Archive for மார்ச், 2010

அறிவர் அருட் திரு ஞானா ராபின்சன்

மார்ச் 26, 2010

எனது வாழ்வில் நான் கண்ட மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவரும், என் போன்ற எளிய இறையில் மாணவர்களின் சிறந்த, மாதிரியான தலைமைத்துவ பண்புடையவருமான அறிவர் அருட் திரு ஞானா ராபின்சன் அவர்களின் 75ஆம் பிறந்தநாளில் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

 மகிழ்ச்சி மற்றும் நன்றிகூறும் ஒரு தருணம் எனவும் கிருபையாய் பெற்ற 75 வருடத்தை கொண்டாடுதல் எனவும் அவரது அழைப்பிதழில் பெற்றுள்ள வாசகங்கள் ஆழ்ந்த அர்த்தம் நிரம்பியவை

இன்று நிகழும் விழாவானது குமரி மண்ணின் போதகர்கள் மாத்திரமல்ல உலகம் முழுவதிலுமுள்ள இரண்டு தலை முறை இறையியலாளர்கள் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய ஆளுமையின் சகாப்தத்தை அறைகூவும் ஒரு பொன்னாள் ஆகும். அன்னாரது வாழ்கை வரலாற்றை எழுதுவதை விட நான் கண்ட “அங்கிள்” ஐ எழுதுவது தான் இங்கே பொருந்தும்.

பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் ஒரு வருட வளர்ச்சிக் கல்விக்க்காக மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தால் அழைக்கப்பட்டிருந்தேன். நான் முதன் முதலாக அங்கிளை சந்தித்தது எனது நேர்முக தேர்வில் தான். எனது அப்பா அருட் திரு செ சாமுவேல் என்று நான் சொன்னவுடன் அவர் மிகவும் மகிழ்ந்துபோனார். நாங்கள் ஒருமித்து படித்தோம் என்பதை அவ்விடத்திலேயே கூறினார்.

எனது தகப்பனார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தது போலவே என்மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனது ஒரு வருட டிப்ளமோ வகுப்பு முடிவடையும் தருணம் “அப்பா என்ன சொல்றாங்க?” என்று கேட்டார். நான் பி. டி படிக்க சொல்றாங்க ஆனா எனக்கு இஷ்டமில்லை என்று சொன்னேன். “அப்போ ஒரு அப்பிளிக்கேஷன் போடு” என்று கூறிவிட்டார்கள். ஒரு வேளை அவர்கள் அன்று என்னிடம் அந்த கேள்வியைக் கேட்டிருக்காவிட்டால் எனது வாழ்வு கண்டிப்பாக திசை திரும்பியிருக்கும். இதே விதமான ஒரு சம்பாஷனை எனக்கும் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களுக்கும் நடந்தது. அவர் என்னிடம், இறையியல் கல்வி முடித்துவிட்டு என்னை வந்து பார் என்றது எத்துணை தீர்க்க தரிசனம் கொண்டவர்கள் இவர்கள் என தெரியப்படுத்துகிறது.

“நியாயம் தண்ணீரைப் போலவும் நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக் கடவது” எனும் தீர்க்கன் ஆமோசின் வரிகளைப் ஒற்றி அவர்கள் எங்களுக்கு பாடம் நடத்தினார்கள். எளிமையாக, புரிந்து கொள்ளத்தக்கதாக, அவர்கள் எங்களுக்கு பயிற்சியளித்தது என்றும் நினைவுகூறத்தக்க இனிமையான அனுபவமே.

ஒருமுறை ஆனுவல் ஃபீஸ் கட்ட வேண்டிய தருணம். எனக்கு வீட்டிலிருந்து பணம் வருவதற்கு தாமதமாகிவிட்டது. வீட்டிலிருந்து பணம் வருவதே ஒருவகையில் கேள்விக்குறிதான், ஏனென்றால் அம்மாவும் அப்பாவும் அந்நேரத்தில் ஓய்வுபெற்றுவிட்டிருந்தனர். பணம் கட்டாவிட்டால் பரீட்சை எழுத இயலாது எனும் சூழ்நிலை. ப்ரின்சிபலாக அங்கிள் இருந்த நேரம்.

எப்படியும் ஒரு கடிதம் வாங்கிவிட்டால் பிற்பாடு எப்படியாவது பணத்தை கட்டிவிடலாம் என்று போய் நின்றேன். தனது அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். கிட்டத்தட்ட அரைமணிநேரமாக எதுவுமே பேசாமல் பல ஃபைல்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். நிமிர்ந்த போது அவர்கள் கையில் ஒரு காசோலை இருந்தது. எனக்கு தேவையான பணம் அதில் இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. அறைக்கு வந்தும் அழுதுகொண்டே இருந்தேன்.

இறையியல் கல்வியானது மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று. மேடைப் பிரசங்கியார்களுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட இறையியல் கல்லூரிகள் சந்திக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய கிறிஸ்தவ விசுவாசிகள் விரும்புவது இல்லை. இவ்விதமான தருணத்தில், வேறு ஒருவராக இருந்திருந்தால், புண்பட்டு நின்றிருக்கும் நம்மிடமே ஏன் இன்னும் பணம் கட்டவில்லை? என்கிற கேள்வியே கேட்கப்பட்டிருக்கும். தனது மிகப்பெரிய பாரத்தினூடாக என் போன்ற பல மாணவர்களை அவர் சத்தமில்லாமல் கை தூக்கி விட்டுருக்கிறார் என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

எனது இறுதி ஆய்வுக்கட்டுறையை அங்கிளே நெறியாளராக இருந்து அமைத்து தந்தது எனக்கு பெருமைக்குரிய காரியமே. அவர்களது ஆலோசனை பலவிதங்களில் எனக்கு பயனுள்ளவையாக அமைந்தது.

ஒரு முறை, மாணவர்களும் ஆசிரியர்களும் உடற்பயிற்சி இல்லாமல் இருக்கின்றனர் என்ற கருத்து வலுப்பெற்று, காலை தியானத்தின் முன்பு சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என முடிவானது. நாள்பட நாள்பட கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது எனினும் அங்கிள் இறுதி வரை தவறவே இல்லை. இன்றும் அவரது உறுதியான உடலின் காரணம் அவரது உடற்பயிற்ச்சியே! எனது சிறு தொந்தியைப் பார்த்து ஒரு நாள் சிரித்தபடியே ஒரு பொய் குத்து விட்டார்கள். அவர்களின் அணுகுமுறையே அப்படித்தான் அன்புடன் நமக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்கள்.

நான் தொடர்ந்து வாசிக்கும் ஜாமக்காரன் பத்திரிகையில், தமிழ்நாடு இறையியல் கல்லூரியைப் பற்றி விமரிசித்து எழுதியிருந்த கட்டுரையை ஞானா அங்கிள் கையாண்ட விதம் அவருக்கே உரிய பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. வேறு யாராவது அதை அத்துணை ஞானத்தோடு கையாண்டிருப்பார்களா என்பது ஐயமே! தான் சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் ஆணித்தரமாகவும், வேத ஆதாரத்துடனும் நிறுவுவதற்கு அவருக்கு நிகர் அவரே தான்.

எந்த விதமான பாசாங்கும் அற்றவர், எவரையும் நீதியின் பொருட்டு எதிர்த்து நிற்க வல்லவர். அவரது தீர்க்கர் மன்றத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் நேரடியாக அனுபவித்தவைகள் இவை.

மத மாற்றம் குறித்த சிந்தனைகள் எனது தந்தைக்கும் அங்கிளுக்கும் இரு திசைகளில் இருந்தாலும், அதை பக்குவமாக எனது அப்பாவிடம் பகிர்ந்தளித்த விதம் என்னை நெகிழவேச் செய்தது.

 ஒருவேளை அங்கிள் குமரிப் பேராயத்தில் பேராயராகப் பொறுப்பெடுத்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். கர்த்தர் தொடர்ந்து அனேகருக்கு நன்மையளிக்க வேண்டி, நீண்ட ஆயுளால் அங்கிளை முடிசூட்ட வேண்டுகிறேன்.

(இன்றும் நட்புடன் உறவாடும் ஒரு தன்மையுடியவராகவே அவர் காணப்படுகிறார். இதுவரை அவரை சந்திக்காதவர்கள் அவரை சந்திக்கும் ஒரு அரிய தருணமாக இதை எடுத்துக்கொண்டு இன்று நடைபெறும் விழாவில் அவரை வாழ்த்தி வரும்படி உங்களை அன்புடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.)

75ஆம் பிறந்த நாள் விழா நாள் 27.03.2010 காலை 10 மணி இடம்: லூசி டல்ஃபர் ஆடிட்டோரியம், அமைதி அறக்கட்டளை, கன்னியாகுமரி 04652- 221459 மற்றும் 98427 11864 அன்புடன் அருட் திரு காட்சன் சாமுவேல் தொடர்பு கொள்ள 09702567603

palmyra_project@yahoo.com

கடவுளின் இருள்

மார்ச் 22, 2010

ஒரு முறை அறிவர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் திருமறை தியான வகுப்பில், அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்கள். இருளை நாம் எதனுடன் தொடர்புபடுத்த முடியும்?  நான் கடவுளுடன் என்றேன். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வயதிலும் அனுபவத்திலும் என்னை விட மிகவும் மூத்தவர்கள். ஆன்மீகத்தில் விளைந்தவர்கள். “தேவன் ஒளியாய் இருக்கிறார்” என உறுதியாகத் தெரிந்தவர்கள். என்னை சற்று மறை கழண்டவன் என்பது போல் கூட ஒரு சிலர் பார்த்தனர். எனினும் ஞானா அங்கிள் புரிந்து கொண்டார்கள். பலவித விளக்கங்களை அந்த நாள் நாங்கள் தியானித்தோம். பிற்பாடு அதன் ஆழத்தை நான் தேடிச் செல்லவில்லை.

இன்று நான் மதிக்கும் ஆழ்ந்த மறை பற்றுதல் கொண்டவரும், தீவிர நம்பிக்கையாளருமான  திரு கிறிஸ்டோபர் அவர்களுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது “கடவுள் இருளாயிருக்கிறார்” என்ற பிரயோகம் சகோதரரிடம் ஒரு ஆழ்ந்த கேள்வியை எழுப்பிற்று.

மிக நிச்சயமாக நம்மால் அறுதியிட்டு கூறத்தக்க வேத பகுதிகள் நம்மிடம் இல்லாததாலும், நமது புரிதலின் வெளியை விட்டு நகர்த்தும் எந்த ஒரு சிந்தனையும் நம்மை அச்சமுறச் செய்வதாலும், தேவன் “இருளாய் இருப்பது” ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று அல்ல என்பதாகவே நாம் முடிவு செய்வோம்.

சிறு பிராயத்திலிருந்தே நமது பழக்க வழக்கங்களை நாம் கூர்ந்து அவதானித்தால், இத்தகைய சிந்தனைகள் கலாச்சாரம் வேர்பற்றி, பண்பாடின் மலராக நமது கரத்தில் “மணம்” வீசிக்கொண்டிருக்கின்றன என்பதே என் எண்ணம்.

சிறு பிள்ளைகள் பெறும் தண்டனைகளில் ஒன்று அவர்களை இருளில் நிறுத்துவது. போலீஸ்காரன் வாரான் பூச்சாண்டி வாரான் என்று சொல்லுவதுபோலவே இதுவும். போலீஸ்காரன் வந்தாலும் வராத பூச்சண்ண்டியைப் பயமுறுத்தவேண்டி அழைத்தாலும் சிறுவர்களுக்கு ஏதும் நிகழாது. எனினும் “அச்சத்தை” அவர்களிடம் கொடுத்தாயிற்று. ஆனால் இந்த “அச்சம்” ஆதி முதலாய் இருந்தது இல்லை.

சிறுகுழந்தை வயிற்றில் உருகொள்ளும் நாள் முதல் அது பிறக்கும் வரை அதன் சுக வாழ்வு  இருட்டரையில் மிகவும் பத்திரமாகவே இருக்கிறது. தாய் அளிக்கும் அந்த இருட்டே ஒரு சிறந்த கவசம்.

குழந்தை பிறந்து சில நிமிடங்களில் பால் குடிக்கும் பொழுதும், பின்வரும் நாட்களிலும் அது தனது தாயை கண்களால் அறிந்து கொள்வதில்லை மாறாக அது தாயை மணம் மூலமே அறிந்துகொள்ளுகிறது. “அறிதல்” என்றவுடன் திருமறை கூறும் படைப்பின் பக்கங்களில் என் சிந்தனை நகர்கிறது. ஆதாம் ஏவாளை “அறிந்தது” கடவுளோடு வாழும் தன்மையை இழந்த பின்புதான் என்பது நாம் கவனிக்கத்தக்கது. கூடவே” அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன” என்பதும் “பார்க்கும் தன்மை” அத்துணை ஒரு உயர்ந்த விழுமியமாக இப்பகுதியில் கருதப்படவில்லை. மாறாக தவரிழைத்ததன் பலனாக, அதன் தண்டனையாக கண்கள் திறந்தன என புரிந்து கோள்ள முடிகிறது.

கண்கள் மூடியிருப்பது தவறல்லவா? திறந்திருப்பது தானே அதன் படைப்பின் இரகசியம்? எனில் கண்கள் எதற்காக? பார்பதற்காகத்தானே? ஆதாம் ஏவாள் “கண்கள் திறக்கப்படுவதற்குன்” முன்பு வரை பார்வையற்றவர்களாக இருந்தனரா என்றால் இல்லை என்பது தானே பதில்? தெய்வீகத் தன்மையோடு ஒரு குழந்தை பார்ப்பதை நம்மால் காணக் கூடாது என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்? நமது கண்கள் திறக்கப்படும் நேரங்கள் நாம் கடவுளை விட்டு தூரமாக சென்றுவிடுவதன் மர்மம் புரிகிறதல்லவா? நமது சாதி, மதங்களின் வியாக்கியானம், கலாச்சாரம் போன்றவைகள் நம்மை அறுவை சிகிழ்சை செய்து கண்களைத் திறக்கின்றன. நாம் காணுவது கண்கள் கூச்சமடையும் ஒரு உலகம். அது கடவுள் படைத்த உலகத்தை பார்க்க இயலாதபடி பலவீனமாக்கிவிடுகிறது.

சில வார்த்தை பிரயோகங்களை நாம் அவதானித்தால் இருளுக்கும் ஒளிக்கும் நாம் வைத்துக்கொண்டுள்ள அளவு கோல்கள் தெரியவரும். இவை திருமறைச் சார்ந்தவைகள் அல்ல என்றாலும் இவையே நம்மை திருமறையின் கண்ணாடிகளாக நாம் அணிந்து கொள்ளுவது என்றால் மிகை ஆகாது.

பல வேளைகளில் நமது சொற்கள் நம்மிடம் ஒட்டிக்கொண்டுள்ள விதம் அவை நம்து எண்ணத்தை பிரதிபலிப்பதால் தான். “உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வி பார்வை சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. “உண்மையை” நாம் “கண்”டடைகிறோம்! நல்லது செய்பவர்கள் வாழ்வில் “ஒளி”யேற்றுபவர்கள் ஆகிறார்கள். “குருட்டு நம்பிக்கை” “கண்மூடித்”தனமான வேகம், இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைக்கமுடியுமா? போன்ற ஒரு சில வாக்கியங்கள், உதாரணங்களாக இருளையும் ஒளியையும் நாம் எவ்விதம் கூறு போட்டு வைத்திருக்கிறோம் என்பதை விளக்க போதுமானது.

கடவுள் அளவிட முடியாதவர். எந்த அளவுகோலும் ஏற்றி நாம் அவரை குறைத்து விட இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பார்வைகள் அவரை அளந்துவிட்வோ விவரித்துவிடவோ இயலாது. அவ்வாறே நமது வார்த்தைகளும். “வானாதி வானங்களும் அடக்கிக்கொள்ள இயலாதவரை” அற்பர்கள் நாம் எவ்விதம் அடக்கி அறிந்துகொள்ள இயலும்? அடக்கி அறிந்துகொள்ளுவதன் சிறுமதியினை தாண்டி சிந்திப்பது அல்லவோ தேடல்? பரம் பொருளைத் தேடுவது “வெளிச்சத்தில் என்றால்” இருளில் தொலைத்ததை எவ்வறு கண்டடைய இயலும்.

ஒத்துக் கொள்ளுகிறேன்.

தேவன் ஒளியாயிருக்கிறார், ஒளியானது இருளைப் பற்றிக்கொள்ளுவது இல்லை, நானே மெய்யான ஒளி… போன்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் சற்று மிகைப் படுத்திவிட்டோமோ என்று தோன்றுகின்றது.

இருளின் மீது எனது பற்றுதலுக்கான வசனம் தொடக்க நூல் 1: 2ல் காணப்படுகிறது. “….ஆழத்தின் மீது இருள் இருந்தத்து,  நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது.  என துவங்கும் படைபின் நாள் வசனம் 5ல் “… மாலையும் காலையும் நிறைவுற்று முதலாம் நாள் முடிந்தது” என மலையே நாளின் துவக்கம் என உறுதிபடுத்தப்படுவதை காண்கிறோம். துவக்கம் மாலையிலிருந்து காலையாகிறது. இருளிலிருந்து ஒளி பிறக்கின்றது. எந்த சிறு விளக்கானாலும் அதன் நிழலை அதால் மாற்ற இயலாது என்பதை நாம் திட்டமாக அறிந்திருக்கிறோமில்லையா?

ஆதியில் இருள் கடவுளோடு இருந்திருக்கும் பட்சத்தில்  கடவுள் தாமே இருளாய் அமைந்து தன்னிலிருந்து பிறப்பிக்கும் அனைத்தையும் தனது சாயலுடனே படைக்கிறார்.

கடவுள் சர்வ வியாபி, இருளும் அவ்விதமாகவே வியாபித்து இருக்கிறது. ஒளி ஏற்றினால் இருள் இல்லாமல் ஆவது இல்லை. ஆனால் இருளை ஏற்ற இயலாது. உருவாக்கவும் இயலாது. அது சுயம்பு. தானே உருவான ஒன்று கடவுளின் ஆதி பண்பு. அது தன்னை பிறர் அண்டவிடாதபடியும் பிறறை தழுவியபடியும் நிழல்போல் காணப்படுகிறது. அதன் பார்வையிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்ள இயலாது. இருட்டின் கண்கள் அவை.

அவர் என்னை துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார் என புலம்பல் 3: 2ல் வாசிக்கிறோம். தொடர்ந்து 6ஆம் வசனத்தில் “இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்” எனவும் நாம் காண்கிறோம். தேவனின் சிட்சிப்பா இது? அவர் நல்லவர் என தாசன் கண்டுகொள்ளும் வழியாக அல்லவா இவைத் தோன்றுகின்றன? இருள் பாவமானது என்றால் ஆண்டவர் இவ்விடத்தில் நேர்மையாளரை அனுமதிப்பது எப்படி?

இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன் என ஏசாயா45: 3ல் கடவுள் நமக்கு வாக்களிக்கிறார். தொடர்ந்து நாம் வாசிக்கும்பொழுது 15ல் மீட்பரான் இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் “தம்மை மறைத்துக் கொள்ளும் இறைவன்” என நமது கடவுளின் தன்மையை விவரிப்பதைக் காணலாம்.

விக்கிரகங்கள் சூழ்ந்த ஒரு தேசத்தில், பகல் வேளையில் அனைவரின் பார்வைக்கும் கடவுளாக காட்சிதரும் சிலைகளை நம்புகிறவர்களைவிட உருவமற்று, வியாபித்து, தோற்றமும் முடிவும் இல்லாமல், ஆக்கவும் அழிக்கவும் இயலாத ஒன்றாக இறைவன் தன்னை வெளிப்படுத்தும் தருணம் நாம் அவரோடு ஐக்கியமாகும் தருணமே என கடவுள் நம்மை அழைப்பது நமக்கு தென்படுகிறதா?.

ஒரு நிமிடம் நாம் நமது கண்களை மூடி தலைகளைத் தாழ்த்தி வேண்டுதல் செய்யத் துணிவோமானால் நாம் புரிந்துகொள்வோம்…

இறைவனோடு உறவாட நமது கண்கள் தேவை இல்லை நமது ஆன்மாவே போதும்

நீதியுள்ள ஆன்மா அவரை கண்டடையும் என்பதையே “தூய்மையுள்ள உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” என மத்தேயு 5: 8 தெளிவுபடுத்துகிறது.

எவ்விதம் கடவுளைக்  காண நாம் அழைக்கப்படுகிறோம்?

(“கடவுளின் இருள்” எனற  எனது வலைப்பூவின் 50ஆம் பதிவை
 தனது 75ஆம் பிறந்த நாளைக் கர்த்தரின் கிருபையாலும், இரக்கத்தாலும், ஆசியாலும் நிறைவுசெய்த அறிவர். அருட் திரு.  ஞானா ராபின்சன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

Contact: palmyra_project

09702567603

மெதடிஸ்ட் வாலிபர் ஐக்கிய ஞாயிறு

மார்ச் 8, 2010

 

மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, மீரா ரோடு 
மெதடிஸ்ட் வாலிபர் ஐக்கிய ஞாயிறு

வழிபாட்டு ஒழுங்கு
நாள் மார்ச் 7, 2010, 4:30 மணிநேரம் 

இடம்தூய சேவியர் பள்ளி, சாந்தி பார்க், மீரா ரோடு

Praise & Worship Song

My life is in You, Lord,
My strength is in You, Lord
My hope is in You, Lord
In You, it’s in You. (Repeat)
I will praise You with all of my heart.
I will praise You with all of my hope.
With all of my life, and all of my strength.
All of my hope is in You

My life is in You, Lord,
My strength is in You, Lord
My hope is in You, Lord
In You, it’s in You. (Repeat)

வழிபாட்டிற்கு அழைப்பு  

கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாக இருக்கக் கடவது…

– (ஆபகூக் 2: 20)

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!…. என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமா யிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

– (சங்கீதம் 84:1, 2)

தியான பாடல்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

வல்லவர் அன்பர் பாடி போற்றுவோம்

நம் கேடகம் காவல் அனாதியானோர்

மகிமையில் வீற்று துதி அணிந்தோர்

ஆ சர்வ சக்தி சொல்லொண்ணா அன்பே

மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே

போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர்

என்றும் மெய் வணக்கமாய் துதிப் பாடலோடும்

மன்றாட்டு

பாமாலை 250

  1. யாரிலும் மேலான அன்பர், மா நேசரே;
    தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே;
    மற்ற நேசர் விட்டுப் போவார்

             நேசித்தாலும் கோபம் கொள்வார்
            இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே!

        2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே;

             பற்றிக்கொண்ட என்னை விடார்,  மா நேசரே!
             இன்றும் என்றும் பாதுகாப்பார்,

            பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
            துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே!

       3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை;
            என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை;
            எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
            நேரே மோட்ச பாதைச் செல்லு,
           இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே! 

       4.  என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே
              சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே
             கொண்ட நோக்கம் சித்தி செய்வார் ,
              நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்

             மோட்ச நன்மை யாவும் ஈவார், மா நேசரே!

சங்கீதம் 1: 1 – 6
(முறை முறையாக வாசித்தல்)

ஆராதனை நடத்துபவர் – துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமலும்,
சபையார் –  கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
ஆராதனை நடத்துபவர் – அவன் நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத்தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சபையார் –  துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆராதனை நடத்துபவர் – ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலை நிற்பதில்லை
அனைவரும் – கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்

நிசேயா பற்றுறுதி அறிக்கை

வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லவற்றையும் படைத்திருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஓரே தேவனை விசுவாசிக்கிறேன். ஓரே கர்த்தருமாய், தேவனுடைய ஓரே  பேரான குமாரனுமாயிருக்கிற  இயேசுக்கிரிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல ஊலகங்களும் உண்டவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்;

தெய்வத்தில் தெய்வமானவர்,  ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில்  மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக் கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மை யுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியா ளிடத்திலிருந்து அவதரித்து மனுஷரானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோ ரையும் நியாயந் தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜியத்துக்கு முடிவில்லை.

கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிற வருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமார னோடும் கூடத்தொழுது ஸ்தோத்தரிக்கப் படுகிறவருமாய்,       தீர்க்கதரிசிகள்        மூலமாய் உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே  ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமேன்

 

மகிமைப் பாடல்

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்

மகிமையுண்டாவதாக

ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான

சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக –  ஆமென்

கர்த்தரின் இறைவேண்டல்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,

உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக,

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல,

பூமியிலேயும் செய்யப்படுவதாக,

அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்.

எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு

நாங்கள் மன்னிக்கிறதுபோல,

எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல்,

தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.

இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும்

என்றென்றைக்கும் உம்முடையவைகளே.  ஆமென்

சிறப்புப் பாடல்

 ஆங்கிலத்தில்  திருமறைப் பாடம்: ஆதியாகமம் 41: 39 – 45

ஒய்வு நாள் பள்ளி பிள்ளைகள்:   மனப்பாட வசனம் / பாடல்

 

 

ஜெபம்

 

மன்றாட்டுப் பாடல்

 

 

 

You are my strength when I am weak

You are the treasure that I seek

You are my all in all

Seeking You as a precious jewel

Lord to give up, I’d be a fool

You are my all in all

Taking my sin, my cross, my shame

Rising again, I bless Your name

You are my all in all

When I fall down, You pick me up

When I am dry, You fill my cup

You are my all in all

Jesus, Lamb of God, worthy is Your name

Jesus, Lamb of God, worthy is Your name

You are my strength when I am weak

You are the treasure that I seek

You are my all in all

Seeking You as a precious jewel

Lord to give up, I’d be a fool

You are my all in all

Taking my sin, my cross, my shame

Rising again, I bless Your name

You are my all in all

When I fall down, You pick me up

When I am dry, You fill my cup

You are my all in all

Jesus, Lamb of God, worthy is Your name

Jesus, Lamb of God, worthy is Your name

 

அருளுரை : டேனியல் மனோகரன்

 சிறப்புப் பாடல்

 ஆண்டறிக்கை 

நன்றி கூறல்

அறிவிப்புகள்

ஆரோனின் ஆசி

 ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக்

காப்பாராக!

 

ஆண்டவர் தம் திருமுகத்தை

 

உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள்

பொழிவாராக!

 

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்பக்கம் திருப்பி

 

உனக்கு அமைதி அருள்வாராக!

 

நிறைவுப் பாடல்

கர்த்தவே  இரவின், பயங்கள் நீக்கிடும்

 

தூங்குமட்டும் தூதரின் நற்காவல் ஈந்திடும்

–  ஆமேன்

குறும்படம் திரையிடல்

 

 

            ஐக்கிய விருந்து  

 

Credentials:

We thank our Pastor, Youth Advisors, Secretary and All Committee Members, Guest Speaker, Fellow Church Youths, Participants and Pastors, Our Church Members and all those who made this programme successful.

 

In youthful ministry

Annie, Benny, Dhas, Janani, Jemima, Manoj, Nisha, Rajesh, Rakesh, Rini, Selin, Selvi, Shalini, Shiny, Sneha, Terasa, Kamala and Godwin (President, MYF- Mira Road)

Rev. Godson Samuel

Contact: palmyra_project@yahoo.com, malargodson@gmail.com

09702567603

 

செவ்வாய் கொளுப்பு

மார்ச் 2, 2010

கிறிஸ்தவர்களின் பண்டிகைகள் பலவும் ஒரு விசித்திர முரணையே கொண்டிருக்கின்றன. கிறிஸ்மஸை எடுத்துக்கொள்வோம், நட்சத்திரம் வழி காட்டியதால் விண்மீன்கள் தோற்றுபோகுமளவுக்கு மின் விளக்குகள், மாட்டுகுடிலோ மாளிகையை ஒத்திருக்கும் கிறிஸ்மஸ் குடில்கள், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்லச் சொன்ன ஏரோது இன்று கசாப்பு கடைக்காரனாக நம்மிடையே.

ஏன் கிறிஸ்மஸ் குறித்து துவக்க வேண்டும்? அதுவும் லெந்து காலத்தில்? கிறிஸ்மஸ் காலங்களில் தான் சபை கர்த்தரின் “வருகை”யைக் கொண்டாடப்படுகிறது. திருச்சபையின் காலண்டர் துவங்கும் நாட்கள் இவை. இதற்கு அடுத்தபடியாக காணப்படும் நாள் சாம்பற் புதன் ஆகும்.

திருச்சபையில் நான் கேள்விபடாத ஒரு வார்த்தையை நான் இணையத்தில் கண்டு கொன்டேன். அது “கொழுத்த செவ்வாய்” என்ற ஆங்கில வார்த்தை. அதாவது கிறிஸ்மஸ் துவங்கி உண்டு வந்த கொழுத்த புலாலை விலக்கும் காலமாக லெந்து காலம் நடைபெற்று வருவதால், அதன்பின்  மீதமுள்ள அனைத்து புலாலையும் சேர்த்து ஆசைதீர உண்டு களிக்கும் நாளே “கொழுத்த செவ்வாய்” என பெயர் பெற்றது.

இதில் முரண் எங்கே என்றால் நாம் இந்த வார்த்தையைக் கேள்விப்படாவிட்டாலும் திருச்சபையின் போதகர்கள் இந்த வார்த்தையை அறிமுகம் செய்யாவிட்டாலும், திருச்சபையினர் இதை மனமார புரிந்து வைத்துள்ளனர்.

திருச்சபையின் அங்கத்தினர்கள் தங்களை பலவாக ஒடுக்குவதற்கு ஆயத்தமாகும் சூழ்நிலையில் சில காரியங்களை லெந்து நாட்களில் தவிர்ப்பது வழக்கம். திருமணம் போன்ற விசேஷித்த வைபவங்கள், விருந்துகள், மதுபானம், ஒரு சிலர் சிகரட் மற்றும் இன்னபிற. லெந்து நாட்களில் பெண் பார்ப்பது தவறு என்று கூறுகிறவர்கள் உண்டு. இது போன்ற பல கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் நம்மிடையே உலவிவருகின்றன.

இவ்விதமான சூழ்நிலையில் தான் “கொளுத்த செவ்வாய்” நம்முன் முரணாக நிற்கிறது. மதுபானம், புலால், விசேஷித்த வைபவங்கள் அனைத்தும் அவசர அவசரமாக நடைபெறுகின்ற ஒரு தருணமாக காட்சியளிக்கின்றது. “கொழுத்த செவ்வாய்” இரவு 12 மணிவரைக் குடித்தால் அதன் பின்விளைவு சாம்பற் புதன் வரை இருக்கும் என்பதை இவர்கள் அறிவதில்லை.

லெந்து காலத்தில் நுழைய இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும், கர்த்தர் சிலுவைப் பாடுகளை ஏற்கும் நாட்களை நினைவுக்கூற கடமைப்பட்டவர்கள். நமது வாழ்வில் நமது பாவங்களில் நின்று அவர் நம்மை விடுதலைச் செய்ய தம்மை பணயம் வைத்த சிலுவையை நோக்கிப்பார்க்கும் உன்னத தருணங்கள்.  நாம் சீர்பட வேண்டி, நம்மை தயாரிக்கும் ஒரு முக்கியமான காலகட்டமாக திருச்சபை நிறுவியுள்ள லெந்து நாட்களை அற்பணிப்புடன் கடைபிடிப்போம்.

இயேசு கிறிஸ்து தமது நோன்பிற்கு முன்னதாக திருமுழுக்கு பெற்று ஆயத்தமானார். நாம் எப்படி ஆயத்தமாகிறோம் என்பதே நம்முன் நிற்கும் கேள்வி!

Rev. Godson Samuel

Contact:  palmyra_project@yahoo.com, malargodson@gmail.com

mobile: 09702567603


%d bloggers like this: