கிறிஸ்தவர்கள் சதவிகிதத்தில் அதிகம் வாழும் மாவட்டமான குமரியிலே கிறிஸ்மஸ், ஈஸ்டர், புத்தாண்டு ஆகிய விஷேச நாட்களிலே பன்றி இறைச்சி கிறிஸ்தவர்களுக்காகவே தாராளமாக வெட்டப்படுகின்றது. திருமறையாம் விவிலியத்தை பின்பற்ற விரும்பும் நாம், பன்றி இறைச்சியை உண்பது கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு புறம்பானது என்று உறுதிபட நம்பினாலும், யகோவா அந்த காரியத்தை முன்னிறுத்துவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது அதிக பயனளிக்கும்.
ஆராய்ந்து பார்த்தால் நாம் உணவை அல்ல நம்பிக்கைகளையே முன்னிறுத்தப்படுவதைக் காண்கிறோம். நமக்கு கொடுக்கப்பட்ட புனித நூலை விட்டு நாம் பிறழ்ந்து விடலாகாது என்கிற அதிக கவனம் நமக்கு உண்டு. “ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் அழிந்துபோவது இல்லை” என உறுதி படக் கூறும் நாம், அன்றன்று உள்ள “ஆகாரத்தை” தாரும் என்பதை “அப்பத்தை” தாரும் என்பதாக சொல்லுகிறோம். சரி, தினமும் அப்பத்தை சாப்பிடுகிறோமா என்ற கேள்வி எழுப்பினால், சோறு தான் அப்பம் என்ற பதில் வருமே அன்றி, அப்பத்தை சாப்பிட பழகவோ, அப்பம் என்ற வார்த்தைக்குப் பதில் ஆகாரம் என்ற திருமறை வார்த்தையைக்கூட சொல்லத் துணியமாட்டோம். ஏனென்றால் நாம் பழகிய ஒன்றை நம்மால் மாற்றுவது கடினம். அது தவறாக இருந்தாலும், நாம் அதை குறித்து உணார்த்தப்பட்டாலும் அது நம்மை தனிப்பட்ட முறையில் உரசிவிடுகின்ற ஒன்றாக மாறிப்போய்விடுகிறதேயன்றி நம் மாற்றத்திற்கான காரணியாவதென்பதோ ஐயத்துக்குரிய ஒன்றுதான்.
மார்வின் ஹாரிஸ் என்ற மானுடவியலாளர் தனது “பசுக்கள் பன்றிகள் போர்கள் அற்றும் ஸூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தை பிந்தொடர்ந்து சென்று அதன் வேராழத்தை கண்டுகொள்கிறார். நான் பிறந்த வருடத்தில் எழுதப்பட்ட இந்த புஸ்தகத்தின் ஆழமான கருத்துகளை இத்தனை வருட காலத்தில் எந்த கிறிஸ்தவ போதகரும் திருச்சபையில் என்னறிவின்படி முன்வைக்காததால் நான் அந்தக் கருத்துக்களை முன்வைப்பதிலே உள்ள அவசர கடமையை உணருகிறேன்.
எனது இறையியல் கல்லூரியில் “தலித் இறையியல்” கற்றுக்கொடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் கடவுள் எவ்விதம் துணை நிற்கிறார் என்பதையும், போதகர்களாகிய எங்களுக்கு திருச்சபையில் புரையோடியிருக்கும் சாதீய காழ்ப்புகளை வேறறுக்கும் ஒரு மகத்துவமான பயிற்சியாக அது அமைந்தது.
சத்தி கிளார்க், எங்கள் ஆசிரியர், மிகவும் திறம்பட அந்த வகுப்பை நடத்தினார்கள். எங்களுக்கென்று ஒரு சிறப்பு பயண வகுப்பையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். ஒரு தலித் கிராமத்தைக் கண்டு, அங்கு தங்கி, அந்த மக்களோடு வாழ்ந்த அனுபவம், புதிய புரிதலுக்கான வடிவம். என் வார்த்தைகள் எள் அளவேனும் அதை விவரிக்காது, எவரையும் திருப்திப்படுத்தாது என்பதையும் அறிவேன்.
லேவியராகமம் பதினொன்றாம் அதிகாரத்திலே கர்த்தர் மோசெயையும் ஆரோனையும் நோக்கி, எந்த விதமான மிருகஜீவன்களை புசிக்கலாம் எவைகளை புசிக்கலாகாது எனக்கூறுகிறார். கர்த்தர் இந்த வேறுபாடுகளை காண சில குறிப்புகளை கொடுத்தாலும், ஏன் புசிக்கலாகாது என்ற காரணத்தைக் கூறாமல், அது உங்களுக்கு “அசுத்தமாக இருக்கும்” என்பதாக மட்டுமே கூறுகிறார்.
இந்த பயிற்சியின் இறுதி வடிவமாக எங்கள் ஆசிரியர், என்களுக்கு உணவு படைத்தார். அதன் முக்கியத்துவமே மட்டிறைச்சி சாப்பிடுவது தான். எனது ஆசிரியர் என்னிடம் கேட்டார், காட்சன் வில் யூ ஈற் பீப்? அப்பொழுது தான், அதன் உட்கருத்தை நான் புரிந்து கொண்டேன் தலித், இஸ்லாமியர் அல்லாதவர் மாட்டிறச்சியை புசிப்பதல்ல என்ற பிம்பத்தை எனது ஆசிரியர் கொண்டிருக்கிறார் என்று. அதற்கான காரணங்கள் அவருக்கு இருக்கும், ஆனால், என் அனுபவமே வேறு.
சிறு வயது முதலே, நான் வேட்டைக்கறிகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன் (இப்பொழுது அல்ல) குமரி மாவட்டத்தின் தன்மை சற்று கேரள சாயல் கொண்டதால் எங்கள் உணவில் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளுவதிலே எவருக்கும் எந்த அசூசையும் இல்லை. நாகர்கோவிலில் முக்கிய மாட்டிறைச்சி வியாபாரி சேவியர் ஒரு கிறிஸ்தவர்தான். எனினும் நான்கு கிலோமீட்டர் தல்ல்ளியிருக்கும் பெருவிளையில் (என்னுடைய ஊர்) கிறிஸ்தவர்கள் வந்து ஒரு இஸ்லாமியரிடம் இறைச்சி வாங்கி செல்வார்கள். தரம் அவ்வளவு நன்றாக இருக்கும்.
எனக்கு சுமார் ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டினருகே ஒரு நபர் கூவிக்கொண்டெ சென்றார். பொதுவாக அந்த நாட்களிலே தின்பண்டங்களை அவ்விதமாக விற்பதால், நான் எனது அம்மாவிடம் அது என்ன என்று கேட்டேன். எனக்கு பன்றி என்றால் என்ன என்று தெரியாத மிஷன் காம்பவுண்டில் வளர்ந்த காலகட்டம் அது. அம்மா அது பன்றி இறைச்சி என்றும் நாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறினார்கள். இறைச்சி என்றவுடனே அதன் மீதான கவர்ச்சி கூடி, எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். எனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்மா அவனை அழைத்தார்கள். பனையோலையிலான பொதிகளை பார்க்கவே அழகாக இருந்தது, பிடித்துப்பார்த்தால் அந்தப் பொதிகள் மெத்து மெத்தென்று காற்றடத்த பலூன் போலவே இருந்தது. வாங்கி, சமத்து சாப்பிட்டுமாகிற்று, அம்மா அப்பா அதை தொடவில்லை.
இதன் பிற்பாடு நான் பன்றி இறச்சி சாப்பிட்டது எல்லாம், நண்பர்களுடைய வீட்டிலே தான். பலமுறை என்னை கேட்ட பின்பே எனக்கு அதை பறிமாறுவார்கள். ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
எனது அறிவின்படி, பன்றி அசுத்தமான மிருகம், அதன் உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வியாதியையும் குறிப்பிட்டு அதை நாம் உண்ணலாகாது என திருச்சபையிலே பிரச்ங்கித்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் கூறும் காரணங்களை கேட்டிருப்போம். இவை மூன்றையுமே மார்வின் ஹாரிஸ் ஆழமான புரிதலுடன் மறுக்கிறார்.
1. பன்றி சுத்தமற்றது
பன்றியின் சுத்தத்தை நாம் நன்கு அறிவோம். தெருவோரங்களிலும், சாக்கடைகளிலும், மலம் குவிந்து கிடக்கும் இடங்களிலும் அது தன் ஆகாரத்தை தேடுகிறது. அசுத்தமானதை தின்று வ்ளர்வதும் அசுத்தமாகத்தானே இருக்கும் என்பது நம் கணிப்பு. இந்த விதமான தருக்கத்தில் எழும் கேள்விகள் என்னவென்றால். ஒருவேளை சுத்தமானதை பன்றி தின்று வளர்ந்தால் நாம் அதை சுத்தமாக எண்ணி புசிக்கலாமா? அதைக் குறித்து கர்த்தர் ஏதும் கூறவில்லை.
காட்சியை சற்று மாற்றி பசுவையோ, ஒரு ஆட்டையோ நாம் எண்ணிப்பார்போமானால் என்ன நடக்கிறது. இவைகளை நாம் ஒரு தொழுவத்தில் வைத்து பராமரிக்கிறோம். தினமும் தொழுவத்தை சுத்தப்படுத்துகிறோம், தினமும் குளிப்பாட்டுகிறோம். இந்தக்காரியங்களை நாம் செய்யத்தவறினால், இவைகளும் பன்றிகள் போலவே அசுத்தமாக அலையும் என்பதை பட்டணங்களில் நாம் அன்றாடம் காண்கின்றோம்.
2.பன்றியின் உணவு
பன்றியின் உணவு என்பதே மலம் என்பதாக நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அப்படியான மிருகமல்ல அது. பன்றியின் வாழ்விடம் காடும் அதைசார்ந்த பகுதிகளும். அதன் முக்கிய உணவுகள் கிழங்குகளேயாகும். தானியங்களும், பழங்களையும் அது விரும்பி உண்ணும். பதனீர் என்றால் அதற்கு உயிர். ஆனால் இவைகளை கொடுத்தால் முதலுக்கே மோசம் என்பதால் நாம் இவைகளை கொடுக்காமல் அதை துப்புறவு பிறாணியாகவே காண்பித்து நமது தரப்பை உறுதி செய்கின்றோம்.
பசு மற்றும் ஆடுகளைப் பொறுத்தவரையில், இன்றைக்கு நாமே உணவுகளை அதனிடத்திற்கு எடுத்துச்செல்லுகிறோம். எந்த குறையும் இல்லாமல் அவைகளை பாதுகாத்துக் கொள்ளுகிறோம். மேலும் அவைகளுக்கான உணவின் விலையும், தேவையும் பன்றியோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவே.
3. வியாதி பரப்பும்
நன்றாக வேகாத பன்றி இறைச்சி, வியாதியை அளிக்கும் என்பது உண்மையே. குறிப்பாக டிரிச்சினொஸிஸ் எனும் வியாதி வருவதற்கான காரணங்கள் உண்டு. அப்படியெனில் பன்றி இறைச்சி சாப்பிடுவது தவறானது தான் என்று நாம் நினைகக்கூடும்.
நன்றாக வேகாத மாட்டு இறைச்சி மூலமாக நடப்புழுக்கள் வயிற்றில் தங்கி அபாய்மான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஆட்டின் இறைச்சி கூட புருசெல்லோஸிஸ் என்ற நோய் ஏற்படுத்தக்கூடியது தான். கூடவே பயங்கர ஆந்த்ராக்ஸ் என்ற நோய் இந்த மிருகங்களால் மட்டுமே ஏற்படும் பன்றியால் ஏற்படாது.
இந்தமுரண்பாடு தெரிந்ததும் நாம் இவைகளை சப்பிடாமல் இருக்கப்போகிறோமா என்ன?
மார்வின் ஹாரிஸ் இறுதியாக,. கர்த்தர் எபிரேயர்கள் பன்றியை தொடக்கூடாது என்று சொல்லுவதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்த சுற்றுசூழலே காரணம் என்கிறார். பாலைவனதில் வாழும் மனித்ர்களுக்கு, பன்றி அவர்களது உணவுக்கு நேரிடையான எதிரி ஆகின்றது. கொட்டைகளையும், பழங்களையும் மற்றும் தானிய்ங்கலையும் அவை தின்றுவிட்டு, மாமிசம் மட்டுமெ பதிலாக கொடுக்கின்றன. மாடும் ஆட்டுமந்தைகளும், கம்பளி, தோல், பால் சார்ந்த பொருட்கள், எரு மற்றும் உழவுக்கும் பயன்படுகின்றன. சுவை மிகுந்த பன்றி இறைச்சியின் மீது அவர்களுக்கு ஆசை பிறந்துவிட்டால் அதன் மூலம் ஏற்படும் அபாயகரமான விலைவுகளை கடவுள் உணர்ந்திருந்தார். ஒருவகையில் காந்தியின் சிந்தனைப்படி, “எல்லாருடைய தேவைக்கும் போடுமானது பலஸ்தீனாவிலே உண்டு. ஆனால் பேராசைகளுக்கு கர்த்தர் இடமளிக்கவில்லை.
இறையியல் சாராத மார்வின் –காரிசின் கூற்றை நாம் எப்படி ஒரு அளவுகோலாக கருத்முடியும்? உண்மைதான், அவர் இறையியலாளர் அல்ல, எனினும், பிற வேத பகுதிகள் அவ்ர்கூறுவதை மெய்ப்பிக்கின்றன.
முதல்லவதாக, இயேசு சொன்ன இளைய குமாரன் உவமை. பஞ்சகாலத்திலே இளையமகன் ஒரு குடியானவனிடம் ஒட்டிக்கொள்ளுகிறான். அங்கே பன்றிக்கு கொடுக்கும் தவிட்டினால் தன் பசியை ஆற்றிக்கொள்ள விரும்பினான் என்பதாக காண்கிறோம். மனிதனுக்கு உணவற்ற நிலையிலும் பண்றியை போஷிக்கும் அளவுக்கு, மனிதர் சாபிடும் உணவை கொடுக்க சித்தமாய் இருந்த சூழலை காண்கிறோம்.
இரண்டாவதாக தெக்கொப்போலி பகுதியிலே இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனை குணமாக்குகின்றார். அவனில் இருந்து புறப்பட்ட ஆவிகள் பன்றி கூட்டத்திற்குள் சேல்ல அனுமதி கேட்கின்றன. இயேசு அனுமதித்தவுடனே அவை யாவும் பன்றி கூட்டத்தோடு சேர்ந்து அவைகளை செங்குத்தான மலையிலிருந்து கடலிலே விழப்பண்ணுகின்றன.
ஏவ்வளவு பெருத்த நஷ்டம்? மக்கள் அவரை அன்கிருந்து போகச் சொல்கின்றனர். ஆனால் இயேசு செய்த காரியங்களை கூர்ந்து கவனித்தொமானால் அவர் அந்த மனிதனை மாதிரமல்ல, அந்த ஊரையே குணமாக்கியிருக்கிறார். இரண்டாயிரம் பன்றி எந்தனை பேருடைய உணவிற்கு உலை வத்தன? அவ்வித ஆடம்பரத்தை விடுத்து அனைவருக்கும் உணவு கிடைப்பதையே இயேசு விரும்பினார். சுவைக்கு பழகிப்பொன நாக்குகளால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த மேசியாவை சுவக்கமுடியாமற் போயிறு.
குமரி மாவட்டத்தில் பன்ரியை சாப்பிடுவது சரியென்று கூறலாம? கூரலாம், இறைவன் நமக்கு கொடுத்த சுற்று சூழல் அப்படி. கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி வரும் பன்றி எதிரியாக இருக்கும்போது, அவர்கள் அதை வேட்டையாடி இழந்த உணவை சமன் செய்திருப்பர். மாத்திரமல்ல பன்றியை வளர்க்க தெவையான தண்ணீர் மற்றும் உணவுபதார்தங்கள் இங்கே மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன. அதன் சுவை தொன்றுதொட்டு சுற்றுசூழல் உணவுபழக்கத்தில் ஊரிக்கிடக்கின்றது. ஈறைவன் அதை தவறாக எண்ணிக்கொள்ளமட்டார், அது சுற்று சூழல் சுழர்ச்சியை சமன் செய்யும் ஒன்றே.
காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு palmyra_project @yahoo.com
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
You must be logged in to post a comment.