடுக! உன்றன் சகோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவோர் வழமுடன் வாழ்க!&#8221;</strong></p>
<p>தாத்தாவின் சொத்து எப்படி பேரனுக்குரியதோ அது போலவே தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு பொருந்துமல்லவா? எனில் ஆசி பெற்ற பரம்பரையில் வந்தும், தனது தந்தையிடமே தனது  சொந்தத் தமையனுக்கான ஆசியை அபகரித்தும்  நிற்காத &#8220;ஆசி வெறி&#8221;   கடவுள் தனக்கு காட்சியளித்து நம்பிக்கை அளித்தபோதும் அவனுள் வெதும்பிக்கோன்டிருந்தது.</p>
<p>இந்த இடமே நாம் சிந்திக்க வேண்டிய இடமாக நான் கருதுகிறேன். யாக்கோபிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் &#8220;தசமபாக&#8221; சிந்தனை  எத்துணை சிறுமையானது? ஒரு பெரிய நாட்டையே உனக்கு நான் தருகிறேன், நீ என்னடாவென்றால், துணி தருவாயா, சாப்பாடு போடுவாயா, நான் செய்யும் எல்லா அக்கிரமங்களுக்கும் (ஹும்&#8230;வேறென்னச் சொல்ல?)  துணை நின்று  (தமையனை ஏமாற்றுவேன், தந்தையை ஏமற்றுவேன், மாமனாரை ஏமாற்றுவேன்&#8230;) என்னைக் காப்பாற்றினால், அப்போது தான் நீர் எனக்கு கடவுளே! அதுவரைக்கும் எனக்கும் உனக்கும் ஒட்டு உறவு கிடையாது. கூடவே கடவுளுக்கு போனசாக பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதாக வாக்களிக்கின்றான். (கல் தூண் நாட்டி எண்ணை வார்த்தது ஒரு &#8216;பெரிய அடவு&#8217;&#8230;.)</p>
<p>எங்கும் நான் தேடிப்பார்த்தபோது தனது பொருத்தனையை யாக்கோபு நிறைவேற்றினதைக் காண இயலவில்லை. எத்தனில்லையா? கடைசி வரை அவன் அதைக் கொடுக்கவில்லை! ஏமாற்றிவிட்டன்! (கடவுள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்)  &#8220;ஆமாம் பார்ட்டி எஸ்கேப்&#8230;.&#8221;</p>
<p>தொடரும்</p>
<p>அருட் திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                <a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>phone 09870765181</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/258/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=258&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/06/23/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பத்தில் ஒரு பங்கு – பாகம் 2</title>
		<link>http://pastorgodson.wordpress.com/2009/06/19/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/</link>
		<comments>http://pastorgodson.wordpress.com/2009/06/19/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Fri, 19 Jun 2009 22:33:32 +0000</pubDate>
		<dc:creator>pastorgodson</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[ஆசீர்வாதம்]]></category>
		<category><![CDATA[தசமபாகம்]]></category>
		<category><![CDATA[திருவிவிலியம்]]></category>

		<guid isPermaLink="false">http://pastorgodson.wordpress.com/?p=253</guid>
		<description><![CDATA[தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வை ஒட்டி பெரும்பாலான போதகர்கள் தங்கள் செய்தியை அமைக்காமல் “பத்தில் ஒரு பங்கு” எனும் வார்த்தையை மட்டும் அதில் கண்டு அதை தங்களுக்கேற்றபடி வளைக்க முற்படுகின்றனர்.
“அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்” என்பதும், அவர் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர் &#8216;உன்னதமான கடவுளின் அர்ச்சகராயிருந்தார்&#8217; என்பதுமே இந்தப்பகுதியின் கவற்சிக்கான காரணம். மற்றபடி இந்தப் பகுதி கூற வருவது பத்திலொரு பங்கின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=253&subd=pastorgodson&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வை ஒட்டி பெரும்பாலான போதகர்கள் தங்கள் செய்தியை அமைக்காமல் “பத்தில் ஒரு பங்கு” எனும் வார்த்தையை மட்டும் அதில் கண்டு அதை தங்களுக்கேற்றபடி வளைக்க முற்படுகின்றனர்.</p>
<p>“அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்” என்பதும், அவர் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர் &#8216;உன்னதமான கடவுளின் அர்ச்சகராயிருந்தார்&#8217; என்பதுமே இந்தப்பகுதியின் கவற்சிக்கான காரணம். மற்றபடி இந்தப் பகுதி கூற வருவது பத்திலொரு பங்கின் முக்கியத்துவத்தைக் குறித்தோ அல்லது ஆபிராம் செய்ததை நாம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலோ அல்ல.</p>
<p>பத்தில் ஒரு பங்கு  எனும் வார்த்தை திருவிவிலியத்தில் முதன் முறையாகக்  காணப்படும் பகுதியானபடியினாலும், ஒத்துப்பார்பதற்கு எளிமையாக இருக்குமென்பதாலும் தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் முழுவதையும் இணைத்துள்ளேன். வாசகர்கள் கவனமாக வாசிக்க வேண்டுகிறேன் (வசனங்களைக் கடந்து போகும் தவறை இப்பொழுதும் செய்துவிடாதீர்கள், இது புரிதலுக்கான அடிப்படை)</p>
<p>1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்  கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது, 2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராக போர் தொடுத்தனர். 3 அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.</p>
<p> 4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். 5 ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்த்ரோத்து கர்னமியிமிலிருந்த இராபாபியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும் 6 சேயிர் மலைப்பகுதியிலிருந்த ஓரியரையும்,  பாலை நிலத்தின் எல்லையிலிருந்த  ஏல்பாரான் வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.</p>
<p>7 அவர்கள் திரும்பும் வழியில்  காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.  8 அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று, 9 ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும் – ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர் தொடுத்தனர்.</p>
<p>10 இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பி பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர். 11 வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவு பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர். 12 அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களியும் கவர்ந்து கொண்டு சென்றனர்.</p>
<p>13 தப்பி வந்த ஒருவான் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். ஆப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்துவந்தார். அவர்கள் அபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். 14 தம் உறவினர் கைதியாக கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்வியுற்றதும் , ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முன்னூற்றுப் பதினெட்டுப் பேரைத்  திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.</p>
<p> 15 அவரும் அவர் ஆள்களும் அணி அணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத்த் தாக்கித்  தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத்துரத்திச் சென்றனர். 16 அவர் எல்லா செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.</p>
<p>17 ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்க சோதோம் அரசன் வந்தான். 18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். 19 அவர் ஆபிராமை வழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!”என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.</p>
<p>21 சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக்கொள்ளும்” என்றான். 22 அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:  23  ‘நான் தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்&#8217; என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். 24 இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.<br />
மேற்கூறிய வேத பகுதியை சற்று சுருக்கி அதன் சாராம்சத்தைப் பார்ப்போமானால். </p>
<p>கப்பம் கட்டாததினாலும் தனக்கு விரோதமாக கிளர்ச்சி செய்வதனாலும் கெதர்லகோமர் தன்னோடிருந்த அரசர்களைச் சேர்த்து படையெடுத்து வருகிறான். லோத்து வாழும் சொதோமின் அரசனுடன் சேர்த்து 5 அரசர்கள் எதிர்த்து நின்ற போதும், போரில் தோல்வியத் தழுவுகின்றனர்.  தோல்வியுற்ற அரசைச் சார்ந்த எல்லாவற்றையும், ஆள்கள் உட்பட வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.</p>
<p>இந்தச் செய்தி ஆபிராமுக்கு எட்டுகிறது.  தனது சகோதரனும் அவனோடு அவன் சொத்துக்களும் ஆட்களும் கொள்ளை போவதை அவன் கேள்வியுற்ற போது, தன்னோடு இன்னும் மூவரைச் சேர்த்துக்கொண்டு தனது வேலைக்கரரில் அடிமுறை படித்த, ஆயுதம் பழகிய 318 பேரைத் தெரிந்து கொண்டு தாண் எனும் இடம் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து போய் தனது சகோதரனின் மகனான லோத்தைக் காப்பாற்றுகிறார்.</p>
<p>இப்பொழுது இரண்டு அரசர்கள் வருகின்றனர், ஒருவர் சோதோமின் அரசர்.  சோதோமின் அரசர் தான் தொல்வியுற்றதை ஒப்புக்கொள்ளும் விதம் அருமையாக இருக்கிறது. எனது குடிமக்களை மட்டும் நீர் எனக்குத்தாரும், நீர் கைப்பற்றின பொருட்கள் உமக்கே உரியது எனக் கூறுகிறான். போர் சமயத்தில் காணக்கிடைக்கும் இந்த நிகழ்வு மிகச்சாதாரணமானது. &#8220;விழுந்துபோன எங்களைக் கைதூக்கிவிட வந்த ஆபிராமே உனக்கு எப்படி நன்றி கூறுவது எனத்தெரியவில்லை, இந்த வெற்றி உனக்கே உரியது. எனினும் குடிமக்கள் எனக்கு முக்கியமாகையால், நீ அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு என் மக்களை எனக்குத்தா!&#8221; என வினவுகிற ஒரு நிகழ்ச்சியாக நாம் இதைக் கண்டு கொள்ளுகிறோம்.</p>
<p>மற்றொருவர் சாலேமின் அரசர்.  இந்தப் போரில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவர்.  &#8216;உன்னதமான கடவுளின் அர்ச்சகர்&#8217;. ஆபிராம் கடவுளின் சொல்கேட்டு நடப்பவரானபடியால் அவர் மீது நன் மதிப்பை வைத்திருப்பவர். இந்தப் போரில் கடவுள் ஆபிராமோடு இருந்ததை கண்ணாரக் கண்டதினால், தான் அவருக்கு ஆசி அளிக்கும் பொருட்டு வந்தவர்.  வெறுங் கையோடு வராமல் போரிட்டவர்களின் களைப்பு நீங்க அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தவர்.</p>
<p>ஆபிராமின் சுய ஆளுமை வெளிப்படும் இடமாகையால் நாம் இந்தப் பகுதியைக் கூர்ந்து நோக்க அழைக்கப்படுகிறோம்.  தான் உதவி கோராமல் இருந்த போதிலும் தன்னோடு போரிட்ட வாலிபர்களின் களைப்பு நீங்க உணவு கொண்டுவந்தவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டிய தார்மீக கட்டாயத்தில் ஆபிராம் &#8216;எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்&#8217;.</p>
<p>இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஆபிராம் &#8221;எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்&#8217; என்பது எவற்றையெல்லாம் குறிப்பிடுவது என்பதாகும். 16ஆம் வசனம் அதை நமக்கு தெளிவுறக் காட்டுகிறது &#8220;அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்&#8230;&#8230;&#8230;. பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்&#8221; என்பதாக அங்கே குறிப்பிடப்படுகிறது. செல்வத்தில் மாத்திரமல்ல பெண்களையும் ஆள்களையும் பகிர்ந்து கொடுப்பது அக்கால வழக்கமே. அடிமை முறை மெலோங்கியிருந்தக் காலத்தில் ஆபிரகாம் அடிமைகளாகவே &#8216;பதில் ஒரு பங்கு&#8217; பெண்களையும் ஆள்களையும் கொடுத்திருக்கவேண்டும். உன்னதமான கடவுளின் அர்ச்சகர் இதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்கிற விளக்கம் நமக்கு இல்லாதது ஆச்சரியமானது ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது ஒரு அன்பின் வெளிப்பாடு. தற்செயலானது. அவ்வளவு தான்! கடவுளின் கட்டளை என நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.</p>
<p>மூன்றவதாக ஒரு முக்கிய உண்மை இதனுள்ளே பொதிந்திருக்கிறது.  நாம் சொல்லும் பழமொழியைப்போல ஆபிராம் &#8216;கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்திருக்கிறார்&#8217;.  ஆம்,  தனது வாலிபர்களை மாத்திரமே அவர் போருக்கு அழைத்துச் சென்றார், தனது பொருட்கள் ஒன்றையும் அவர் கொண்டு செல்லும் நிதானத்தில் இல்லை.  போர் முடிந்து அவர் தனது வீடு வரைக்கூட வரவில்லை &#8216;அரசர் பள்ளத்தாக்கிலேயே&#8217; அவர் சோதோமின் அரசராலும், மெல்கிசெதேக்கினாலும் சந்திக்கப்படுகிறார்.</p>
<p>இப்பொழுது ஆபிராமிடம் கொள்ளை பொனவற்றை மீட்டதே அல்லாமல் வேறெந்த பொருட்களுமில்லை. பார்க்கப் போனால் லோத்தினுடைய பொருட்களையே அவர் எடுத்து &#8216;பத்தில் ஒரு பங்கைச்&#8217; செலுத்தியிருக்க வேண்டும். எனில் பத்தில் ஒரு பங்கு என்பது நம்முடையதாக இருக்கக் கூடாது பிறருடையதையே எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பதாக அர்த்தம் பெறுகிறது.</p>
<p>இறைச் செய்தியாளர்கள் என்று தம்மை விளம்பிக் கொள்பவர்கள் இதை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பர் போலும், ஆகவே தான் &#8216;அனைவரிடத்திலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்துவிடச் சொல்லிவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்&#8217;.</p>
<p>தொடரும்&#8230;&#8230;</p>
<p>அருட் திரு காட்சன் சாமுவேல்</p>
<p>தொடர்பிற்கு <a href="mailto:palmyra_project@yahoo.com">palmyra_project@yahoo.com</a></p>
<p>                                <a href="mailto:revgodsonsamuel@gmail.com">revgodsonsamuel@gmail.com</a></p>
<p>phone 9870765181</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/pastorgodson.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/pastorgodson.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/pastorgodson.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/pastorgodson.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/pastorgodson.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/pastorgodson.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/pastorgodson.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/pastorgodson.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/pastorgodson.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/pastorgodson.wordpress.com/253/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=pastorgodson.wordpress.com&blog=5218128&post=253&subd=pastorgodson&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://pastorgodson.wordpress.com/2009/06/19/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e2%80%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">pastorgodson</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>