![20160515_081156[1]](https://pastorgodson.files.wordpress.com/2016/05/20160515_0811561.jpg?w=450)
முதல் பதனீர் கலயம் இறக்கப்படுகிறது
தற்பொழுது அணுஷக்தி நகர் போதகராக இருக்கும் ஏமில் அவர்கள் என்னைக் காணும்படியாக வந்திருந்தார். அந்த நாள் நானும் அவரும் மற்றும் திருச்சபையின் ஒரு அங்கத்தினருமாக பனங்காட்டுக்குள் நுழைய முற்பட்டோம். ரசாயனி முழுவதும் பாம்புகள் சர்வ சாதாரணமாக நடமாடும். வருடத்துக்கு ஒருமுறை காய்ந்த புற்களை தீ வைத்து கொழுத்திவிடுவார்கள். நாங்கள் சென்ற நேரம் மழைக்காலம் முடியும் தருவாயயிருந்தது. பச்சை விரவிக்கிடக்கும் புற்களும் செடிகொடிகளும் நிறைந்த பாதையில் பனைமரத்தைக் குறிவைத்து நடந்தோம்.
பாதை குறுகலாகவும், புதர்செறிந்தும் காணப்பட்டது. பறவைகளின் சிறகடிப்பும் சத்தங்களும், உர்வனவற்றின் சலசலப்புகளும் நிறைந்த அந்த இடத்தில் வந்தபோது பனைமர கூட்டத்தையும் ஒரு பழைய ஆளில்லாத வீட்டையும் ஒருசேர பார்த்தோம். இந்த பனை மரத்தின் அடியில் பனம் பழங்கள் கிடைக்குமா என பார்த்தபோது, அங்கே நாங்கள் கண்ட காட்சி மிகவும் அதிசயமாயிருந்தது.
சிதறிக்கிடந்த பனம்பழங்கள் யாவும் பழயவைகளாயிருந்தன. மழையில் நனைத்திருந்ததால் நைந்துபோன நார்களோடு திசைக்கொன்றாய் கிடந்தன. அவைகளைக் கையில் எடுத்து பார்த்தபொழுது பெரும்பாலானவைகள் முளைத்திருந்ததைக் கண்டோம். அது ஒரு அதிசய காட்சியாகவே எனக்குப் பட்டது. பனம்பழத்தை சேகரித்து மண்மேடெடுத்து அவைகளில் பாவி முளைக்கவைத்தலே முளைக்கும் என புரிதல் கோண்டிருந்த எனக்கு, துடிப்புடன் தன் தளிர் விரல் நீட்டி நம்மை நோக்கி எம்பும் சிறு குழந்தை போல அது காணப்பட்டது.
அன்று மட்டும் 50க்கும் அதிகமான முளைத்த பனக்கொட்டைகளைச் சேகரித்தோம். பலவற்றை அன்றே ரசாயனி திருச்சபை வளாகத்திலும் கல்லரைத்தோட்டத்திலும் நட்டோம். பிற்பாடு குழந்தைகளையும் ஜாஸ்மினையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்திற்கு சென்று பலமுறை விதை சேகரித்து வாய்ப்பு கிடைக்கு இடங்களில் நட துவங்கினோம். இதற்குள் அந்த ஆளில்லாத வீட்டிற்குள் சில நடமாட்டம் தெரிந்தது. பிற்பாடு அவர்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்த பனைத்தொழிலாளர்கள் என்றும், மாதம் பதினைந்தயிரம் அவர்கள் சேட் அவர்களுக்குக் கொடுத்க்டு அவர்களை வைத்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொண்டேன். ஒரு பனைத் தொழிலாளி குறைந்த பட்சம் 10 முதல் 15 மரங்கள் ஏறி 50 லிட்டர் முதல் 80 லிட்டர் வரை இறக்குகிறார் என்பதை அறிந்துகொண்டேன்.
இவர்கள் உடைகள் மிகவும் எளிமையானவைகள். சிறிய கால் சட்டைகளோ அல்லது லுங்கியோ மாணித்து மேற்பகுதியில் கையில்லாத பனியன் அணித்துருக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் அரிவாள்களும் குமரி, நெல்லை பகுதிகளைப்போன்று பெரிதாக இராது.மெல்லிய விரல் அளவே பருமனுள்ள அரிவாள்களையே பாளை சீவவும் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும் வைத்திருக்கிறார்கள். இடுப்பிலே ஒரு பெல்ட் உண்டு அல்லது இரு கயிறு கட்டியிருக்கிறார்கள். இக்கயிற்றில் ஒரு இரும்பு கம்பியில் செய்த கொக்கியை மாட்டிக்கொள்லுகிறார்கள். கலயத்தை ஆற்ற இறக்க பயன்படுமாயிருக்கும். வேறொன்றும் அவர்களிடம் தளவாடங்களக இல்லை.
இவர்களிடம் ஓலை கேட்டுப் பெற்றுக்கொள்ளுவது எளிதான காரியம் இல்லை. கள் வடிக்கும் மரத்திலிருந்து அவர்கள் ஒருபோதும் ஓலை வெட்டுவது கிடையாது. என்றாலும் புதிய மரத்தில் கள்வடிக்கத் துவங்கும்போது கீழ்பகுதி மரத்தை சுத்தம் செய்யும்போது பெறுகிற ஓலைகளி நாம் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். தனியாக வேண்டுமனால் அதற்காக வேறு மரத்தையே அவர்கள் தெரிவு செய்கிறார்கள்.
தேடுதலின் நிறைவாக 5 இடங்களில் கள் இறக்கும் 13 பனைத்தொழிலாலர்களைக் கண்டேன். இவர்களில் ஒருவர் பழங்குடியினத்திஅச் சார்ந்தவர், 7 பேர் உ. பி, பீகார் ஆகிய பகுதிகளில் இருந்து மாத சம்பளத்திற்காக வந்தவர்கள். இவர்கள் சுமார் 8 மாதங்கள் இங்கே தங்கி, பணிசெய்து மழைக்காலத்தில் தங்க தங்க ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். மீதமுள்ல 5 நபர்களும் 2 குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மண்ணின் மைந்தர்கள். களிறக்குவதை தங்கள் தொழிலாக கொண்டவர்கள். இவர்களுள் ஒரு குடும்பத்தைச் சார்ந்த பனைத்தொழிலாளிகள் கள் இறக்குவதை தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தாலும் அவர் அவைகளைச் சுவைப்பதில்லை. கடவுளுக்காக மாலைப் போட்டிருக்கிறதாக கூறினார்.
பல்வேறு முயற்சிகௌக்குப் பின்பு, ஒரே ஒருவர் தான் பதனீர் இரக்க தனது விருப்பத்தைக் சொன்னார். உடனே நான் கார்கரில் வசிக்கும் சகோதரர் ராபி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்கள் அச்சமயம் தனது சொந்த ஊரான குளச்சலௌக்கு சென்றிருந்ட்தார்கள். அவர்கள் நீற்று சுண்ணாம்பு வாங்கி வருவதாக உறுதியளித்தார்கள். நவி மும்பை கிறிஸ்தவ ஐக்கியம் நடத்திய ஒரு கூடுகையில் அவர் அதை என்னிடம் கொடுத்தார். நான் அதைக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தேன்.
சுமார் ஒரு வார காலம் எங்களால் ஒருங்கிணைக்க முடியாத முயற்சி நேற்று ஒருவாராக நிறைவடைந்தது. ஒரு கலயத்தை அவர் கட்டி இறக்க, நான் அதைக் கழுவி உடனடியாக சுண்ணாம்பிட்டு மரத்தில் கட்டினோம். காலை நான் சென்றிருந்தபோது பதனீர் கிடைத்தது. ஆனால் புதிய கலயத்தில் வைக்கவேண்டும் எனும் உண்மையினை புரிந்துகொண்டோம். மேலும் சுண்ணம்பின் அளவும் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் அறிந்துகொண்டோம்.
பெற்றுக்கொண்ட அரைலிட்டர் பதநீரை ஆலயத்தில் காணிக்கையாக வைத்தேன். கர்த்தர் செய்த்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு துதி.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
malargodson@gmail.com
You must be logged in to post a comment.