Archive for ஏப்ரல், 2017

கால்களைக் கழுவுதல்

ஏப்ரல் 13, 2017

கால்களைக் கழுவுதல்

பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் அல்லது வியாகுல வியாழன் என்று சொல்லப்படும் நாள் திருச்சபையின் வாழ்வில் மிக முக்கியமானது. இயேசு கற்றுக்கொடுத்த ஆக சிறந்த விழுமியமான தாழ்மை என்பதை மிக அழகாக எடுத்துரைக்கும் இயேசுவின் வாழ்வின் இறுதி நாட்களில் அவர் அவர்களுக்கு செய்த மாதிரி விளக்கம் அது. அன்று தான் இயேசு தமது சீடர்களுக்கு கால்களைக் கழுவி “….. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.” (யோவான் 13:12 – 15 திருவிவிலியம்)

ஒருமுறை எனது புதிய எற்பாட்டு ஆசிரியர் இத்திருமறைப்பகுதியை குறித்து சொல்லுகையில் “இயேசு செய்த அருச்செயல்கள் அனைத்திற்கும் இணையான, இல்லை அதற்கும் அதிகமான பல அருச்செயல்களை அக்காலகட்டத்தில் எழுந்த பல்வேறு நூல்களில் நாம் காணலாம். ஆகவே சீடர்கள் ஒருவேளை இயேசுவை உயர்த்திப்பிடிக்க அவர்களும் வேறு விதமான அருஞ்செயல்களை அவர் செய்த பணிகளுடன் இணைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இயேசுவின் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தலைவர் ஒருவர் தமது தொண்டர்களுக்கு கால்களை கழுவிய எந்த நிகழ்வும் பலஸ்தீனா அருகில் காணப்படும் எந்த இலக்கிய பதிவுகளிலும் இல்லை. ஆகவே இது சீடர்களின் கற்பனையில் உதித்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது சீடர்கள் வேறெங்கோ இருந்து கடன் வாங்கிய நிகழ்வோ அல்ல” என்றார்.

என்னை மிகவும் பாதித்த திருமறைப்பகுதி இதுவாக பின்னர் மாறிவிட்டது. தாழ்மை வேண்டும் என பொதுவாக கூறுகிறோம், ஆனால் நமது வாழ்வு ஆணவம் நிறைந்த ஒன்றாகவே அமைந்திருக்கிறது. நமது தாழ்மையை நடைமுறை வாழ்வில் பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம். செய்கிறோம், ஆனால் குனிந்து பிறருக்குச் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்மை நிமிர்த்தும்  வல்லமை கொண்டவை. ஆகவே, இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியை விட மிகப்பெரும் அருஞ்செயல் ஏதும் இல்லை என்றே நான் கூறத்துணிவேன்.

எனது சிறு பிராயத்தில், அப்பா சி ஏஸ் ஐ திருச்சபையில் போதகராக இருந்தத போது ஆலயத்தில் இவ்வகை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற்று நான் பார்த்ததில்லை. ஆனால் அதைக்குறித்து அப்பா உணர்சிகரமாக பேசிய செய்திகள் நினைவிருக்கிறது. இவ்வளவு பேசியும் ஏன் திருச்சபையில் இதனை அப்பா நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்பாவிடம் நான் இதைக்குறித்து கேட்டபோது “கத்க்டோலிக்கர்கள் தான் அப்படி செய்வார்கள்” என அப்பா சுருக்கமாக சொல்லி நிறுத்திவிட்டார். ஆனால் அப்பாவால் மத்திரம் அல்ல கால்களைக் கழுவும் நிகழ்வை திருச்சபையின் வழிபாட்டு மரபில் ஏற்றுக்கொண்ட கொண்ட திருச்சபையான மெதடிஸ்ட் திருச்சபையில் பணிபுரியும் என்னாலும் எதுவும் செய்ய இயலாது என்பதே உண்மை. ஏனென்றால் அதற்கென திருச்சபை மக்கள் பழக்கப்படவில்லை. அது வெறும் ஒரு சடங்கு என்றே எண்ணப்படுகிறது. ஆகையினால் ஒரு மனவிலக்கம் இருக்கிறது.

நான் அகமதாபாத் பகுதியில் பணிபுரிகையில், முதன் முறையாக ஒரு பெண்மணியை அழைத்து அவர்கள் கரங்களில் தண்ணீர் வார்த்து என்னிடமிருந்த  துடைக்கும் துண்டை அவர்களுக்கு கொடுத்து அவர்களை துடைத்துக்கொள்ளச் சொன்னேன். அதற்குக் காரணம் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே போகாதது ஒரு காரணம். அவர்கள் கால்கள் சுத்தமாகவே இருக்கும், ஆனால் அவர்கள் கரங்கள் அடுப்படியில் புழங்கி அழுக்குகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் இந்தியாவில் இருப்பதால் கரங்களே ஒப்புநோக்க அழுக்கானவை. ஆகவே கால்களுக்கு பதிலாக கரங்களை ஒரு அடையாளமாகச் முன்னிறுத்த முயற்சித்தேன். மேலும் பெண்களின் கால்களையோ அல்லது கரங்களையோ பொதுவான இடத்தில் பிடிப்பது  என்பது திருச்சபையில், மிக சங்கடமான சூழ்நிலைகளை  ஏற்படுத்தும்.

பெரும்பாலும் இதுவரை நடைபெறாத நிகழ்ச்சிகள் திருச்சபையில் ஒரு போதகர் புதிதாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றால், திருச்சபையின் செயற்குழுவின் ஒப்புதல் வேண்டும். நல்ல காரியம் தானே என்று நினைத்து கால்களைக் கழுவும் நிகழ்ச்சியை நாம் அறிமுகப்படுத்த எத்தனித்தால், அது கத்தோலிக்கருடைய வழக்கம் நாம் அப்படி செய்யமுடியாது என்பார்கள், அல்லது எங்களிடம் தாழ்மை இருக்கிறது தாழ்மை இல்லாத நீங்கள் எங்கள் முன் கபட நாடகம் ஆடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரடியாக சொல்லுவார்கள், அதற்கு நாம் அமைதியாக இருந்தால் அவர் ஒத்துக்கொண்டார் பார்த்தீர்களா என்ற வெற்றிக்களிப்பும் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னால் பார்த்தீர்களா திமிர் பிடித்த சாதாரண மனுஷன் இவன், எங்களை எல்லாம் ஒப்புக்கு இங்கே அழைத்துக்கொண்டு வந்து அவமானப்படுத்துகிறான் என்பார்கள். மேலும் சிலர், இயேசு சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று திருமறை குறித்து நமக்கே விளக்கம் தர ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்டவர் சடங்குகளைக் முதன்மைப்படுத்தவில்லை அவர் உள்ளத்தை தான் பார்க்கிறார் போன்ற வார்த்தைகளைக் கூறி, திருச்சபையில் இதுவரை நடக்காதது இனிமேலும் நடக்ககூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் இந்த வெளிப்படையான தடைக்கு காரணம்  வேறு என்பதை உடனிருந்த போதகராக நான் அறிவேன். யாருக்கு இந்த முதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தான் அந்த சிக்கல் உறைந்திருக்கிறது. எனக்கு கிடைத்தால் நல்லது, ஆனால் அதை பெற்றுக்கொண்ட நான் தாழ்மையின் உருவாகவே வலம்வரவேண்டும், என் உண்மை சூழல் அதற்கு ஒப்பாது. அல்லது, யாராவது இங்கே இவ்விதமாக எனக்குப்பதில் கால்களை கழுவும் வாய்ப்பினைப் பெற்றால், அது போதகருக்கும் அவருக்கும் உள்ள நெருங்கிய உறவையல்லவா காட்டுகிறது என்கிற எண்ணம். திருச்சபைகள் இரண்டாக பிளந்திருக்கிற சூழலில், நாம் அதிகமாக எதுவும் செய்ய  இயலாது. ஆகவே நான் மெல்ல அமைதலானேன். திருச்சபைக்குள் உள்ள இறுக்கமான சூழலை உணர்ந்து நாம் தான் வேறு வகையில் இவைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பாடத்தை உணர்ந்துகொண்டேன்.

ஆனால் அப்படி ஒருவரின் கால்களை கழுவுவதிலும் ஒரு முக்கிய செய்தியினை உள்ளடக்கி செய்வது இன்னும் சிறப்பாக இருக்குமே என்றும் எண்ணிக்கொண்டேன். ஆகவே எங்கிருந்து இதை தொடங்குவது என்று எண்ணுகையில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் குருத்தோலைகளை எடுத்துக்கொடுத்த மக்கள் இன்றும் ஒட்டுமொத்த திருச்சபையால்  கவனிக்கப்படாமல் இருக்கின்ற சூழலில் ஒரு பனைத் தொழிலாளியின் கால்களைக் கழுவுவது மிக முக்கியமான ஒரு மாற்றத்திற்கான விதையாக அமையும் என்று நான் எண்ணினேன்.

பழங்காலத்தில் செருப்பணிந்து அல்லது செருப்பே அணியாமல் பல மைல் தூரம் நடந்தே செல்லும் மக்கள் ஒரு சுழலில் விருந்தோம்பல் செய்யும் முன், புழுதிபடித்த பாதங்களை கழுவும் வழக்கம் பல கலாச்சரங்களில் இருந்திருக்கிறது.  திருமறையிலும் இன்நிகழ்ச்சிகளை நாம் பார்க்கலாம். ஆபிரகாம் மம்ரே என்ற பகுதியில் தேவதாரு மரங்களின் அருகில் ஆண்டவரின் காட்சியை பெறுகிறார். நடுப்பகல் வேளையில் அவர் மூன்று பயணிகளைக் கண்டு அவர்களை விருந்தோம்ப அழைக்கிறார். அவ்வேளையில்,  “இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். (தொடக்க நூல் 18: 4 – 5அ, திருவிவிலியம்).

பெரும்பாலும் வேலைகாரர்கள் தங்கள் எஜமான் கால்களைக் கழுவுவதும், விருந்தாளியை வீட்டின் உரிமையாளர் மரியாதையின் நிமித்தம் கால்களை கழுவுவதும் வழமையாக இருந்திருக்கிறது. அதே வேளையில் இயேசுவின் காலத்தில் செல்வந்தர்கள், உயர்வாய் மதிக்கப்பட்ட பரிசேயர்கள் பொன்றோர் பிறர் கால்களைக் கழுவ தயக்கம் காண்பித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இயேசு சீமோன் என்னும் பரிசேயன் இல்லத்திற்குச் செல்லுகிறார். அங்கே ஒரு பெண் வந்து அவரது கால்களை தன் கண்ணீரால் நனைக்கிறாள். அப்போது சீமோன் தனக்குள் இவர் ஏன் பாவியான பெண்கள் தன்னை தொட அனுமதிக்கிறாள் என தனக்குள் எண்ணுகிறார். அப்போது இயேசு அவனது எண்ணங்கள் என்ன என்பதை உணர்ந்துகொள்ளுகிறார். ஆகவே அவனிடம் ஒரு காரியம் சொல்லவேண்டும் எனக் கூறி, “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.” (லூக்கா 7: 44 திருவிவிலியம்) எனச் சொல்லுவதைப் பார்க்கிறோம்.

வெளிப்படையாக கால்களைக் கழுவியே தீரவேண்டுமா? எனக் கேட்பவர்கள் எப்போதும் திருமறை வாக்கியங்களை மேற்கோள் காட்டாதவர்களாய் இருப்பது நலம். ஆனால் இயேசு கூறிய முக்கிய அறிவுறுத்தல்களில் இதுவும் ஒன்றாய் இருக்கையில், இவைகளை கைக்கொள்வது சரியானது என்றே உணருகிறேன். இயேசு கால்களைக் கழுவ மற்றுமொரு முக்கிய காரணம் இருப்பதாக நான் உணர்ந்த இடத்தில் நானும் கால்களைக் கழுவ கடன் பட்டவன் என்பதை உறுதிபடுத்திக்கொண்டேன்.

இயேசு தமது சீடர்களை ஊழியத்திற்காக அனுப்புகிறார். அவ்வேளையில் அவர்களிடம் “பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.” (மத்தேயு 9: 10 திருவிவிலியம்) எனக் கூறி அனுப்புகிறார். தனது அழைப்பை ஏற்று வந்தவர்களை தனது ஊழியத்திற்காக அவர் அனுப்புகையில், அவர்கள் கால்கள் வெறுமையாக இருக்கும்படி அவர் அனுப்பியிருக்கிறார். “நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!” (ஏசாயா 52: 7 திருவிவிலியம்) தமக்கென  மலைகளில் வெறுங்கால்களுடன் பயணித்து நற்செய்தி  அறிவித்தவரின் உடைந்து நொறுங்கி சிதைந்து நைந்து இரத்தம் கசிய வரும் பாதங்கள் இயேசுவிற்கு அழகாத்தானே இருந்திருக்க வேண்டும். அவைகளை ஆற்றுப்படுத்தி சற்றே தூய்மைப்படுத்துவதை அவர் பெரு விருப்புடனேயே செய்திருக்கவேண்டும். கூடவே அவர் ஒருவரில் ஒருவர் அன்புடன் இதைச் செய்யவும் கட்டளைக் கொடுக்கிறார். இதில் நாம் பெரியவர் சிறியவர் எனப் பார்ப்பது தகாது என குறிப்புணர்த்துகிறார்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

ஆகவே துணிந்து இன்று ரசாயனி, நார்போலி பகுதியிலுள்ள பனை தொளிலளரின் வீட்டிற்கு நானும், ஜாஸ்மினும் மித்திரனுமாக மாலை 5 மணிக்குச் சென்றோம். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். அனுமன் பக்தர்கள். என்னை பல நாட்களாக நன்கு அறிந்தவர்கள். சற்று இருங்கள் எனக் கூறி பனம் பழம் எடுக்கச் சென்று பத்தே நிமிடத்தில் திரும்பும் போது அவர்கள் அங்கே இல்லை. நான் பனம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக ஒரு 20 நிமிடம் காத்திருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் வர நேரமாகலாம் என்பதை உணர்ந்ததால், மாலை ஆறு மணி ஆராதனைக்காக நாங்கள் புறப்பட்டோம். புறப்படுகையில், அவர்கள் குடும்பத்தாரிடம், நாங்கள் மீண்டும் 7 மணிக்கு பின்பு வருவோம் அவர்களை இருக்கச் சொல்லுங்கள் என சொல்லிச் சென்றோம்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

ஆராதனை நிறைவு செய்த பின் மீண்டும் அவர்களைப் பார்க்க விரைந்து சென்றோம். நல்லவேளை அண்ணன் தம்பி இருவரும் அங்கே இருந்தனர். இன்னும் வேலை இருக்கிறது என்றாலும் உங்களுக்காக தான்  காத்திருந்தோம் என்றனர். உண்மைதான், இருவரும் கடும் உழைப்பாளிகள். பனை ஏறுவதுடன் தோட்டம், பசு, கோழி போன்றவைகளையும் கவனித்துக்கொள்ளுகிறார்கள். நான் ஒரு 15 நிமிடங்கள் மட்டும் எனக்கு தருமாறு  அவர்களிடம் கேட்டேன். சரி என்றனர். இருவரையும் அவர்கள் வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் அமரச் செய்துவிட்டு, அவர்கள் கால்களில் பனம் பழக் கூழினை முதலில் தடவினேன். சேற்றிலும் மண்ணிலும் உழன்ற அழுக்கான கால்கள். முள் மற்றும் கற்களில் இடறிய  வெட்டுகள் தழும்புகள். பனை மரத்தில் ஏறிய காய்ப்புகள். அதை தொடுகையில் ஏற்பட்ட உணர்வுகள் பலதரப்பட்டவை. எனது தந்தையின் கால்களைத் தவிர எவர் கால்களையும் இவ்விதம் அணுகி நான் தொட்டது இல்லை. ஒரு மூதாதையின் கால்கள் என்றே அவைகள் என் முன் இருந்தன. நான் எனது வாழ்வில் பலமுறை மனதில் நடித்து இவை வாய்க்குமா என்று ஏங்கிய பொற்தருணம் அது. இது எனது வாழ்நாள் சாதனை. திருச்சபை யாருடைய கால்களைப் பிடிக்கவேண்டும் என சுட்டும் தகுதியை நான் பெற்ற நாள் இது.  பனை ஏறும் தொழிலாளிக்கு போதகராக நான் அளிக்கும் முதல் அங்கீகாரம். நான் இவைகளில் ஒன்றி இருக்கையில், ஜாஸ்மின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தாள். பிறரை ஊக்குவிக்க இப்புகைப்படம் உதவியாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

கால்களைக் கழுவுதல்

கால்களைக் கழுவுதல்

அவர்கள் கால்களை தண்ணிரால் கழுவி துடைத்து எழுந்தபோது ஒரு பாரம் என்னிலிருந்து அகன்ற ஒரு பெரும் விடுதலை உணர்வினை அடைந்தேன். இவ்விதமான உணர்ச்சி மிக்க ஆராதனையினை நான் எனது ஊழியத்தில் வெகு சில தருணங்களிலேயே கடந்து வந்திருக்கிறேன். அவர்களின் கால்களைக் கழுவுகையில், இயேசு தமது சீடர்களுக்காக இவ்விதம் செய்தார் எனவும், இவ்வுலகில் சிறியோர் எனக் கருத்தப்படுபவரே விண்ணுலகில் கடவுளால் பெரியவர் என்னப்படுபவர் என்ற கருத்துக்களை அவர்களுடன் சொன்னேன். எனது இந்தி உரையாடல்களில் உள்ள தடுமாற்றத்தாலும் புலமையின்மையினாலும் என்னால் அவர்களுடன் அதிகமாக எதையும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும்  அத்தருணம்  பெரும் நிறைவளிப்பதாக இருந்தது. அவர்களும் தங்கள் உள்ளாக பெரும் மாற்றம் அடைந்ததை அவர்கள் முகங்கள் காட்டியது. எங்களுக்கு இஞ்சி காப்பி கொடுத்து உபசரித்தார்கள்.

அனைத்தும்  முடித்து திரும்பும் முன்னால் அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த துணியும் ஒரு சிறு தொகையும் கொடுத்துவிட்டு வந்தேன். வசதி நிறைந்த திருச்சபைகள் பனை தொழிலாளியின் கால்களை கழுவாவிட்டாலும் இதனை மட்டும் செய்வதுவே ஒரு சிறந்த துவக்கமாயிருக்கும் என்ற நம்பிக்கையில்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

 

திருச்சபையின் பனைமர வேட்கை – 32

ஏப்ரல் 9, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 32

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

குருத்தோலை திங்கள்

மற்றொரு தாயார் எழுந்து எங்களது இளமைக் காலத்தில் பனைமரங்கள் அழிவை நோக்கி சென்றதாக நாங்கள் கருதவில்லை, ஒரு வேளை போர் மிகப்பெரிய அழிவை பனை மரங்களுக்கு  ஏற்படுத்தியிருக்கலாம். என்றாலும் பனை மரம் தானே வளரக்கூடியது என்பது தான் எங்களது புரிதல். திருச்சபை இதில் எப்படி ஈடுபடுவது என்பதை சற்று விளக்குங்கள் என்றார்.

காலங்கள் மாறிக்கொண்டு வருகிறதை நாம் கவலையுடன் தான் பார்க்கிறோம். முன்பு போன்ற வாழ்கை முறை அல்ல இன்று நாம் வாழ்வது. இயற்கை சார்ந்து நாம் அனுபவித்தவைகளில் வெகு சிலவே இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. நமது வீட்டின் அடுப்பறையை நாம் எட்டிப்பார்த்தால் நமக்குத் தெரியும் நம்முடைய அடுக்களையில் புழங்கிய 60 சதவிகிதத்துக்கும் மேலான பொருட்கள் இன்று பயன்பாட்டில் இல்லை. நமது பெற்றோர் ஓலையில் செய்ய அறிந்திருந்த கைப்பணிகளில் எவைகளை நாம் அறிந்திருக்கிறோம். பணம் கொடுத்து பனைஓலைப் பொருட்களை வாங்கி பாவிப்பது சரியானது என நமக்குச் சொன்னவர்கள் யார்? இன்று நமது அடுக்களையிலிருந்து காணாமல் போனது ஓலைப் பொருட்கள் மட்டும் அல்ல, பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இக்காலகட்டத்தில் இழந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை பறைசாற்றும் அத்தாட்சிகள் அவை.

தண்ணீர் என்பதை விலைக்கொடுத்து வாங்க வேண்டிய சூழல் வரும் என்று நாம் நம் சிறு வயதில் எண்ணியிருக்க மாட்டோம். இன்று தண்ணீர் விற்பவர் மிக சிறந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றே பொதுமனம் எண்ணிக்கொள்ளுகின்றது, ஏனெனில் அவர் கை நிறைய பொருளீட்டுகிறார். அலுங்காமல் குலுங்காமல் பொருளீட்டுவது ஒன்றே முன்னேற்றம் என்று கருதப்படுகிறது. வளங்களை சிக்கனமாய் பேணி பாதுகாப்பவர்களைவிட ஊதாரிகளையே வணங்கப்படவேண்டியவர்களாக கருதும் தீய எண்ணம் நமக்குள் ஊன்றப்பட்டிருக்கிறது.

நமது திருச்சபையின் முன்பு நிற்கும் இரு பனைகளை காலனிய மனநிலைகளின் எச்சம் என்று நான் குறிப்பிட்டேன். சிலர் அதனால் மனம் வருந்தியிருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள மனநிலை என்ன என்று நாம் சற்றே ஆழ்ந்து பார்க்கையில், நமக்கு சில தெளிவுகள் கிடைக்கும். பனை மரங்கள் திருகோணமலை பகுதியில் இருந்திருக்கிறது எனவும் அது சார்ந்து மக்கள் தங்கள் தொழில் வாய்ப்புகளை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் நாம் மறுக்க இயலாது. இச்சுழலில் தான் அழகுக்கான பனை மரம் நடப்படுகிறது. திருச்சபை தன்னை கடின வேலைகளிலிருந்து விலக்கிக்கொள்ள துடிக்கிறதோ? சீவல் தொழிலை அடிமைத்தனம் என எண்ணும் கால சூழ்நிலையில் இருந்ததால் அதிலிருந்து திருச்சபை விடுதலை பெற அழைப்பு விடுப்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. சரிதானே எனத் தோன்றும் இவ்வெண்ணத்தில்,  காணப்படும் குறை தான் என்ன? நாம் காலனீய எண்ணங்களுக்கு அடிமையாகிறோம். அவர்கள் நமக்கு உனது வாழ்வு பிழையானது எனச் சொல்லுகிறார்கள். எனக்கு அடிமையாக இருந்துப்பார், உனது வாழ்வு எங்கோ சென்றுவிடும் எனக் கூறுகிறார்கள்.

அதற்காக நமது முன்னோர்கள் நமக்கு சேமித்து வைத்த அறிவு தளங்களிலிருந்து நம்மை விலக்குகிறார்கள். பனை  உணவு பொருள் குறித்து நமக்கு இருந்த எண்ணங்களை நம்மிலிருந்து அகற்றி அவர்களின் உணவு பொருள்களை பயன்படுத்த நமக்கு கற்பிக்கிறார்கள். இன்று நாம் பயன்படுத்தும் புட்டு எனும் உணவிற்கு ஈடாக பாண் (பிரட்) பயன்படுத்தும் அளவிற்கு அவர்களின் தாக்கம் நம்மில் நிலவுகிறது.  இனிமேல் பனை ஏற வேண்டாம் சீவல் தொழிலில் ஈடுபடவேண்டாம், பொருள் ஈட்டினால் போதும், நமக்கு தேவையானவைகள் கிடைக்கும் என்ற நுகர்வு கலாச்சாரத்தின் துவக்கத்தை நமக்கு விதைத்துச் சென்றுவிட்டனரோ?

பனை மரங்கள் தானே வளரும் என்ற சூழல் இன்று மாறிக்கொண்டு வருகின்றது, இன்று வளர்ச்சி என்ற பெயரில் பனைமரங்கள் வேகமாக அழிந்துவருகிறது. ஒரு நாளைக்கு இலங்கை முழுவது 100 மரம் வீதம் வெட்டப்படுகிறது எனும் புள்ளி விபரம் இருக்கிறது. பல புதிய கட்டுமான பணிகள் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவ்வகையில் திருச்சபை பனை மரங்களை நடுவது அவசியமாகிறது. அதற்கான கரணம் ஒன்று உண்டு.

32 Rev. Godson

இரண்டாயிரம் வருடங்களாக திருச்சபைக்குள் நுழைந்துவிட்ட சடங்குள் ஏராளம். அவைகள் மாற்றங்களுக்கு உட்பட்டே இன்று நம்மை அடைந்திருக்கின்றன. திருமறையில் காணப்படுவது போல் எதுவுமே இன்று நம்மிடம் எஞ்சியிருக்காது. அது சாத்தியமும் அல்ல. காலம் அவைகளில் வடுக்களையும் வண்ணங்களையும் ஏற்றி இறக்கியிருக்கிறது  என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது. மாற்கு நற்செய்தி நூலின் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் குருத்தோலை பவனி நடைபெற்ற நாள் திங்கட் கிழமை என்றே சமீபத்திய புரிதல் எழுந்துள்ளது. சிந்தனைக்காக குருத்தோலை திங்கள் என ஒருபுறம் வைத்துக்கொண்டாலும், திருச்சபை அனுசரிக்கும்  குருத்தோலை ஞாயிறு எனும் பண்டிகை நான்காம் நூறாண்டு முதல் வழக்கத்தில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகிக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டு இறுதிப்பகுதியிலிருந்து  அதுகுறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெறுகின்றன.  சிறிது சிறிதாக திருச்சபைக்குள் நீக்கமற நிறைந்து விட்ட இவ்வழக்கத்தில் நாம் பிடித்துச் செல்லுகின்ற குருத்தோலைகளை நமக்கு எடுத்துக்கொடுப்பவர்கள் யார்? அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாது நாம் கொண்டாடும் இன்நீண்ட பாரம்பரியத்தில் காணப்படும் இடைவெளிகளை எவ்விதம் நாம் எடுத்தாளப்போகிறோம். குறிப்பாக  பனை மரங்களே இல்லை என்று சொன்னால் நாம் குருத்தோலை திருவிழாவை எவ்விதம் கொண்டாடுவோம்?

குருத்தோலை திருநாள் அலங்காரம்

குருத்தோலை திருநாள் அலங்காரம்

குருத்துக்களை எடுக்கையில் மரங்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றது. மரங்களின் வளர்ச்சியை அது பாதிப்பதோடு அதில் நாம் பெறும் பயன்களையும் அது குறைத்துவிடுகிறது. ஒருமுறை பெங்களூரில் ஒரு பேராயர், குருத்துக்களை எடுத்து வருவதை தடை செய்ய வேண்டும் எனக் கூற அது பெரிய விவாதம் ஆகிவிட்டதாக எனது இறையியல் ஆசிரியர் என்னிடம் கூறினார். அவ்விதம் நம்மால் குருத்தோலைகளை இழந்து ஒரு கொண்டாட்டத்தை முன்னெடுக்க இயலாது. ஆகவே தான் நாம் மரங்களை நடுவதும் பேணுவதும் அவசியமாகிறது. ஆலய வளாகங்களில் பனை மரங்கள் இல்லை என்று சொன்னால் பிற்பாடு நாம் எடுக்கும் குருத்தோலை எங்கிருந்து வரும்.? அவ்விதம் குருத்தோலைகள் நாம் பெறுமிடங்களில் அவற்றை ஒரு வணிக பறிமாற்றமாக மட்டுமே  நாம் பார்த்திருக்கிறோம்.  அவர்கள் மத்தியில் பணி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளதாக நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நமது குருத்தோலை பண்டிகை அர்த்தம் பெறும் ஒன்றாக அமையும்.

இயேசுவின் முன்னே குருத்தோலைகளைப் பிடித்துச் சென்றவர்கள் அனைவரும் பனை சார்ந்த வாழ்வியலைக் கொண்டிருன்ட்தவர்கள் என நாம் பார்த்தோம். அவர்கள் ஓலைகளை எடுத்துச்செல்ல உரிமை பெற்றவர்கள். எனது குடும்பத்தின் பணி ஈச்சமரம் ஏறுவது ஆகவே நாங்கள் ஈச்ச ஓலைகளை எமது மீட்பர் முன்னிலையில் அசைக்க அனைத்து தகுதிகளும் உடையவர் என்ற கருத்தை அது ஆணித்தரமாக நிறுவுகிறது.  “உள்ளபடி” வரவே ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார்.

சிஸ்டர் கிளேர் (Sr. Clair)  வரைந்த குருத்தோலை பவனி


சிஸ்டர் கிளேர் (Sr. Clair) வரைந்த குருத்தோலை பவனி

நமது வாழ்வு பனை மரத்திலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டது. இச்சூழலில் பனை சார்ந்த கரிசனையுடன் மட்டுமே நாம் நமது சமய நம்பிக்கைகளை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம். நமக்கும் ஓலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சூழலில் நாம் ஓலைகளை எடுத்துச்செல்லுவது அர்த்தம் நிறைந்ததாக இராது. மாறாக இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில்  குருத்தோலைகளை சுமந்து செல்லுவதை விடபனை மரத்தினை நடுவது தான் பொருள் பொதிந்ததாக இருக்கும். திருச்சபை ஒவ்வொரு குருத்தோலை ஞாயிறு அன்றும் குறைந்தபட்சம் ஒரு பனை மரத்தையாவது  நட முற்படலாம். ஒருவேளை ஆலய வளாகத்தில் இடம் இல்லை என்று சொன்னால், நாம் செல்லும் குருத்தோலை பேரணியின் போது சாலை ஓரங்களிலோ அல்லது பொதுவிடங்களிலோ அனுமதி பெற்றும் நடலாம். இவ்வகையில் திருச்சபை வருடத்திற்கு ஒரு மரம் நட்டாலே அது குறியீட்டு ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திருச்சபையின் சூழியல் பங்களிப்பை அது அறுதியிட்டுக்காட்டும்.  நொடிந்துபோயிருக்கும் சீவல் தொழிலாளர் வாழ்வில் அது நம்பிக்கை அளிக்கும் பேரணியாக இருக்கும். ஆண்டவரும் மகிழுவார்.

திருமறை சார்ந்து பொதுவான கேள்விகளை கேட்க போதகர் திருச்சபையினரை ஊக்கப்படுத்தினார், ஆனால் எவரும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் சற்றே தளர்ந்து போனேன். எவ்வித சலனமும் ஏற்படுத்தாமல் இவ்விடத்தை விட்டு கடந்து போகிறேனா ஆண்டவரே என்று உளம் உருகி நின்றேன். அவ்வேளையில் போதகர், அந்த தாயாரிடம் ஜெபிக்க சொன்னார்கள். அந்த ஜெபம் கடவுள் உண்மையிலேயே ஒரு பெரும் அசைவை திருகோணமலை மெதடிஸ்ட் திருச்சபையில் ஏற்படுத்தியிருக்கிறார் என்னும் நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது. ஒரு வயதான மூதாட்டி, எனது கரத்தில் இலங்கைப் பணம் 100 ரூபாயை வைத்தார்கள். தங்கள் ஏழ்மையில் அவர்கள் கொடுத்த அன்பு காணிக்கை என்றே கருதி ஏற்றுக்கொண்டேன்.

போதகரின் மனைவி என்னிடம் பனை சார்ந்து பல விஷயங்களைப் அன்று பேசினார்கள். அந்த திருச்சபையின் அங்கத்தினர் ஒருவர் என்னோடு மேலும் ஒரு மணி நேரம் விவாதித்தார். நாங்கள் ஒருபோதும் சீவல் தொழிலாளர்களை வெறுக்கவில்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. போதகர் நிஷாந்தா தனது கடமைகள் அனைத்தும் முடித்து வந்தபின் எனது உரை நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார் ” இந்திய போதகர்  எண்டால் எப்படியென்று நிரூபிச்சிட்டியளே” என்றார்.

அன்று போதகர் நிஷாந்தா என்னோடு அதிக நேரம் செலவிட்டார். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு இலங்கையில் எழுந்துவரும் ஆதரவுகளைக் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து வரும் பல நற்செய்தியாளர்கள் திருச்சபையில் ஏற்படுத்தும் ஆழ்ந்த இறையியல் தடுமாற்றங்கள் குறித்து மிகவும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். இலங்கை திருச்சபையை எப்படி பணம் பறிக்கும் இடமாக இந்திய திருச்சபையினர் பாவிக்கிறார்கள் என்று அவர் சொல்லுகையில், வெட்டிய பனையில் கள்ளெடுக்க துணியும் இழிமனம் கொண்டவர்களே என எண்ணிக்கொண்டேன்.

இலங்கை பயணத்தின் இந்த முதல் வாரம் எனது வாழ்வில் மரக்க முடியாத பயணங்களால் நிரம்பியதாக அமைந்தது. சந்தித்த ஒவ்வொருவரின் வாழ்விலும் என்னால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடவுள் என்னை பயன்படுத்தினார் என்றே உணர்ந்தேன். சொற்களை குவித்து எனது பயணம் நிறைவாக அமைந்தது என்று சொல்லி செல்ல நாண் விழையவில்லை, ஆனால் மனப்பூர்வமாக இவைகளை நான் உணர்ந்தேன். ஒருவேளை இன்னும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் இலங்கை போயிருந்தால் கூட, என்னால் திருச்சபை பயனடைந்திருக்காது மாறாக நான் தான்  பயனடைந்திருப்பேன். ஆனால் இப்பயணம் கடவுள் என்னை முழுமையாக தயார் செய்து அழைத்துச் சென்ற பயணமாக உணர்ந்தேன். என்னை முழுவதும் அற்பணித்து ஒவ்வொன்றையும் செய்யவும், அனைத்துப் புலங்களாலும் இலங்கை பனை சார் வாழ்வை உள்வாங்கவும் எனக்கு பயிற்சி தேவையாயிருந்தது. பனைமரச் சாலை அவ்வகையில் என்னை தயார்படுத்திய ஒரு நிகழ்வு என்றே நான் நம்புகின்றேன்.

போதகர் நிஷாந்தா  மறுநாள் நிகழ்ச்சியைக் குறித்து எனக்கு ஒரு சிறு குறிப்பை அளித்தார். காலை 5. 30 மணிக்கு கிளிநோச்சி நோக்கி பயணம் பிற்பாடு அங்கிருந்து யாழ்பாணம். கண்டிப்பாக எனக்கு செறிவான ஒரு பயணம் அமைய காத்திருக்கிறது என்றே உணர்ந்தேன். எனது எண்ணங்களுக்கும் மேலாய் என்னை வழி நடத்தி எனக்கு எண்ணிறந்த வாய்ப்புகளை வழங்கிய ஆண்டவருக்கு நன்றி கூறி அந்த இரவு கண்ணயர்ந்தேன்.

இரு மன்றாட்டுகள்

பொலியும் வாழ்வை தந்தவரே

ஓலை சிலுவை சுமக்கிறேன்

வேதனை அற்ற சுகமான சுமை என்பதால்

சிலுவையைப் பற்றி நிற்கும் விசுவாசி நான்

சீவல் தொழிலாளி போன்ற பாவியல்ல

அவன் மார்பில் உராயும் பனை வடுக்களை

தலையணையில் புதையும் என் முழங்கால்கள் ஒருபோதும் கவனிக்காது. ஆமேன்

 

காயங்கள் ஏற்ற நாதா

ஓலைகள் சுமந்து செல்லும் பவனிகள் இன்று

உமது பாதைகளில் இருந்து வெகுவாய் விலகிவிட்டன

நீர் சிலுவையிலிருந்து இறங்கி வரவேண்டாம்

இவர்களை மன்னியும் என்று மீண்டும் சொல்லும்

ஆம் அழகாய் நிற்கும் யாரிவர்கள்

தான் அழுக்கடைய  பனை ஏறாதவர்

 

(முதல் பருவம் முடிந்தது. மீண்டும் அடுத்த கலயம் கட்டும் வரை காத்திருக்கவும்)

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 31

ஏப்ரல் 6, 2017

 

திருச்சபையின் பனைமர வேட்கை – 31

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

கள் – திருச்சபையின் கேள்வி

அந்த அமைதியை உடைக்கும்படி போதகர் நிஷாந்தா எழுந்துவந்தார். நாம் ஒரு மாறுபட்ட திருமறை ஆய்வு செய்ய உதவிய போதகருக்கு நன்றி கூறுகிறேன். இப்போது கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேள்விகள் கேட்கலாம் என்றார்கள். சற்று நேர மவுனத்திற்கு பின்பு ஒருவர் எழுந்து “சீவல் தொழிலும் கள்ளும் இலங்கையைப் பொறுத்த அளவில் இணைந்தே இருக்கிறது, இச்சூழலில் திருச்சபை எப்படி அவர்களுடன் இணைய இயலும் என்றார். சிரித்துக்கொண்டே இப்படி கடினமாக எல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது என்றேன். சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.

கள் குடிப்பது ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக நமது மரபில் பார்க்கப்படுவது எவ்வளவு உண்மையோ அது போலவே அது மருத்துவம் சார்ந்தும் பாவிக்கப்படுகிறது  சமையல் இடுபொருளாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆகவே ஒற்றைபடையான எண்ணங்களுடன் கள்ளை நாம் புறந்தள்ளிவிட இயலாது. ஈரோட்டைச் சார்ந்த திரு. நல்லசாமி அவர்கள் கள் இறக்க அனுமதி வேண்டி தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி கள் இறக்குவதும் பருகுவதும் மக்களுக்கு அரசு வழங்கியிருக்கும் உணவு தேடும் உரிமை. கள் போதை பொருளல்ல. நாம் பாவிக்கும் உணவுகள் அனைத்திலும் ஆல்கஹால் இருக்கிறது ஆனால் விகிதாச்சாரம் மட்டுமே மாறுகிறது என்று கூறுகிறார். போதை தரும் வெளிநாட்டு மதுவில் ஆல்கஹாலின் அளவு 42 சதவிகிதமும், கள்ளில் 4.5 சதவிகிதமும் இருக்கிறதாக அவர் கூறுகிறார். அவ்வகையில் கள் ஒரு மென் பானம் என அவர் கூறுகிறார். அவரின் கருத்துக்களை நாம் சற்றே காதுகொடுத்து கேட்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

திருமறை மதுவிற்கு எதிராக இருக்கிறதே, மது ஒருவரின் சிந்தனையை மழுங்கடிக்கும்  தன்மை கொண்டிருக்கிறதே என்றால் ஆமாம். அதனை நாம் மறுக்க இயலாது. திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.(நீதிமொழிகள் 20: 1 திருவிவிலியம்) துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்? திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்; பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும். உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும். “என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய். (நீதிமொழிகள் 23: 29 – 35 திருவிவிலியம்) மேற்கூறிய வகையில் திராட்சை ரச மதுவை விரும்புவோர் அதனால் ஏற்படும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று திருமறை எச்சரிப்பது சரிதான். ஆனால் திருமறை ஒற்றைபடையான நோக்கில் திராட்சை ரச மதுவை அணுகவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

நாசீர் விதிகளாக ஆண்டவர் மோசேயிடம் கூறுவதில் மது சார்ந்த ஒரு பார்வை இருக்கிறதை நாம் காண்கிறோம். “ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்  பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால், திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது. பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.” (எண்ணிக்கை 6 திருவிவிலியம்) இவ்வகையில் நாம் பார்க்கையில் கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒருவர், திராட்சை ரசம் மட்டும் அருந்தலாகாது என்ற விதி அல்ல திராட்சை சார்ந்த எதுவும் உண்ணக்கூடாது என சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். வற்றல் விதை அதன் தோல் எவற்றிலும் போதை இருக்காது. ஆனால் அது அவன் பிரித்து எடுக்கப்பட்டவன் என்ற கூற்றின் ஆழத்தை உணர்த்த முழுவதுமாக இவைகளில் நின்று ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

இயேசு நாசீர் விரதம் இருந்தவர் அல்ல, அவர் வாழ்வில் திராட்சை ரசமும் இருந்தது பல முறை இறந்தவர்களை அவர் உயிரோடு எழுப்பியிருக்கிறார். இயேசு தமது முதல் அற்புதத்தை கூட கானா ஊரில் நடைபெற்ற திருமண வீட்டில் தான் நிகழ்த்துகிறார். திராட்சை ரசம் தீர்ந்த போது அவர் தண்ணீரை ரசமாக மாற்றி தமது முதலாம் அற்புதத்தை நிகழ்த்துகிறார். தம்மை குறித்தே அவர் பகடி செய்துகொள்ளும் திருமறைப்பகுதி ஒன்று இருக்கிறது.  “எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ “அவன் பேய்பிடித்தவன்” என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, “இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11 : 19 திருவிவிலியம்) இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இன்றைய திருச்சபையின் நோக்கில் மிக முக்கிய குற்றச்சாட்டு ஆகும், எனினும் அவர் அதனை ஒரு குற்றமென கொள்ளாமல், குற்ற உணர்வும் அடையாமல் இலகுவாக கடந்து வருகிறார். அவர் குடிகாரர் அல்ல, அவரை அப்படி “புரிந்து வைத்திருந்தனர்”.

பாவிகளுடன் உணவருந்தும் இயேசு

பாவிகளுடன் உணவருந்தும் இயேசு

திருச்சபை இன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டாக” திருமறையில் குடி சார்ந்த எண்ணக்கள் எப்படி இருக்கின்றன என கேட்பதை நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு பதிலை எவரும் சொல்ல இயலாது. அது சூழலைப் பொருத்தது. அடிமைப்பட்டுகிடந்த மக்களும் சிதிலமாகி கிடந்த எருசலேம் நகரும் மீட்படையும் என்பதை ஆண்டவரின் வார்த்தையாக ஏசாயா உரைக்கிறார்  “ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது: உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்: உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள். அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.” (ஏசாயா 62: 8 – 9 திருவிவிலியம்). மகிழ்வின் தருணங்களில் உச்சக்கட்ட வெற்றியைக் குறிப்பிடும்படி திராட்சை ரசம் குறிப்பிடப்பட்டிருக்கிறதை இதன் வாயிலாக நாம் அறிகிறோம்.

ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு; திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு. (சபை உரையாளர்  9: 7 திருவிவிலியம்)  என சபை உரையாளரால் கூறப்படும் சூழலும் “தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.”(1 திமோத்தேயு   5:  திருவிவிலியம்)  என்று பவுலால் அறிவுறுத்தப்படும் சூழலும் வேறு வேறு. அவைகளை நாம் கவனத்துடனேயே கையாள வேண்டும்.

கள்ளும் திராட்சை ரசமும் ஒன்று அல்ல. ஆனால் இரண்டும் இருவேறு பின்னணியங்களில் கிடைக்கும் சற்றேரக்குறைய ஒரே பானமென எண்ணி நாம் நமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்று எண்ணுகிறேன். நமது சமூகத்திலும் போர் வெறி ஊட்டவேண்டி கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது, அதே நேரம் விழாக்களின் போது களியாட்டிற்கென கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருவேறு மன நிலைகளை இவைகள் சுட்டி நிற்கின்றன. தனி மரக் கள், அந்திக்கள் போன்றவைகள் மருத்துவ குணம் நிறைந்தவை என்பது அனுபவத்தில் கண்டவர்கள் கூறும் உண்மையாகும். குறிப்பாக வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளரும் பனை மரத்தின் கள் அப்பகுதிகளில் வாழும் மக்களின் வெப்பத்தை தணிக்கும் ஒன்றாக இருப்பதை நாம் காணலாம். குஜராத்தில் உள்ள பீல் பழங்குடியினர் தமது வீடுகளுக்கு அருகில் இன்றும் ஐந்து முதல் பத்து பனைமரங்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் வாழுமிடத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரியும் அதிக பட்ச வெப்பநிலையாக 47 டிகிரியும் செல்லும். இச்சூழலில் அவர்கள் வெம்மையை தணிக்க கள்ளையே தொல் பழங்காலத்தில் இருந்து பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் கள் இறக்கும் நேரம் கூட ஃபெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தான். ஜூன் மாதம் மழை பெய்யுமட்டும் அவர்கள் தொடர்ந்து கள் இறக்குகிறார்கள். அது ஒவ்வொரு குடும ஆணின் கடமை.

ஆலயத்தில் இருந்து கள்ளிற்கு சாதகமாக போதகர் ஐய்யா பேசுகிறாரே என நீங்கள் நினைக்கலாம். எனக்கு முன்பும் மூன்று தலைமுறையினர் போதகராக இருந்தவர்கலே. எனது தந்தை, எனது தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவும் போதகராக இருந்தவர்கள் தாம். ஆனால் அனைவரது வீட்டிலும்  ஆப்பத்திற்கென கள் வாங்கி பயன் படுத்தப்பட்டது. இது உணவை பதப்படுத்தும் ஒரு முறையாக கையாளப்பட்டது. நாம் வாங்கும் பிளம் கேக் எப்படி மது ஊற்றி செய்யப்படுகிறதோ அது போலவே அன்றும் உணவு தயாரிக்க கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

பிழை எங்கே ஏற்படுகிறது என்பதி நாமே அறிவோம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. பனை மரத்தடியில் அமர்ந்து  காலை முதல் மாலை வரை கள் அருந்தினால் அது எவ்வகையில் ஒருவரை பணி செய்ய அனுமதிக்கும். அவ்விதமான முறைகளை எவரும் எவருக்கும் பரிந்துரை செய்யப்போவது இல்லை.

மேலும், மற்றொரு வகையிலும் நம்மை நாம் சுய பரிசோதனை செய்ய அழைக்கப்படுகிறோம். நேற்று தான் நான் இங்கே வந்தேன். ஆனால் இப்பகுதிகளில் நான் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை சென்றதால் இப்பகுதியைக் குறித்த ஒரு புரிதல் எனக்கு கிடைத்தது. நமது ஆலயத்திலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் பாதையில் 500 அடிக்குள் ஒரு மதுக்கடை இருக்கிறது. நமது அலயத்தின் பின்புறம் 200 அடிக்குள் வேறொரு மதுக்கடை இருக்கிறது. மதுவிற்கு எதிரான மனநிலை கொண்ட நம்மால் அவைகளை குறைந்த பட்சம் இவ்விடங்களில் இருந்து நகர்த்த இயலவில்லை. 200 வருடமான ஒரு வழிபாட்டு தலம் அவ்வகையில் தனது இயலாமையை கூறி நிற்கிறது.

இன்றும் மதுக்கடை வணிகம் என்பது அதன் முன் எவரும் நின்று எதிர்க்க இயலா அளவிற்கு கட்டற்ற பலம் வாய்ந்தவைகளாக இன்று நம்முன் நிற்கின்றன. நாம் எதிர்க்கவேண்டியவைகள் அவைகளே. எளிய பனை தொழிலாளியை நாம் உறிவைப்போம் என்று சொன்னால் அது நமது வீரியம் குறைவுபட்டிருக்கிறது என்பது தான் பொருளே அன்றி நாம் மதுவிற்கு எதிராக நிற்கிறோம் என்று பொருள் தருவது ஆகாது.

பனை மரம் சார்ந்த இன்னும் பல்வேறு பானங்கள் இருக்கையில் கள் தேவையா என்கிற எண்ணம் நம்மில் எஞ்சியிருக்கும்  என்பதை நன் அறிவேன். ஆனால் அதற்கென நாம் அவர்களை ஒதுக்கி வைக்க இயலாது. அவர்களின் பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு மேலதிகமான வாழ்வை அவர்களுக்கு உறுதி செய்யாத வரையில் நாம் அவர்களை பாவிகள் என நியாயம் தீர்க்க இயலாது. ஆண்டவர் ஒரு பொதும் அதனை ஒப்ப மாட்டார். ஏனெனில், இயேசு பாவிகளின் நேசர்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 30

ஏப்ரல் 5, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 30

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

திருச்சபைக்கு குருத்தோலை தந்தவர்கள் 

புதிய ஏற்பாட்டு காலத்தில் பேரீச்சைக் குறித்த சான்றுகள் திருமறையில் அதிகமாக இல்லை தான். ஆனால் முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது. எனது வாசிப்பின் வழியாக புதியேற்பாட்டில் காணப்படும் திருமறை பகுதிகள் யாவும் மிக தீவிரமான ஒரு இறையியல் பார்வையை நோக்கி நம்மை உந்திச் செல்லும் விசையாக காணப்படுகிறது. என்னையே நான் உய்த்து அறிகையில் புதிய ஏற்பாட்டு ஒரு சில வசனங்களுக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கு கொடுக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு காரணம், எனது இறையியல் கல்லூரியில் நான் நிகழ்த்திய மாதிரி வழிபாடுதான். அதற்கென நான் உருவாக்கிய இறையியல் பார்வையை பழைய ஏற்பாட்டுடன் நான் இன்னும் முழுமையாக விரித்து உரைக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.

இயேசுவின் பணி நாம் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் இயங்குகிறதை இத்தேடலில் நான் கண்டுகொண்டேன். குறிப்பாக அவரது பணி பாவிகள் என்று சொல்லப்படுகின்ற விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் வரி தண்டுபவர்களாகிய அரசு பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், நிக்கோதேம் போன்ற சமய தலைவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவர் தம் பணியில் நோயுற்றோர் குணமடைய தன்னை அற்பணித்தார் என பார்க்கிரோம். சமூக வாழ்வில் புறக்கணிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களையும் அவர் அரவணைக்கிறதைப் பார்க்கிறோம், தமது உடல் உழைப்பை செலுத்தி பணி செய்யும் மக்களையும் அவர் தம்மிடத்தில் ஆறுதல் பெற  அழைப்பு விடுக்கிறார்.

எரிகோ என்ற பட்டணம் குறித்து இரண்டு நிகழ்ச்சிகள் புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். ஒன்று நல்ல சமாரியன் உவமையில் எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் வழியில் ஒருவன் கள்ளர் கையில் அகப்படும் நிகழ்ச்சியை இயேசு விவரிக்கையில் அன்றைய எருசலேம் எரிகோ நெடுஞ்சாலையின் காட்சி மனதில் விரிவடைகிறது. வணிகங்கள் நடந்திருப்பதால் தான் சமாரியன் அப்பாதையில் வருகிறான் என்பதும் தெளிவாகிறது. வணிகப்பாதையில் நின்று கொள்ளையடிக்கும் குழுவினர், தனித்து வருபவர்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த் இடமாக  எரிகோ காணப்படுகிறது.

மீண்டும் எரிகோ குறித்து நாம் பார்ப்பது இயேசு சக்கேயு என்ற வரி வசூலிப்பவர் வீட்டிற்குச் செல்லும் நிகழ்ச்சியாகும். இயேசு சக்கேயுவோடு என்ன பேசினார் என திருமறையில் காணப்படவில்லை. ஆனால் அவன் இயேசுவிடம் “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார் (லூக்கா 19 திருவிவிலியம்) அந்த சந்திப்பின் இறுதியில் இயேசு அவனைப் பார்த்து “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (லூக்கா 19: 9 – 10  திருவிவிலியம்) எனக் கூறுகிறார்.

ஒரு சிறு இணைப்பை நாம் இவர்கள் சந்திப்பின் வாயிலாக நம்மால் இணைக்க இயலுமென்றால் வெகு விரைவிலேயே ஒரு கோட்டு சித்திரத்தை நாம் பெற்றுக்கொள்ள இயலும். இயேசு வரி வசூல் எப்படி நடக்கிறது எனப்தைக் குறித்து ஒரு உரையாடலை சகேயுவுடன் நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளதா. ஆம். அவைகள் பலஸ்தீனாவில் உள்ள வரி வசூல் முறைகள், முறைகேடுகள், அவற்றின் அழுத்தம், அவற்றை நடைமுறைப்பாடுத்துவோரின்  உள்ளக்கிடக்கைகள் பொன்றவற்றை சக்கேயு போன்றோரே மிக சிறப்பாக எடுத்துக் கூற இயலும். குறிப்பாக எளிய விவசாயிகள் போன்றோரின் வாழ்வில் அன்றய வரி வசூலிக்கும் முறை எவ்வளவு ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதை இயேசு தனது பயணத்தில் கண்டு அதனை சக்கேயுவுடன் விவாதித்திருக்கலாம். மற்றும் பல தருணங்களில் அவர் வரி வசூலிப்போருடன் இருந்திருக்கிறார் என்பதற்கும்  பல திருமறசி சான்றுகள் இருக்கின்றன.

நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் எருசலேம் நோக்கிய இறுதி பயணத்தைக் குறிப்பிடுகிறது. லெந்து காலத்தின் உச்சக்கட்டம் பாடுகளின் வாரத்தில் துவங்குகிறது. அதன் முக்கிய துவக்கமாக இருப்பது எருசலேம் நோக்கிய இயேசுவின் இறுதி பயணம் தான். அதனை குருத்தோலை ஞாயிறு என்றும் சொல்லுவார்கள். உலகமெங்கும் அனுசரிக்கப்படும் இவ்விழாவிற்கான மையம், பனை அல்லது இயற்கை  சார்ந்த ஒரு வாழ்வியல் என்றால் அது மிகையாகாது.

“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.” (மாற்கு 11: 1 – 2 திருவிவிலியம்) இவ்வசனங்கள் நான்கு நற்செய்திகளில் ஆக பழைமையான பிரதியாகிய மாற்குவில் இடம்பெறுகிறது. முன்னோர்கள் ஊர்களுக்கு பெயரிடுகையில் அவ்வூர்களில் உள்ள சிரப்புகளைக் கொண்டே பெயரிட்டனர் என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் ஒலிவமலை என்னப்படுகிற என்றாலே ஒலிவ மரங்கள் அதிகம் நிற்கும் இடம் என நாம் இலகுவில் புரிந்துகொள்ளலாம். பெத்பெகு என்றால் அத்திப்பழ வீடு என பொருள் படுகிறது. பெத்தானியா என்றால் பேரீச்சைகளின் வீடு என திருமறை அறிஞர்கள் கூறுவார்கள். இம்மூன்று ஊர்களும் சஙமிக்கும் இடத்திற்கு எதிரே உள்ள கிராமத்திற்கு இயேசு தமது சீடர்களை தமது பயணத்திற்கான கழுதையை பெற்றுக்கொள்ள அனுப்பிவிடுகிறதைப் பார்க்கிறோம்.

இவ்வூர்கள் அமைந்திருக்கின்ற தன்மையைப் பார்க்கையில் இவைகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறதைக் நாம் காணலாம். அனைத்து கிராமமும் விவசாயத்தை மையப்படுத்திய கிராமங்களாக அமைந்திருக்கிறதை நாம் காண்கிறோம். ஒலிவமலை ஒலிவ எண்ணை என்று சொல்லகூடிய சிறந்த ஒரு வணிக பொருளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இடமாக இருந்திருக்கலாம். எருசலேமுக்கு அருகில் இருந்ததால் தேவாலயத்திற்கு தேவையான அனைத்து எண்ணைகளும் இங்கிருந்தே பெறப்பட்டிருக்கலாம். அதற்கென உழைக்கும் மக்கள் எவ்வகையிலும் தேவாலயத்தால் உதவிகள் பெற இயலாதபடி கடின வரிகளால் துன்பபட்டிருக்கக் கூடும். அவ்விதமாகவே பெத்பகுவும் அத்தி மரங்களை நம்பி வாழ்ந்த மக்கள் கொண்ட இடமாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் நோக்குகையில் பெத்தானியா குறித்த குறிப்புகள் அங்கே எவ்விதமான மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை தெளிவுற நமக்கு காட்டுகின்றது. பேரீச்சைகள் நிறைந்த அந்த பகுதியில் அதனை நம்பி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதை நாம் காண்கிறோம்.

இயேசு ஏறிய கழுதை அழைத்துக்கொண்டுவரப்பட்ட கிராமத்தின் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் ஓலிவமலை, பெத்பெகு மற்றும் பெத்தானியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல நம்பியிருக்கும் ஒரு கிராமமாக இப்பகுதி விளங்கியிருக்கலாம். எருசலேமால் அவர்கள் சுரண்டப்பட்டிருக்கலாம், ஏரோது கடின வரிகளை அவ்ர்கள் மேல் சுமத்தியிருக்கலாம், இவைகளை தேவாலய பொருப்பிலிருந்த குருக்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆகவே தான் இயேசுவோடு இம்மக்கள் உடன் இணைகின்றனர். “வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.” (மாற்கு 11: 11, திருவிவிலியம்) அவர்களைப் பொறுத்த அளவில் இயேசு தாவீதின் அரசை போன்றவொரு அரசை நிர்ணயித்தால் தமது வரிச்சுமைகள் நீங்கும் என எண்ணியிருக்கலாம்.  இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.  “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.(லூக்கா 19: 41 –  42 திருவிவிலியம் )

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு சென்ற வழியெங்கும் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். சிலர் மரங்களின் கிளைகளையும் சிலர் தங்கள் உடைகளையும் அவர் சென்ற வழிகளில் விரித்தபடி அவரை வாழ்த்தினர்.  இன்நிகழ்ச்சியை தூய யோவான் நற்செய்தியாளர் கூறுகையில், “மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” (யோவான் 13:   திருவிவிலியம்) என ஆர்ப்பரிக்கிறதை காண்கிறோம். இவர்கள் கரங்களில் குருத்தோலைகள் எப்படி கிடைக்கப்பெற்றன? அதனை எடுத்துக்கொடுத்தவர்கள் யார்? கண்டிப்பாக பெத்தானியாவைச் சார்ந்த பேரீச்சை தொழிலாளிகள் மக்கள் இயேசுவை மக்கள் எதிர்கொண்டு போகையில் அதனைப் பிடித்துச் செல்ல அவர்களே உந்துதலாய் இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

குருத்தோலையைப் பிடிக்கையில் அவைகள் சொல்லாமல் சொல்லும் குறியீடுகளாக அமைவதை யோவான் இப்பகுதியில் மறைமுகமாக எடுத்தாள்கிறார். நமது ஊர்களில் திருவிழாகளின் போது குருத்தோலைகளில் தோரணங்களைச் செய்து அலங்கரிப்பது வழக்கம். இவைகள் குறிப்பிடுபவை என்ன? வறண்ட நிலத்தில் நின்று திரட்சியாக தேனைப்போன்ற கனிகளை அளிக்கும் மரம், அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையின் சின்னம் அல்லவா?

அது போலவே புதிய ஓலைகளை குருத்தோலை என்று சொல்லுகிறோம். அவைகள் புதிய ஒருவாழ்வை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை எடுத்துக்கூற வல்லது. மேலும் பழைய ஓலைகள் உதிர்ந்து விழுகையில் குருத்தோலை விண்ணை நோக்கி உயர்ந்து எழும்புகிறது. அது போராடி வெற்றிபெறும் உளவலிமையை சுட்டுகின்றது.. மேலும் வானம் நோக்கி எழுந்து நிற்கும் அதன் கீற்றுகள் படைத்த இறைவனை நோக்கி கூப்பியபடி இருப்பது அதற்கு ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விதமாக பல அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதனால் குருத்தோலை ஒரு முக்கிய படிமமாக இச்சூழலில் அமைகிறது.

இவைகளை நாம் பொருத்திப் பார்க்கையில், இயேசு பேரீச்சை மரம் சார்ந்த தொழிலாளிகளின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளை உணர்ந்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகவே அவர்களுக்காக ஒரு சொல்லும் எடுக்காத ஆன்மீக பீடத்தை அவர் தனது வாழ்வை பணயம் வைத்து முன்னெடுக்கிறார். இறுதியில் அவர் எருசலேம் தேவாலயம் செல்லுகையில் மக்கள் தொழுகைக்காக வரும் இடம் தொழில் கூடமாக மாறிப்போனதை  குறிப்பிட்டு அங்கே கலகம் செய்வதை நாம் பார்க்கிறோம். “கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. ‘;என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார். (மாற்கு 11: 15 – 17, திருவிவிலியம்)

இயேசுவின் மரண தீர்ப்பு கூட ஆன்மீக வாதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் முன்வைத்த எந்த சமய குற்றச்சாட்டுகளும் அவருக்கு இறுதி தீர்ப்பை பெற்றுத்தர இயலவில்லை. ஆனால் மக்களை வரி செலுத்த விடாது கலகம் செய்கிறவர் என்றும் அரசுக்கு எதிரானவர் என்றும் அவரை அரச குற்றம் புரிந்தவராக காண்பிக்க முயற்சிக்கிறார்கள் “இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்;” (லூக்கா 23: 2, திருவிவிலியம்)

இயேசுவின் காலத்தில் பேரீச்சை மரம் ஏறி பயனெடுத்த மக்களின் நிலையில் தான் இன்று நமது பனைத்தொழிலாளிகள்  இருக்கின்றனர். அவர்களை கவனிப்பார் இல்லை. இன்று திருச்சபையும் கூட அவர்களை பெரிதும் பொருட்படுத்துவதில்லை என்பது வேதனையான உண்மை. நமக்கு இரண்டாயிரம் வருடங்களாக குருத்தோலை ஞாயிறு கொண்டாட ஓலைகளை எடுத்து தந்த மக்களுக்கு நாம் செய்த கைமாறு என்ன? அவர்களை எப்போதேனும் நாம் பொருட்படுத்தியிருக்கிறோமா? அவர்களுக்கான ஏதாவது உதவிகளை திருச்சபை இதுநாள் வரை செய்த்திருக்கிறதா? நமது கருணைகள் பல்வேறு தரப்பட்ட மக்களை சென்று சேருகையில் பனைத் தொழிலாளர்கள் மட்டும் திருச்சபையால் தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியா? திருச்சபை அவர்களுக்கென களமிறங்கவேண்டும் என்ற நோக்குடன் உலக அளவில் முதன் முறையாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று எடுக்கும் இம்முயற்சியில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ளுவீர்களா?

பவுல் அடியார் கூடாரம் அமைத்து தமது ஊழியத்தை தொடர்ந்ததாக நாம் பார்க்கிறோம். கூடாரப் பண்டிகைகள் ஈச்சமர ஓலைகளைக் கோன்Dஎ அமைக்கப்பட்டது என்பதையும் நாம் பார்த்தோம், நமது ஊர்களில் முற்காலங்களில் பந்தல்களை முடைந்த ஓலைகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். பவுல் அவ்விதம் செயல்பட்டாரா? அவரது ஊழியத்திற்கு பேரீச்சை தான் உறுதுணையாக இருந்ததா?  உறுதியாக கூற முடியவில்லை, ஓருவேலை அவர் தோல் கூடாரங்களையும் அமைத்திருக்கலாம், ஆனால் அவர் பேரீச்ச ஓலைகளைக் கொண்டு கூடாரம் அமைக்க சம அளவில் வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறதை நாM மறுக்க இயலாது.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே முக்கிய குறிகோளாக இருக்கிறதை நான் அறிவேன். அவ்வகையில் திருச்சபை குருத்தோலைகளை அர்த்தத்துடன் கையாளவேண்டும் என நான் நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். பனை தொழிலாளிகளை திருச்சபை மதித்து அவரளுக்கென செயல்படாத வரைக்கும்  நாம் குருத்தோலைகளை பிடிப்பது வெறும் சடங்காக நின்றுவிடும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பரலோக காட்சியை காண்ட யோவான் அவைகளைக் குறித்து எழுதுகையில், “இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.” “திருவெளிப்பாடு 7 : 9, திருவிவிலியம்) இக்காட்சி உலக மக்கள் அனைவரையும் குருத்தோலை ஒன்றிணைக்கிறது என்பதையும் எத்தேசத்தார் என்றாலும் அவர்கள் இறையரசில் பனையுடன் தொடர்புகொண்டே அமைவார்கள் என்றும் திருமறை தெளிவாக விளக்குகிறது. ஆகவே திருச்சபை பனை நோக்கிய தனது கவனத்தை திருப்புவதும் பனை தொளிலாளர்களுக்காய் களமிறங்குவதும் அவசியம். ஆண்டவர் தாமே நம்மனைவரோடும் இருந்து நமது பணிகள் சிறக்க ஆசியளிப்பாராக.  ஆமென்.

இவைகளைக் கூறி நான் நிறைவு செய்கையில் ஆலயத்தில் ஒரு பெரும் நிசப்தம் இருந்தது. அனைவர் முகங்களும் பேயறைந்தது போல் காணப்பட்டது என்ன ஆகுமோ என்று பதைபதைப்புடன் அங்கே நின்றுகொண்டிருந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 29

ஏப்ரல் 3, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 29

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பழைய ஏற்பாட்டில் பேரீச்சை

இஸ்ரவேலருக்கு ஆண்டவர் வாக்களித்த நாட்டினை கடவுள் மோசேக்கு காண்பிக்கும் பகுதி ஒரு முக்கிய குறிப்பைக் கொண்டுள்ளது. “அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்; மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார். அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'” (இணைச் சட்டம் 34: 1 – 4, திருவிவிலியம்) வாக்களித்த அத்தனை நிலபரப்பிலும் எரிகோ என்ற இடம் மட்டுமே பேரீச்சை மாநகர் என அடைமொழி கொண்டு அழைக்கப்படுகிறது. பேரீச்சைகள் ஒரு முக்கிய வணிக பொருளாகவும், உபரியை சேமிக்கும் அளவிற்கு அது பெரும் வளங்களைக் கொடுத்திருக்கிறது என்பதையுமே எரிகோவில் அமைந்திருந்த கோட்டை நமக்கு விளக்குகிறது. எருசலேம் என்னும் மாநகரே வரலாற்றில் மிகத் தாமதமாக எரிகோவிற்குப் பின் அமைக்கப்படுவது ஏன் என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.

எரிகோ பேரீச்சைகளின் நகரம்

எரிகோ பேரீச்சைகளின் நகரம்

யோசுவா 6 ஆம் அதிகாரம் முழுவதும் நூனின் மகன் யோசுவா எரிகோ பட்டணத்தை வெற்றி பெற்ற கதையைக் கூறுகிறது. எரிகோவின் வீழ்ச்சி என்பது குறித்த முக்கிய ஆவணங்கள், எதுவும் தொல்லியல் சான்றாக கிடைக்கவில்லை. பேரீச்சை நகரம் எப்படி வீழ்ந்திருக்கும்?  எவ்விதமான கோட்டை அது என்பது போன்ற கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றது. ஆனால் அது வளம் மிக்க பகுதியாக தொன்மையான ஊராக இன்றும் காணப்படுகிறது. பனை சார்ந்து தமது வாழ்வை, தொல் மானுடர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக எரிகோ இன்றும் எழுந்து  நிற்கிறதைப் பார்க்கிறோம். எரிகோ குறித்து மற்றதிக தகவல்கள் புதிய ஏற்பாட்டின் காலத்தில் காணலாம்.

பனை சார்ந்து திருமறையில் காணப்படும் மற்றொரு பெண்மணி தெபோராள். அவள் இஸ்ரவேலின் நீதி தலைவியாக இருந்தாள் என்பதுடன் அவள் மட்டுமே இஸ்ரவேலில் எழும்பிய ஒரே பெண் நீதி தலைவர். தெபோராள் என்றால் தேனீ என்று பொருள். இஸ்ரவேல் மக்கள் முடியாட்சிக்கு உட்படுமுன் தங்கள் விடுதலைப் பயணத்தை முடித்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாடு வந்தபோது அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அந்த கடினமான சூழலில்  அவர்களை வழி நடத்தியதில் நீதி தலைவர்கள் பெரும் பங்கு ஆற்றினார்கள். கானான் நாட்டை அவர்கள் கைப்பற்றியபோது யோசுவாவை அடுத்த முக்கிய தலைவியாக தெபோராள் திகழ்கின்றாள்.

தெபோராள் ஒரு ஆலோசகராகவும், போர் செய்பவராகவும், இறைவாக்குரைப்பவராகவும், தலைவியாகவும் சிறந்த பாடல் இயற்றுபவராகவும் காணப்படுகிறார். நீதித்தலைவர்கள் என்ற புத்தகத்தில் 5 ஆம் அதிகாரம் முழுவதும் யாபின் என்ற அரசனை வென்ற அவரது வெற்றி பாடல் காணப்படுகிறது. யாபின் என்ற அரசனுக்கு தொள்ளாயிரம் இருப்பு இரதங்கள் உண்டு என்றும் சீசரா என்ற சிறந்த படைத்தலைவனும் உண்டு எனவும் காண்கிறோம். இதுவே தெபோராளின் வெற்றியின் சிறப்பை எடுத்துக்கூற வல்லது. ஒரு படை இன்றி, ஒரு தேசமாக திரளும் முன்பே தம் மக்களைக் காக்கும் தெபோராள் நமக்கு கடவுளின் ஆச்சரிய கருவியாக இன்றும் தென்படுகிறாள்.

தெபோராளின் தலைமைத்துவத்திற்கான  காரணம் என்ன? அவள் எப்பிராயீம் மலை நாட்டில் பெத்தேல் முதல் ராமா வரைச் செல்லும் பகுதிகளில் உள்ள பேரீச்சை மரத்தின் அடியில் தங்கி இஸ்ரவேலர்களுக்கு நீதி வழங்கிக்கொண்டிருந்தாள் என திருமறை வாயிலாக அறிகிறோம். இன்றும் இந்திய நாட்டில் நீதி வழங்கும் பஞ்சாயத்து போன்றவை மரத்தடியில் நடப்பதை நாம் அறிவோம். குஜராத்தி மக்கள் பரந்து கிளை பரப்பிய ஆலமரத்தின் கீழ் நின்று தங்கள் பொருட்களை விற்பனை செய்ததும் நாம் அறிவோம். மரங்கள் நிழல் தருவனவாக மாத்திரம் அல்ல சில இடங்களை குறிப்பிடும் அளவிற்கு அடையாளம் பெற்றதாகவும் இருக்கிறது. பேரீச்சையின் கீழ் நின்று நீதி விசார ணை செய்த தெபோராள் தேனீ போன்று தனது சமூக மக்களின் வாழ்வில் சேமிப்பை உணர்த்தியிருப்பாள் என நான் நம்புகிறேன்.

பனை மரங்களுக்கும் தேனீக்கும் பெரும் தொடர்பு உண்டு. மிகப்பெரும் மலர் செண்டுகள் உள்ள பனைமரங்களை அல்லது பேரீச்சைகளை தேனீ தேடி வருவது வாடிக்கை என்பது நாம் அறிந்த உண்மை. இஸ்ரவேலின் மற்றொரு நீதித் தலைவனாகிய சிம்சோன் ஒரு இறந்து போன சிங்கத்தின் வாயிலிருந்து தேன் எடுக்கும் காட்சியை நாம் பார்க்கிறோம். ஆகவே பேரீச்சை மரங்களின் அடியில் அவள் இருக்கையில் இஸ்ரவெலரின் வணிகங்களை அவள் தொகுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. நெடுஞ்சாலையில் செல்லும் வணிகர்களின் வணிகம் தடைபடாது இருக்க அவள் ஒரு சிறு படையையும் நடத்தியிருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கிறதைக் காண்கிறோம். ஒருவகையில் தேனீ போன்று பல துறைகளில் அவள் சுறுசுறுப்புடன் செயல்பட்டே தலைமை பொறுப்பினை அடைகிறாள்.

முற்காலங்களில் பயணிகளின் உணவு பட்டியலில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகித்தது. மாத்திரம் அல்ல நாம் கண்ட ஏலிம் என்ற பகுதியில் அனேகம் நீரூற்றுகளும் இருந்ததை நாம் பார்த்தோம். அவ்வகையில் தெபோராள் ஒரு வணிக பாதையின் மையத்தை தனது மதியூகத்தால் வளைத்துப் பிடித்து இஸ்ரவேலின் பொருளாதாரத்தை முன்னகர்த்துகிறாள். மாத்திரம் அல்ல தனது சிறு படையைக்கொண்டும் அவர்களுக்கு பாதுகாவலும் அளிக்கிறாள்.

பேரீச்சையின் கீழ் நீர் அருந்தும் எகிப்திய படம்

பேரீச்சையின் கீழ் நீர் அருந்தும் எகிப்திய படம்

திருப்பாடல்களில் பனை சார்ந்த குறிப்புகள் வெளிப்படையாக அல்லாமல் சற்றே அமைதலாக வருவதை நாம் காண இயலும்.”நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.”(திருப்பாடல் 1 திருவிவிலியம்) “என்றும் பசுமையாய் இருக்கும் மரம்” என்பதை டாக்டர் ஷோபன ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில் அது பேரீச்சையாய் இருக்குமோ என்றார். அது  திருப்பாடலகளில்  காணப்படும்  “நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;” (திருப்பாடல்கள் 92: 12அ) என்பதை உறுதிபடுத்துகிறது.

வருடத்தின் முதல் நாளில் திருச்சபையில் வாசிக்கப்படும் பகுதிகளில் திருப்பாடல்கள் 66 முக்கியத்துவம் வாய்ந்தது.   பழைய திருப்புதலின்படி “வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகின்றீர் உமது பாதைகள் நெய்யாய்ப்பொழிகின்றன” எனவும் “நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.” என்று சுலப வாசிப்பு மொழிபெயர்ப்பிலும் அவ்வசனம் காணப்படுகின்றது. எனக்கு பழைய ஏற்பாட்டினை கற்றுக்கொடுத்த ஆசிரியர் டாக்டர் ஜெயக்குமார் ஜோசப் அவர்கள் சமீபத்தில் என்னை அழைத்தார். அவர் தாம் வாசித்த திருமறைப்பகுதியை எனக்கு அனுப்பி இதனை வாசித்து பார் என்றார். “ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன”.(திருப்பாடல்கள் 65: 11, திருவிவிலியம்) என்ற திருமறைப்பகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதனை நான் தமிழில் மொழிபெயர்க்க முயல்கையில்  “ஆண்டினை உமது நல்ல ஈவுகளால் முடி சூட்டுகின்றீர். மேலும் பனை மரங்கள் பதனீரை சுரக்கின்றன” என்பதாக வருகின்றது. வளமையான என்ற பதத்தை பல்வேறு வகைகளில் மொழிபெயர்க்கையில் பனை மரத்திற்கும் (அல்லது ஈச்சமரத்திற்கும்) ஒரு இடம் திருமறையில் காணக்கிடைப்பது ஆச்சரியமானது தான் இல்லையா?

“திராட்சைக் கொடி வாடிப் போகின்றது; அத்தி மரம் உலர்ந்துபோகின்றது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது. (யோவேல் 1: 12 திருவிவிலியம்) இத்திருமறைப்பகுதி இஸ்ரவேலரின்  ஆழ்ந்த சூழியல் அவதானிப்புகளை சுட்டி நிற்கின்றது. வறட்சி மற்றும் பஞ்ச காலத்தில் எவ்விதத்தில் பயன் தரும் தாவரங்கள் ஒவ்வொன்றாக பட்டுப்போகின்றன என்பதை வெளிப்படுத்தும் இவ்வசனம், பஞ்சத்தை கடந்து வந்த கொடிய நாட்களை நினைவுறுத்துவதுடன், நீண்டகாலம் வறட்சியை சமாளிக்கும் பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரம் ஒரு சிறந்த வறட்சி தாங்கும் தாவரம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.” இந்த நுண்ணிய அவதானிப்பு அவர்கள் வாழ்வில் எதைச் சார்ந்திருக்க வேண்டும் என கற்பித்தது. பேரிலந்தை  வறட்சியின் உச்சக்கட்ட காலத்தில் கிடைக்கும் ஒரே பழமாக இருக்கக்கூடும். ஆனால் பசியாற்றும் பேரீச்சையின் முன்பு அவைகள் எம்மாத்திரம்?

கெருபுகள் மற்றும் பேரீச்சை இவைகள் இணைந்து வரும் திருமறைப்பகுதிகள் அனேகம் இருக்கின்றன. திருமறையில் இவ்விரண்டும் இணைந்து வருவதைப் பார்க்கையில் நமக்கு வேறு பல எண்ணங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பேரீச்சையின் இலைகளைப் பார்க்க சிறகுகளைப்போலவே இருக்கும். கேருபுகளின் சிறகுகளை  அவை ஒத்திருப்பதாக அவர்கள் மனம் எண்ணியிருக்குமோ? குறிப்பாக ஆகார் தண்ணீர் விடாய்த்து தனது மகனை சாகக்கொடுக்கலாம் என்றிருக்கையில் ஒரு தூதன் வந்து அவளுக்கு தண்ணீர் கொடுப்பதாக திருமறைப்பகுதியில் நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.” (தொடக்க் நூல் 21: 19, திருவிவிலியம்) அவ்வகையில் நாம் பார்க்கையில், பேரீச்சைகள் அண்டையில் துரவு காணப்பட்டிருக்குமோ, மயங்கிய சூழலில் ஆகாருக்கு பேரீச்சை தான் கேருபு என தோற்றமளித்ததோ?

இஸ்ரவேலர் அமைத்த ஆசரிப்புக்கூடாரம் மற்றும் சாலோமோனின் ஆலயம் போன்றவைகளில் பேரீச்சை முக்கிய இடம் வகிக்கின்றதை நாம் காண்கிறோம். பல்வெறு சூழல்களில் திருமறை முழுவதும் பேரீச்சைகள் கடவுளின் ஆசியாக நமக்கு முன் நிற்கிறது. இஸ்ரவேலர் அவற்றை தங்கள் சொந்தமான மரமாக சுவீகரித்துக்கொள்ளுகிறார்கள்.

“கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவும், மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும் கோவில் முழுவதும் அமைந்திருந்தன. தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள், பேரீச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.” (எசேக்கியேல் 41:18- 20, திருவிவிலியம்)

கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன. (2 குறிப்பேடுகள் 3: 5 திருவிவிலியம்)

கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள் ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். (1 அரசர் 6 திருவிவிலியம்)

திருநூல் வல்லுநரான எஸ்ரா

திருநூல் வல்லுநரான எஸ்ரா

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து இரண்டு குழுக்களாக திரும்பினர். முதற்குழுவினர் செருபாபேலின் தலைமையில் திரும்பி வந்து இடிபாடுகளாயிருந்த  எருசலேம் தேவாலயத்தைக் கட்டி எழுப்பினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் குழுவினர் எஸ்ராவின் தலைமையில் மீண்டு வந்தனர். எஸ்ரா தாம் ஒரு குருவாக இருந்ததாலும் திருச்சட்ட வல்லுனராக இருந்ததாலும், பழைமையான புனித தோல் சுருள்களைக் கண்டுபிடித்து  அவற்றை மக்கள் முன்னிலையில் வாசிக்கிறார்.

“இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள். அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள். எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது. எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர். (நெகேமியா 8: 13 -18, திருவிவிலியம்)

இவைகள் அனைத்திலும் இஸ்ரவேலின் விடுதலை வாழ்வு சார்ந்த ஒரு நுண்ணிய தொடர்பு பேரீச்சைகளில் காணப்படுவதை நாம் புரிந்துகொள்ளலாம். அவர்கள் வரலாற்றில்  பேரீச்சை தொடர்ந்து அவர்களோடு வெற்றியின் சின்னமாக, ஆன்மீக அடையாளமாக, சமய சடங்குகளின் அங்கமாக, உணவாக, வாழ்விடமாக, திருவிழாவாக வந்துகொண்டிருப்பது ஆச்சரியமில்லை.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 28

ஏப்ரல் 2, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 28

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

தாமார் மற்றும் விடுதலைப் பயணம்

நமது ஆலயத்தின் வாசலின் இருபுறமும்  அழகு பனை மரங்கள் இரண்டு நடப்பட்டிருக்கிறதை நாம் காணலாம். இவைகள் பார்ப்பதற்கு 50 வருடங்களுக்கு முந்தையவைப்போல் காணப்படுகிறது. காலனீய தாக்கத்தில் நாம் எப்படி வீழ்ந்து கிடக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று. இலங்கையில் பனை மரம் மிகுந்திருக்கும்  இடங்களில் திருகோணமலை 4 ஆம் இடத்தில் இருக்கிறது. நமது ஆலய முகப்பில் பயன்  தரும் பனை மரம் காணப்படாது வெறும் அழகு தரும் பனை மரத்தினை ஏன் வைத்திருக்கிறோம். இன்று ஒருவேளை இயேசு பசியுடன் நம் ஆலயத்திற்கு வந்தால் கனிகொடாது அழகுக்காக மட்டுமே நிற்கிற இந்த அழகு பனையை என்ன செய்வார். கிறிஸ்தவமும் இன்று தன்னில் ஒரு அழகை சேர்த்துக்கொள்ளுகிறது, கனி கொடுப்பதையோ மறந்துவிடுகிறது. பூத்த மரம் சீவல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் என்பதாலா?

திருச்சபைகள் இன்று அறுப்பின் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவதை நான் பார்க்கிறேன். ஒருவேளை அறுவடைக்கு எந்த தொடர்பும்  இல்லாத நகரங்களில் கூட திருச்சபைகள் வெகு விமரிசையாக அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுகிறது. மக்கள் அலைந்து திரிந்து தென்னங் குலைகள் நுங்கு மற்றும் சிறந்த உணவு பொருட்களை ஆலயத்தில் கொண்டுவந்து படைக்கிறார்கள். நல்லது தான். ஆனால் விதைக்கவே இல்லையென்று சொன்னால் எப்படி அறுக்க முடியும். சில வேளைகளில் திருச்சபை விதைக்க கற்றுக்கொடுக்காமல் அறுக்க மட்டுமே கற்றுக்கொடுக்கிறதோ என்றே தோன்றுகின்றது. இன்றைய திருச்சபைகளில் காணப்படும் போட்டிகள் பொறமைகளுக்கு அறுவடையை மைய்யப்படுத்தி விதைப்பை மறந்துவிட்ட போதனைகள் தான் காரணம் இல்லையா?

பனை மரம் குறித்து திருமறையில் எழுதப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் நாம் அனைவரும் “நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான்” என்று உடனடியாக பதில் சொல்லுவோம். பேரீட்சை மரத்தினை பனை என மொழிபெயர்த்த இலங்கை சைவ தமிழர் ஆறுமுக நாவலர் அவர்கள் நமது பனையுடன் கூடிய வாழ்வை ஆய்ந்து அறிந்ததனால் மட்டுமே இதனைச் செய்ய முடிந்தது. அறியாமல் செய்த பிழையல்ல, அறிந்தே நமக்கு அவர் விட்டுச்சென்ற பொருள் பொதிந்த மொழியாக்கம் அது. தமிழ் பேசும் இலங்கையிலும் தமிழகத்திலும் பனை மரங்கள் எப்படி மக்கள் வாழ்வில் பயனுள்ளைவைகளாக பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பதை நேரடியாக கண்டதினால் அவர் துணிந்து பனையை இடைச்சொருகிறார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் வேத திருப்புதலின் போது கூட பனை அந்த அளவிற்கு பெரும் பங்கை வறண்ட நிலங்களில் கொடையாக அளித்திருக்கிறது.

பழைய திருப்புதலில் கூட “நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங்கீதம் 92: 12) என்று பார்க்கிறோம். அதனை நாம் வெறுமனே “நீதிமான் பனையைப்போல் செழிப்பான்” என்று கூற காரணம் என்ன? வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:18, பழைய திருப்புதல்), என்ற வசனத்தை மிக முக்கியமென  கருதி, வசனங்களில் பிழை ஏற்படக்கூடாது என எண்ணும் நம் சமூகத்தில் பனை குறித்த வசனம் துண்டுபட்டு கிடப்பது எதனால்? ஏனென்றால் நமது முன்னோர்கள் கேதுருவைப் பார்த்தது இல்லை. அவர்கள் அறிந்தது பனை மரம் ஒன்றே. ஆகவே அந்த வசனத்தை சுருக்கி பயன்படுத்தலானார்கள்.

திருமறையில் வெளிப்படையாக நாம் பார்க்கையில் பனை மரம் பாலஸ்தீனாவில் காணப்படுவதில்லை, ஆனாலும் பனையின் குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை திரளாக நின்றிருப்பதைக் காணமுடிகிறது. திருமறையின் தொடக்க நூலில் ஆரம்பித்து திருமறை எங்கும் விரவி, தகுந்த இடைவெளிகள் விட்டு தொடர்ந்து பனை குறித்த தகவல்கள் இறுதி புத்தகம் மட்டும் வருவது  அவைகள் இஸ்ரவேலரின் வாழ்வில் ஒரு பெரும் இறையியல் உண்மைகளை விட்டுச் சென்றிருக்கிறதை நமக்கு உணர்த்துகிறது. இத்திருமறைப்பகுதிகளை நமது பகுதிகளில் உள்ள பனை சார்ந்த வாழ்வுடன்  ஒப்பிட்டு மேலதிக ஆன்மீக உண்மைகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

தாமார்

தாமார்

திருமறையில் தாமார் என்கிற பெண்ணைக்குறித்து தொடக்கநூல் 38 ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். மரியாள் என்ற பெயருக்கு அடுத்தபடியாக மிக அதிக முறை வரும் பெண்ணின் பெயர் தாமாருடையது. திருமறையில் மட்டும் மூன்று தாமார்கள் வருவதை நாம் காணலாம். தாமார் என்பது பேரீச்சையின் பழம் என்றும், பேரீச்சை மரம் என்றும் பொருள் படும். பேரீச்சை என்னும் பனை குடும்ப தாவரம் மிகவும் அழகுள்ளதாயும் கனிதந்து வளம் ஏற்படுத்துகின்ற ஒன்றாக இஸ்ரவேலர் வாழ்வில் இருந்திருக்கிறதை இதன் வாயிலாக நாம் கண்டுகொள்ளலாம். மெலும் வறண்ட நிலத்தில் செழித்து வளர்ந்து கனிதரும் இம்மரத்தின் பெயரினை தம் குல பெண்களுக்கு வைப்பது தகும் இல்லையா? யூதாவிற்கும் தாமாருக்கும் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறது. இரட்டிப்பான ஆசியை கொண்டவள் எனக் கூறும் வண்ணம் தாமார் இங்கு காட்சியளிகிறார். யுதாவின் சிங்கம் என போற்றப்படுகின்ற இயேசு இவர்களின் வழி தோன்றலாக வருவது கூடுதல் சிறப்பாக அமைகிறது.  இயேசுவோடு பனை சார்ந்த ஒரு தூரத்து உறவு இருக்கிறதை இத்திருமறைப் பகுதி விளக்குகின்றது.

பேரீச்சைகள் குறித்த மிக முக்கியமான தகவல்கள்  விடுதலைப்பயண நூலில் வருகிறதை நாம் காணலாம். இஸ்ரவேலரின் வாழ்வில் அவர்களுக்கும் பேரீச்சை மரத்திற்கும் பெரும் தொடர்புகள் இல்லாதிருந்த வேளையில் (திருமறையில் அதுகுறித்த அதிக குறிப்புகள் இல்லாததினால்) அவர்கள் எகிப்த்திற்கு பஞ்சம் பிழைக்கச் செல்லுகிறார்கள். யோசேப்பால்  அவர்கள் மிகவும் வளமான பகுதியில் குடியேறுகிறார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வில் பேரீச்சையின் கனியை  ருசித்தார்களா என்ற குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால் தங்கள் வாழ்வில், அடிமைப்பட்டுகிடந்தபோது அது அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம்.

ஏலிம்

ஏலிம்

விடுதலைப்பயண நூலில் ஏலிம் என்கிற இடத்தில் இஸ்ரவேல் மக்கள் வந்து தங்கினார்கள் என்கிற குறிப்பு வருகிறது. பாலைவன அலைந்து  திரிதலில், “இவ்விதம் ஒரு இடம் அமைவது அவர்களுக்குள் என்னவிதமான மாற்றம் ஏற்படுத்தும் என சிந்தித்துப் பார்ப்பது நலம் என்றே எண்ணுகிறேன். பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.” (விடுதலைப்பயணம் 15: 27)

எளிய ஒரு வசனம் தான் ஆனால் சுமார் ஆறு லட்சம் ஜனங்கள் பயணிக்கும் வழியில் தங்கி இளைப்பாற இந்த இடம் போதுமானதாயிருந்தது தான் இவ்விடத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. 70 பேரீச்சமரங்கள் என்பது ஒருவேளை திரளான மரங்கள் அங்கே நின்றன என்பதை குறிக்கிறதாக அமைந்திருக்கலாம். திருமறை தோறும் 7 அல்லது 70 போன்ற எண்ணிக்கைகள் முழுமையை குறிக்க பயன்படுத்தியிருக்கிறதை நாம் அறிவோம். தங்கள் அடைமை வாழ்வில் சுவைக்கக் கிடைக்காத ஒரு கனியினை தங்கள் விடுதலை வாழ்வில் அவர்கள் சுவைப்பது விடுதலை என்றால் என்ன என்னும் பேருண்மையை விளக்க வல்லது.

இரண்டாவதாக சூழியல் சார்ந்த மற்றொரு உண்மையையும் இப்பகுதி விளக்குகிறது. அதாவது பேரீச்சைகளின் வேர்பகுதி பனையின் வேரைப்போன்றே சல்லி வேர்களால் ஆனது. இவ்வேர்கள் நிலத்தின் அடியில் சென்று அங்கே ஒரு உயிர் வேலியினை அமைத்துவிடும் வல்லமை பெற்றவைகள். பாலைவனத்தின் விடாய் தீரா அனல் நாக்குகள் பாலை நிலத்தில் காணப்படும்  இன்நீரூற்றுகளின் தண்ணீரை நக்கிப்போடாதபடி இவ்வுயிர்வேலிகள் செயல் படுவதை நாம் காண்கிறோம். நமது ஆறுகள் மற்றும் குளங்களின் அருகில் நிற்கும் பனை மரங்களின் பணி என்ன என்பதையும் இத்திருமறைப்பகுதி நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

மூன்றாவதாக இஸ்ரவேலருடைய வாழ்வில் கூடாரப்பண்டிகை எனும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அப்பண்டிகையின் ஆரம்பம் அவர்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தபோது தங்கிய கூடாரங்களை நினைவுறுத்தும்படி  கொண்டாடப்படுவது. களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய். நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள். உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய். ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும் வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.17 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!(இணைச் சட்டம் 16: 13 – 17, திருவிவிலியம்) என்று இப்பண்டிகைக் குறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்படுகிறது.

தற்கால கூடார பண்டிகை

தற்கால கூடார பண்டிகை

“ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது: ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள். நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள். முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள். ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!” (லேவியர் 23: 33 – 43)

இப்பகுதிகள் பேரீச்சை ஒலைகளின் தேவைகளை இஸ்ரவேல் மக்களின் சடங்குகளில் முதன்மை பெறுவதை உணர்த்துகிறது. இன்றும் பொங்கல் விழாவில் ஓலைகளைக் கொண்டு நாம் தீ மூட்ட துவங்குகிறோமே, மேலும் பல விழாக்களின் போது ஓலைகளால் தோரணங்கள் அமைக்கிறோமே? அது போல கூடரம் அமைக்க பேரீச்சை ஓலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதை இதனால் நாம் அறியலாம். இயேசுவின் காலத்தில் கூட இத்திருவிழா சிறப்புடன் இயங்கியதை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம் “யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.” (யோவான் 7:2. திருவிவிலியம்) மேலும்  இன்று மட்டும் யூதர் அவ்விழாவினை தொடர்ந்து செய்துவருகிறார்கள். “சுக்கோத்” என்று அழைக்கப்படும் அவ்விழாவில் அவர்கள் அமைக்கும் கூடாரம் எவ்வித பொருட்களாலும் வேலியிடப்படலாம் ஆனால் அதன் கூரையானது இயற்கையால் கிடத்த பொருளாலேயே  அமைக்கப்படவேண்டும் என்பது விதி. இன்றும் ஓலைகளை ஒப்பிற்கு கூரையாக அமைத்து தங்கும் வழக்கம் யூதர் மத்தியில் உண்டு.

அடிமைத்தனத்திலிருந்து மீளும் போது அவர்கள் தங்கும்படி இடங்கொடுத்த பேரீச்சைகள் அவர்கள் வாழ்வில் என்று மறக்காத ஒரு உன்னத இடம் பெற்றது. அவர்களின் சடங்குகளிலாகட்டும், அவர்கள் பொருளியலாகட்டும், அவர்தம் ஆன்மீகமாகட்டும், அவரின் இலக்கியங்களாகட்டும், அவருடைய குறியீட்டுபொருட்கள் ஆகட்டும், வாழ்வின் அத்தனை திசைகளிலும் அதன் பின்பு பனைக் குடும்பத்தை சார்ந்த பேரீச்சை தவிர்க்க இயலா இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 27

ஏப்ரல் 1, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 27

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

முதல் கட்டளை

 

வேத ஆராய்ச்சி என்று திருச்சபையில் சொல்லும் தோரும் அது ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் அமைவதையே நான் கண்டிருக்கிறேன். ஆகையினால் எனது வார்த்தைகள் ஒரு மாபரும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பப் போகிறது என்ற அச்சம் என்னுள் இருந்தது. ஆனாலும் கடவுளே எனக்கு உதவி செய்யும் என்ற மன்றாட்டுடன் அவர்களுடன் பேச நான் ஆயத்தமானேன்.

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுவின் திருப்பெயரால் உங்களை இக்கூடுகைக்கு நான் வரவேற்கிறேன். காலை ஆராதனையில் வந்தவர்களில் பெரும்பகுதியினர் இந்த மதிய வேளை திருவசன ஆய்வுக்காக வந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. காலையில் அனேகர் நிறைவுடன் சென்றதை நான் அறிவேன், இப்போதுள்ள நிகழ்ச்சி எப்படியிருக்கும் என்று ஒரு சிறு கதை மூலம் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கிறேன்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனை ஒரு தூதன் அழைத்துச் செல்லுகிறான். செல்லும் வழியில் அவனுக்கு பரலோகம் போகவேண்டுமா  இல்லை நரகம் போகவெண்டுமா என தூதன்  கேட்கிறான். ஏன் இங்கே முன்பே தீர்ப்பு கொடுக்கப்படவில்லையா? என்று அவன் கேட்க, இல்லை நீங்களே பார்த்து முடிவெடுக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்ற புது முறையை தூதன் குறிப்பிடுகிறான். சரி அப்படியானால் நான் நரகத்தைப் பார்க்க முடியுமா என்று மனிதன் கேட்க தூதன் அவனை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுகிறான்.

சாத்தான் தனக்கு கிடைத்த புது நபரை அழைத்துக்கொண்டு நரகத்திற்கு சென்றான். அங்கே மனிதனால் நம்பமுடியாத காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. குடி சூதாட்டம் மற்றும் பல்வேறுவகையான கவர்ச்சிகரமான காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தனது பேராயர், போதகர் உட்பட திருச்சபையின் பெரும்பான்மை அங்கத்தினர்கள் பலர் அங்கே இருப்பதை அறிந்த மனிதன் குழம்பித்தான் போனான். திடீரென ஏதோ நினைத்தவனாக  நான் பரலோகத்தையும் பார்க்கவேண்டுமே என்றான். சாத்தான் கவலையேப் படவில்லை. தாராளமாக என்று கூறி அவனை தூதனிடம் ஒப்படைத்தான்.

பரலோகம் பார்க்க வேண்டும் என்ற உற்சாகத்தில் இருந்த மனிதன் பரலோகம் என்று காண்பிக்கப்பட்ட இடத்தில் மக்கள் பலவித வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு முகம் சுளித்தான். பரலோகம் இளைப்பாறுதலின் இடமில்லையா? இங்கும் வேலை செய்ய சொல்லுகிறார்களே என்று நினைத்துக்கொண்டான். தனது நண்பர்களில் எவரையுமே பரலோகத்தில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் வேறு அவனை வாட்டி எடுத்தது. ஆகவே, தூதனிடம், நான் வந்து இரு இடங்களையும் பார்த்தபோது தான் இங்குள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது ஆகவே, என்னை நரகத்திற்கே அனுப்பிவிடுங்கள் என்று கூறினான்.

தூதனும் அனுமதியளிக்க சாத்தான் மனிதனை நரகத்தின் உள்ளே அழைத்துச் செல்லுகிறான். உள்ளே சென்றவுடன் பளீரென ஒரு சாட்டை சொடுக்கப்படுகிறது, உள்ளே அனலென வெப்பம் தாக்குகிறது. பெரும் பாரம் சுமக்கும் திரளான மக்களுடன் சங்கிலியில் மனிதன் இணைக்கப்படுகிறான். இப்படி மாட்டிக்கொண்டோமே என வேதனையுடன் கண்ணீர் மல்க சாத்தானிடம், சற்று முன்பு நீங்கள் காண்பித்த இடம் இப்படி இல்லையே? இது எவ்வகையில் நியாயம் என்று கேட்க, சாத்தான் வெகு அலட்சியமாக ” சற்று முன் நீங்கள் பார்த்தது எங்கள் விளம்பர அலுவலகம்” என்று பதிலளித்தானாம்.

காலையில் நான் பேசியது போலவே இப்போது  அமையவில்லை என்று சொன்னால் என்னைப் பொருத்தருள வேண்டுகிறேன். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றுடன் இணைந்து இலங்கையில் நான் செய்யும் பணிகளைக் குறித்து திருமறையின் ஒளியில் சில காரியங்களைச் சொல்லவே நான் முற்படுகிறேன். கண்டிப்பாக இவைகள் இதுவரை தாங்கள் கேள்விப்படாதவைகளாகவும் இதுவரை திருச்சபை கவனத்துக்குட்படுத்தாதவைகளாகவும்  இருக்கும் என்று நம்புகிறேன்.

திருமறையை நாம் வாசிக்க துவங்குகையில் கடவுள் உலகத்தைப் படைக்கும் நிகழ்ச்சி காணப்படுகிறது. அந்த திருமறைப்பகுதிகளில் எங்கும் பாவம் என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் பிற்பாடு பவுலின் வார்த்தைகளைக் கொண்டு முதல் பாவம் அல்லது வீழ்ச்சி என்ற இறையியல் கோட்பாடுகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. திருச்சபை இவ்விதமான  இறையியலை இன்னும் மறு பரிசீலனை செய்யாமல் இருப்பது ஆச்சரியமானது. பல வேளைகளில் அதுவே ஆபத்தையும் விளைவிக்கக்கூடியதாக மாற்றிவிடுகிறது.

இவ்விதமாகவே திருமறையின் சாரம் என நாம் எடுத்துக்கொள்ளுவதையும் மறு சீரமைப்பு செய்ய கடமைப்பட்டுள்ளோம். இன்று இயேசுவின் இறுதி கட்டளை மிதமிஞ்சி திருச்சபையில் அழுத்தப்படுகிறது. இயேசுவின் இறுதி கட்டளை பொருள் இழந்ததோ அல்லது அதனைக் குறைத்து மதிப்பிடவோ நான் கூறவில்லை, அதற்கு இணையாக அவர் கூறியவைகள், திருமறை எங்கும் விரவிக்கிடக்கின்றன, அவைகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்தாது அவரது இறுதிக்கட்டளை என்று மத்தேயு நற்செய்தி நூலில் வரும் பகுதியை மட்டும் பிடித்துக்கொள்வோமானால் நாம் இயேசுவின் மொத்த  ஊழியத்தையும் குறைத்து மதிப்பிடுகிறவர்கள் ஆவோம்.

இறுதி கட்டளை என்றால் என்ன? “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்”. (மத்தேயு 28: 18 – 19 திருவிவிலியம்). “அனைத்து அதிகாரம்” என்பதனை மக்கள் எவ்விதம் புரிந்துகொள்ளுகிறார்கள் என்பது சித்திக்கத்தக்கது. பலரைப் பொருத்த அளவில், இயேசுவின் அதிகாரம் என்பது அவர் இந்த உலகத்தைப் படைத்ததால் வரும் “சர்வ வல்லமை” பொருந்திய அவரது தன்மையால் என்று பொருள் படுகிறது. ஆனால் இயேசுவோ தமது ஊழியத்தின் போது இவ்வசனங்களைக் கூறாமல், தனது மரணத்திற்குப் பிறகே இவ்வசனங்களைக் கூறுகிறார். அது ஏன்?

நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் இறுதி கட்டளை அமைந்திருந்தாலும் நான்கு பதிவுகளும் சற்றே கோணங்கள் மாறுபட்டு இருப்பதை அறிகிறோம். குறிப்பாக ஒற்றுமை என்று சொல்லுகையில் இயேசு மரணமடைந்து உயித்தெழுந்தபின்பே இக்கட்டளை அவரது சீடர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே அனைத்து அதிகாரமும் என்று சொல்லும்போது, தம்மை நொறுக்க சித்தமாக்கிய அவரது அற்பணிப்பே அனைத்து அதிகாரங்களையும் அவர் பெற்றிருக்கிறார் என்பதை சுட்டி நிற்கிறது. நம்மை அற்பணிக்க விழையவில்லை என்று சொன்னால் நம்மால் ஒருபோதும்  எந்த அதிகாரத்தியும் எடுத்துக்கொள்ள இயலாது, அப்படி எடுத்துக்கொள்ளும் அதிகாரங்கள் பிறரை அடிபணியவைக்கு அதிகார வெறிபிடித்த மானுட அதிகாரங்கள் மட்டுமே.

“அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்” என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார். (யோவான் 20: 19 – 21  திருவிவிலியம்)

மிகவும் நெகிழ்ச்சியான இந்த சம்பவம் எப்போதும் ஆண்டவரின் இறுதி கட்டளை குறித்து பேசுவோரால் பேசப்படுவதில்லை. சிலுவையில் அவர் இருக்கையில் கூட அவர் தம்மை நிந்தித்த கள்வனை மன்னிக்கிறார். அவரது பணி அவரை கொலை செய்தவர்களையும் மன்னிக்கத் தூண்டியது. அனைவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம்,  அனைவராலும் துன்புறுத்தப்பட்டவருக்கே உரியது என அவர் கூறிச் செல்லுகிறார். “என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார் (யோவான் 16: 33, திருவிவிலியம்)

ஆகவே பொருள் பொதிந்த இயேசுவின் இறுதி கட்டளைக் கூட நமது சுய கவுரவத்தின் பொருட்டே முன்னெடுக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் திருமறையில் காணப்படும் முதல் கட்டளை எவ்விதம் பார்க்கப்படும். அவைகள் பொருட்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதே பதிலாக அமையும் என்பதே வேதனையான உண்மை. இவைகளை நாம் உணர்ந்தே செய்யவில்லை மாறாக ஒரு காலனீய ஆட்சிக்குட்பட்டு நாம் இருக்கையில் காலனீய பார்வையில் திருமறை வாசிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு இது என்று திருமறை அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

ஒரு வேளை இறுதி கட்டளை தான் முக்கியம் எனக் கருதுவோமானால் திருமறையில் காணப்படும் முதல் கட்டளை என்ன என எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். முதல் கட்டளையை நாம் நிறைவேற்றாமல் இறுதி கட்டளை நோக்கி நகர்வது இயேசுவே விரும்பும் ஒன்றாய் இராது என்றே நான் நம்புகிறேன்.

ஏதேன் தோட்டம்

ஏதேன் தோட்டம்

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார் (தொடக்க நூல் 1: 28, திருவிவிலியம்) இவை பார்ப்பதற்கு ஆசி என்றே தோன்றினாலும் சற்றே ஆழ்ந்து நோக்குவது கடவுள் ஏன் இவைகளைக் கூறினார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும்.

“பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்” என்பது பல வேளைகளில் குடும்ப கட்டுப்பாட்டிற்கு எதிரான திருச்சபையின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. ஆனால் கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்பதும் அவர்களை ஏதேன் என்னும் தோட்டத்தில் வைத்தார் என்பதும் தொடக்கநூல் முதல் இரண்டு அதிகாரங்களில் நாம் பார்க்கும் உண்மை. மேலும்  “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.” (தொடக்க நூல் 2: 15)

இவ்விரண்டும் இறைவனின் படைப்பில் மனுக்குலத்தை அவர் இணைக்கிறார் என்பதை நமக்கு விளக்குகிறது. மனிதர் மட்டுமே பலுகி பெருகுபவ ராக அல்ல அவர்கள் அமைந்திருக்கும் தோட்டமே ஆண்டவர் பலுகி பெருகும்படி தான் அமைத்திருக்கிறார். தமது சாயலில் படைக்கப்பட்டதால் “அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்” என்றார். இது மனிதருக்கான ஒரு ஆற்றல் என்பதாக கொள்ளாமல் இறைவனின் படைப்பூக்கத்தின் ஆற்றால் மனிதர் வரமாக பெற்றிருக்கிறார்  என கொள்ளுவோமாயின்  எவ்வித ஆற்றலால் நாம் இவைகளை பேணவேண்டும் என கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

“ஆளட்டும்” என்கிற வார்த்தை காலனியாதிக்கத்தில் எப்படி செயல்பட்டது என்பதை நாம் பார்த்தோம். பிறிதொருவரை அடைக்கி ஆளும், ஒரு எண்ணம் காலனீய எண்ணமே அன்றி ஆண்டவரின் ஆளுகையினை வெளிப்படுத்துவது அன்று. ஆகவே தான் அவரது நிட்திய ஆளுகைக்கு நாம் ஆயத்தமாகவேண்டும் எனச் சொல்லுகையில், எனது அரசு இவ்வுலகத்திற்குரியதல்ல என சொல்லுவதை நாம் கவனிக்க அழைக்கப்படுகிறோம்.

தொடக்க நூல் ஒன்றும் இரண்டும் அதிகாரங்கள் இருவேறு மூலங்களிலிருந்து ஒன்றிணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே வேத ஆய்வாளர்களின் கருத்து. அவ்வகையில் இரண்டாம் அதிகாரம் நமக்கு கூறும் கட்டளை “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.” பண்படுத்தவும் பாதுகாக்கவும் என்னும் வார்த்தைகள் மேலும் தெளிவுகளைத் தருகிறது. இன்று உலக திருச்சபையின் எண்ணத்தில் படைப்பினை பண்படுத்தவும் காக்கவும் எழைக்கப்பட்டிருக்கிறோம் எனும் கருத்து முக்கியமென கருதப்பட்டாலும், உள்ளுர் திருச்சபைகள் இவைகளை “ஆன்மீக” வாழ்விற்கு பொருள் அளிப்பதாக இல்லை என கருதுகிறார்கள். அது திருச்சபையையும் ஆண்டவர் நமக்கு படைத்து கையளித்த இயற்கை எனும் அருங்கொடையையும் நாம் இழக்கும் சூழலுக்கு நம்மைத் தள்ளுகின்றது.

விதைக்கிறவன் உவமை நம்மால் ஒரு அருட்பொழிவு பெற்ற அருட்பணியாளரை நினைவுகூறச்செய்யுமே அன்றி ஒருபோதும் விதைக்கிற விவசாயியை நமது எண்ணத்தில் அவைகள் எழுப்புவதில்லை. நல்ல மேய்ப்பன் என்பவர் இயேசு ஒருவரே என்பவர், திருச்சபையில் ஆடு மாடுகளை வைத்திருப்பவரை இழிவாகவே பார்க்கிறது. எனது வாழ்வில் கிறிஸ்தவ பெயரைக்கொண்ட ஒரே ஒரு குளம் நாகர்கோவிலில் இருந்தது, அதனை பெதஸ்தா குளம் என்பார்கள். நான் சிறுவனாக இருக்கையில் அதைச் சுற்றி இருந்த கிறிஸ்தவ சமூகம் தங்கள் வீட்டு சாக்கடைகளை அதில் விட்டு அதனை நோய் உருவாக்கும் குளமாக மாற்றிவிட்டார்கள். அப்படியே விடுவது சரியாயிராது என்று எண்ணியதால் அந்த குலத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தை கட்டியெழுப்பி அந்த இடத்திற்கே சமாதி கட்டிவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் ஒருவருக்கும் அதனைக்குறித்த கவலை இல்லை. ஆனால் இந்து கோயில்களின் அருகிலுள்ள குளங்கள் இன்றும் பாதுகாகப்படுகிண்றன, அவைகள் அவர்களின் மதச்சடங்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாலேயே இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளன.

இயற்கையோடு நமக்கு ஒரு பிணைப்பு  இருக்கிறது என்றே படைப்பு குறித்த திருமறை வசனங்கள் நமக்கு போதிக்கின்றன. அவைகளை பேணுவது நமது கடமை என்றே திருமறை நமக்கு அறிவுறுத்துகிறது, இன்று நாம் வெகுவாக விலகி வந்துவிட்டோம் என்பது வேதனையான உண்மை. ஆகவே நாம் மீண்டும் கடவுள் நமக்கு பணித்த கட்டளையை செய்ய அழைக்கப்படுகிறோம், சிறிய முயற்சிகள் முதல் உலகளாவிய முயற்சிகள் வரை நாம் அவைகளை முன்னெடுப்பது அவசியமாயிருக்கிறது.

எதைப் பேண வேண்டுமோ அதனைப் பேணாமல் எதனை சொந்தம்கொண்டாடக் கூடாதோ அதனை சொந்தம்கொண்டாடி மகிழ்ந்ததே கீழ்படியாமை என திருவிவிலியம் கூறுகிறது இல்லையா?

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com


%d bloggers like this: